இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் துன்பப்படும் தமிழர்களுக்கு உதவுவதற்கு அனுமதி வழங்க வேண்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்
இதுக்குறித்து இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்த நிலையில். இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும் தமிழக அரசு உதவிகளை வழங்கினால் பிளவேற்படும் என்றும் தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்ப சார்பில் வேண்டுகோளும் வைக்கப்பட்டது
மேலும் தற்போது இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்கிறார்கள். அதோடு சிங்கள மக்கள் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரும் நிலை உருவாகி இருப்பதுடன் அனைவரும் ஒன்றிணைந்து தமது உரிமைகளுக்காகப் போராடுகின்றார்கள். எனவே, ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாகி வரும் போது தமிழ் பேசும் மக்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்குவது இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்திவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்த இலங்கை எம்.பி சுமந்திரன் கருத்து.
தமிழக சட்டசபையில் இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளான இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில். தமிழக அரசின் சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 வகையான மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை வழங்க தீர்மானித்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்ச்ர் தெரிவித்தார். அதற்கு இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட நன்றி. இந்த மனிதாபிமான சைகை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் மற்றும் நாடுகளுக்கு இடையே அரவணைப்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்.
என முதல்வர் தெரிவித்தார்.
கருத்துகள்