முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை அழகர் சித்திரைத் திருவிழாவில் உயிர்ப்பலிக்குக் காரணமான கோவில் நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை கேட்கும் மண்டகப்படிதாரர்கள்.

மதுரை அழகர் சித்திரைத் திருவிழாவில் 


உயிர்ப்பலிக்குக்  காரணமான கோவில் நிர்வாக அலுவலர் மீது  நடவடிக்கை கேட்கும் மண்டகப்படிதாரர்கள்.

கோவில் நிர்வாகத்தின் தவறான திட்டமிடலால் மதுரை சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் பாரம்பரிய மண்டபதாரர்கள்  சங்கம் சார்பில் அதன் தலைவர் முத்துநாயகம், செயலாளர் கோபாலகிருஷ்ணன், உப செயலாளர் ரவி ஆகியோர் சார்பில்  மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்தாண்டு எதிர் சேவை, பூப்பல்லக்கு,வைகையில் அழகர் இறங்குதல் சேவைகளுக்காக 450 மண்டபங்களுக்கு பணம் பெற்று இரசீது வழங்கினர். 68 மண்டபங்களில் அழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளவில்லை. மண்டபங்களில் காத்திருந்த உறவினர்கள், ஊர்க் காரர்கள் அதன் காரணமாக  மனஉளைச்சலடைந்தனர்.


இதனால் காத்திருந்த 2 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத் தில் வைகை ஆற்றுக்கு அழகரை காண திரண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. கோயில் நிர்வாகத்தின் தவறான திட்டமிடலும், நிர்வாகத் திறமையின்மையுமே காரணம்.            ஆனால்  கூட்டம் அதிகமானதை தீர்மானிக்கத் தவறியதே காரணமென கோவில் நிர்வாகம் கூறுவது உண்மையல்ல.

திருவிழா கொடியேற்றிவுடன், குதிரை வாகன ,சேவையை நிறுத்த வேண்டுமென முடிவெடுத்ததாகத் தகவல்





வந்தது. அழகர் கோவிலில் கேட்டதற்கு குதிரைவாகன சேவை வரும் என உத்தரவாதம் அளித்தனர்.

இதுபோன்ற நிகழ்வு கள் இனி நடைபெறாம லும், இத்தவறு செய்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் தெரிவித்துள்ளனர்.   கூடுவதற்கு இடவசதி இருந்ததால், கோரிப்பாளையம் வரை சாலைகளில் உள்ள கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால்  தமுக்கம் மைதானத்தை வணிகக் கட்டிடங்களாக மாற்றிவிட்ட காரணமாக போதிய இடவசதி இல்லாததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது.

இந்த சம்பவங்களை பற்றி மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எட்டிமங்கலம் ஸ்டாலின் கருத்தாக.   "வைகை ஆற்றில் இருக்கையில் ஓரங்களிலும் படிக்கட்டில்லாத தடுப்புச்சுவர் எழுப்பியது மிகப்பெரிய தவறு.

ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் அரசு நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதும் மிகப்பெரும் தவறு.




பக்தர்கள் அனைவரும் சமம் என்ற விகிதத்தில் இனிமேலாவது தமிழக அரசு வி.ஐ.பி.க்களுக்கு பாஸ் வழங்குவது, ஏ.வி. பாலத்தில் கார் பார்க்கிற்கு பாஸ் வழங்குவது, போன்ற நடைமுறைகளை எல்லாம் வரும் காலங்களிலாவது தடை செய்ய வேண்டும். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கள்ளழகரை வைத்து காசு பார்ப்பதை தவிர்த்து விட்டு சேவை செய்ய முன்வர வேண்டும். அதேநேரத்தில் தற்போது அலட்சியமாக நடந்து கொண்ட அரசு அதிகாரிகள் மீது அறநிலையத்துறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.





இதுகுறித்து மதுரை அழகர் கோயில் உதவி ஆணையாளர் அனிதாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்ட போது, அவருடைய செல்போன் தொடர்பு  கிடைக்கவில்லை  என்றே வந்தது. அனிதா அவர்கள் விளக்கமளித்தால், உரிய காரணங்களைப் பதிவு செய்ய முடியும் . காசுக்காக காத்திருந்த கள்ளழகர்:

உயிர்களை பலிவாங்கிய நிகழ்வு அறநிலையத்துறை அலட்சியம் காரணமாக அதன் அலுவலரான  உதவி ஆணையர்  அனிதா தான் பல நிகழ்வுகளுக்கு பொறுப்பு என்ற நிலையில் அவர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளார்.

இந்தியாவில் கும்பமேளாவிற்கு பல லட்சம் பக்தர்கள் கூடி, ஆண்டுதோறும் சுவாமி தரிசனம் செய்வது போல் ஓடிசா மாநிலத்திலுள்ள பூரிஜெகநாதர் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் பல லட்சத்திற்கு மேல் கூடிவது . போல தென்னிந்தியாவில் தமிழகத்தில் சித்ரா பௌர்ணமி அன்று பல நூறு ஆண்டுகளாக  கள்ளழகர் எதிர்சேவை செய்து பக்தர்களுக்கு அருள் தருவது  திருமலை நாயக்கர் காலம் தொட்டு நடை பெறுகிறது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் . இந்தாண்டு சீரும் சிறப்புமாக கள்ளழகர், வைகை ஆற்றில் பக்தர்களுக்கு அருள் தருவதற்கு மாவட்ட நிர்வாகம் பணி காவல்துறை பாதுகாப்பு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் மதுரை அழகர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளராக உள்ள  அனிதா, கமிஷன் பணத்திற்காக ஆசைப்பட்ட காரணமாக பல ஆண்டுகாலமாக பழக்கத்திலிருந்த நடைமுறைகளை மாற்றி தன்னிச்சையாக செயல்பட்டதால் தான் இரண்டு  உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதென பக்தர்கள் தரப்பில் கொதிக்கின்றனர். மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பணி அனுப்பவம் கொண்ட இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் இ ஆ ப



நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

அதாவது கள்ளழகர் கோயிலிலிருந்து குதிரை வாகனத்தில் கிளம்புவதற்கு முன்பு பதினெட்டாம்படி மற்றும் கள்ளந்தரி வழியாக மதுரை வைகை ஆற்றுக்கு வருவது நடைமுறையிலுள்ள வழக்கம். அழகர்கோயில் உதவி ஆணையராக உள்ள  அனிதா குடியிருக்கும் அரசு குடியிருப்பில் வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி நேரத்திற்கு மேல் தன்னுடைய உறவினர்களுக்காக சுவாமியை காக்க வைத்து அனுப்பி வைத்துள்ள விபரம் ஆணையர் அறிந்த நிகழ்வா இல்லையா என்பதே வினா ?

மேலும் சுவாமி வரும் வாகனத்தில் கண்ணாடி ஒன்றும் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்து ஐதீக முறைப்படி தவறான நிகழ்வு. மேலும் உதவி ஆணையர் அனிதாவுக்கு மண்டபப்படி சுவாமி தரிசனம் செய்வதற்கு கோயில் நிர்வாகத்திற்கு செலுத்திய தொகை போக தனியாக கவனித்தவர்களுக்கு மட்டுமே மண்டபப்படியில் சுவாமி தரிசனம் செய்ய அழகர் நின்றார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது இது குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்பு  லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை வர வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.மற்ற மண்டபப்படிகளிளெல்லாம் அழகர் நிற்காமல் நேரடியாக சென்றதால், அங்கு கூடியிருந்த பல லட்சம் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தால் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஜெயலட்சுமி ஆகிய இரண்டு நபர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தனர்.

மேலும் தமுக்கம் மைதானம் இதற்கு முன்பெல்லாம் அரசு பொருட்காட்சி நடைபெறும் இடமாகவும் இருந்தது ஆனால் தற்போது இல்லை.

பல்வேறு ஊழல் மற்றும்  குளறுபடிகள்  குறித்து விசாரித்தால், ''அழகர்மலையிலிருந்து கள்ளழகர் புறப்பட்டது முதல் வைகை ஆற்றில் இறங்கியது வரை, பல குளறுபடிகள்  ஏற்பட்டுள்ளது. நிர்வாகத் திறன் ஆளுமை பண்புகள் கொண்ட நிர்வாகம் இல்லாத, நிலையில் ஊழல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டது தான், உயிரிழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு மூல காரணமென்று குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள். 

 "ஏப்ரல் மாதம்  14 ஆம் தேதி மாலை 4 மணிக்கு, அழகருக்கு அலங்காரம் செய்து முடிந்து கொம்பு சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அழகர் புறப்படும் வாகனத்தை துாக்கும் சீர்பாதங்கள், தங்களுக்கு மானிய நிலம் வேண்டும் எனக் கேட்டு திடீரென கோரிக்கை வைத்து போராட்டம்  நடந்ததாகத் தகவல் கோவில் நிர்வாகப் பொறுப்பு உதவி ஆணையர் அனிதா, சீர்பாதங்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்


அவர்கள் பிடிகொடுக்கவில்லை. கடைசியில் பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 4 மணிக்குப் புறப்பட வேண்டிய கள்ளழகர், 5.30 மணிக்குத் தான் மண்டபத்திலிருந்து புறப்பட்டார். அப்போது, ஒருபக்கமாக வாகனம் துாக்கப்பட்டதால், தடுமாற்றம் ஏற்பட்டது, கள்ளழகர் எதிரே இருக்கும் கண்ணாடியில் கீறல் விழுந்தததை சிலர் அபசகுணமாக பார்த்தனர் 

வழக்கமாக துணை ஆணையர் பங்களா அருகே உள்ள மண்டகப்படியில் சிறிது நேரம் நின்று செல்லும் கள்ளழகரை, 20 நிமிடம் நிற்க வைத்து பூஜைகள் செய்யப்பட்டதனால், தொடர்ச்சியாகத் தடங்கல்கள் மற்றும் தாமதம் ஏற்பட்டது. வரிசையாக அமைக்கப்பட்ட மண்டகப்படிகளைத் தாண்டி, இரவு 8 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமான் கோவிலுக்கு வர வேண்டிய கள்ளழகர், 11 மணிக்குத் தான் காலதாமதமாக வந்து சேர்ந்த நிகழ்வு..


அங்கே நடக்கவேண்டிய அலங்காரமும் காலதாமதமாகவே நடைபெற்றதாக தகவல் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிய மாலையை கள்ளழகருக்கு அணிவிக்க விடாமல் தடுக்கப்பட்டது. உதவி ஆணையர் அனிதா வந்த பின்னர் தான் மாலை அணிவிக்க வேண்டுமென கறாராக காக்கவைத்திருந்தனர். அலங்காரம் முடிந்து வழக்கமாக, 2 மணிக்கு புறப்பட வேண்டிய கள்ளழகர், அதிகாலை 4 மணிக்கு தான் புறப்பட்டார்.

தொடர்ந்து, தல்லாகுளம் பகுதியில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் 3 சேவைகள் தரிசனம் கொடுக்க ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டுமென அதிகாரி ஒருவர் கூறியதாகவும், சில மண்டகப்படியில் எதிர்ப்பு கிளம்பியதால் சில மண்டகப்படிகளுக்குள் கள்ளழகர் செல்லாமல் தவிர்க்கும் விதத்தில் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேரம் குறைவாக இருந்ததால் வழியிலிருந்த 40 மண்டகப்படிகளுக்குள் கள்ளழகர் செல்லவில்லை. ஒவ்வொரு மண்டகப்படிகளிலும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கள்ளழகரை காண காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.

மண்டகப்படிகள் தவிர்க்கப்பட்டதால்  வழக்கமாக மண்டகப்படிகள் காத்திருந்து கள்ளழகரை தரிசிக்கும் பக்தர்கள், வைகை ஆற்றிற்கு வர மாட்டார்கள். இந்தமுறை மண்டகப் படிகள் தவிர்க்கப்பட்டதால், கூடுதலாக இரண்டு லட்சம் பக்தர்கள் கள்ளழகரைக் காண வைகை ஆற்றுக்கு வந்தனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் கூட்டம் வைகை ஆற்றை நோக்கி வந்ததால், காவல்துறை கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தடியடி நடத்தினர்.        அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பரிதாபமாக பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர். மொத்த பக்தர்களும் வைகை ஆற்றில் இறங்கியிருந்தால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கு வாய்ப்புண்டு. "கள்ளழகர் ஆலயத்தை  வைத்து பணம் சுய லாபம் பார்க்க முயன்ற நபர்களாலும், நிர்வாகத்திறன் இல்லாத அதிகாரிகளாலுமே நடக்கக்கூடாத இந்த சம்பவங்கள் நடந்துவிட்டது.

கள்ளழகரே அவர்களுக்கு தண்டனை கொடுப்பார்" என்று வேதனையுடன் சொல் கிறார்கள் பக்தர்கள். ஆணையர் எடுக்கும் நடவடிக்கைகளால் தான் அடுத்த ஆண்டு அமைதியாக பாரம்பரிய முறையில் நடக்கும் இதே நிலை நீடித்தால் ஊழல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு தான் அதிகம். ஆன்மீக சேவை கொண்ட அதிகாரிகள் மட்டுமே பக்தி நெறி மாறாமல் செயல்படுவார்கள். அரசு பணி வந்த பிறகு தன்னை மக்கள் பணியாள் என்ற எண்ணம் மறந்து சர்வாதிகார மனப்பான்மை கொண்ட அதிகாரிகள் கடைசி பணி ஓய்வு காலத்தில் அவதிப்பட்டு சென்றதை  கண்ணால் கண்ட   நமக்கு பல உண்மைகள் புரிகிறது ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளும் நிலை எப்போது என்பதே இங்கு பொது நீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...