அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருக்கோவில்.
திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படுகிறது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றான.இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்.
பாண்டிய மன்னர்கள், விஜயநகர மதுரை நாயக்க மன்னர்கள் திருப்பணிகளைக் கொண்டுள்ளது. "அவ்வழி படரீர் ஆயின், இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் பெருமால் கெடுக்கும் பிலமுண்டு". எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோவிலின் சிறப்புக்களையும் கூறுகிறார். அப்படி உள்ள பெருமை கொண்ட திருக்கோவில் நிர்வாக அதிகாரி ஊழல் பல வழிகளில் வெளிவந்த நிலையில் தற்போது நமது இதழ் இச் செய்தியை ஆதாரங்கள் கொண்டு வெளியிட்ட நிலையில்
இது ஆணையர் குமரகுருபரன் பார்வைக்கு சென்றது அதன் விளைவாக நமது செய்தி வெளியான 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் இ ஆ பஅழகர்கோவிலுக்கு புதிய துணை ஆணையர்/நிர்வாக அதிகாரியாக.மு.ராமசாமியை நியமனம்
செய்து இன்று மே மாதம் 05 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
கருத்துகள்