முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திரப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றிய பிரபலமடையாத வீரர்களை வெளியுலகத்திற்கு எடுத்துக்காட்டும் கண்காட்சிகளும் நிகழ்ச்சிகளும்


சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபலமடையாத வீரர்களை வெளியுலகத்திற்கு எடுத்துக்காட்டும் கண்காட்சிகளும் நிகழ்ச்சிகளும், இந்திய வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கான வரப்பிரசாதமாக விளங்கும்

- நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் திரு டி.வெங்கடேஷ்

சுதந்திரப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றிய பிரபலமடையாத வீரர்களை வெளியுலகத்திற்கு எடுத்துக்காட்டும் கண்காட்சிகளும் நிகழ்ச்சிகளும், நமது சுதந்திரத்திற்குப் பின்னணியில் இருக்கும் வரலாறு மற்றும் தியாகங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கான வரப்பிரசாதமாக விளங்கும் என்று வன பாதுகாவலரும், நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான திரு டி. வெங்கடேஷ் கூறியுள்ளார்.


இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டையும், விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களையும் போற்றும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சென்னை பிரிவு நீலகிரியில் ஏற்பாடு செய்துள்ள புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசுகையில் திரு வெங்கடேஷ் இவ்வாறு தெரிவித்தார். இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை நாம் கொண்டாடும் வேளையில் அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள இது போன்ற கண்காட்சிகள் உதவிகரமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பழங்குடி மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாகவும், மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சகமும் இந்த சமூக மக்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் நீலகிரி பழங்குடி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ். உதயகுமார் தெரிவித்தார். சுதந்திரப்போராட்டத்தில் பழங்குடி மக்களும் தீவிரமாக ஈடுபட்டனர் என்றும், திரு பிர்சா முண்டாவின்  பிறந்தநாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் திரு எஸ். வெங்கடேஸ்வர், இது போன்ற கண்காட்சிகளில் தென்னிந்தியாவைச் சேர்ந்த அதிகம் அறிந்திராத மற்றும் உள்ளூர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறினார். இதே கருப்பொருளில் நாடு முழுவதும் விரைவில் 750 கண்காட்சிகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். விடுதலைப் போராட்ட வீரர்களின் முயற்சியால், சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாட்டில் சீர்திருத்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு மா. அண்ணாதுரை பேசுகையில், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இது போன்ற கண்காட்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுவதாகக் கூறினார். பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கடன்கள் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொண்டு, அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே. காமராஜ் வரவேற்புரையும், கோயம்புத்தூர் கள மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குநர் திருமதி கரீனா பி. தெங்கமம் நன்றியுரையும் வழங்கினார்கள்.

துவக்க விழாவின் போது மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டதுடன், பழங்குடி மக்களுக்கான நலத்திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும்,    மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் சிறப்பு கையேடும் வெளியிடப்பட்டன. மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநர் திரு ஜெயராமன், நீலகிரி ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி பரிமளம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

தோடர்கள், கோட்டர்கள் ஆகிய நீலகிரி பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனங்கள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. யோகா மற்றும் பழங்குடி மக்களின் நல்வாழ்வு குறித்த சிறப்பு அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சியை மே 24, 2022 வரை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...