வாகரை அருகே கார் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து ஒருவர் பலி.
திண்டுக்கல் மாவட்டம் பழனி-தாராபுரம் சாலை வாகரையில் சென்றுகொண்டிருந்த கார் வேகத்தில் சாலை ஓரத்திலிருந்த மின்கம்பத்தில் வேகமாக மோதியதில் கார் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து விபத்தை நேரில் பார்த்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து வருவதற்குள் கார் முழுதும் எரிந்து விட்டது. தூரத்திலிருந்து தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீச்சியடித்த போது காரில் ஒருவர் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்தது தெரிந்தது.இறந்த நபர் பாலப்பபன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் சுரேஷ் என தெரியவந்த நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள்