சமஸ்கிருதத்தில் உறுதிமொழி .
காத்திருப்போர் பட்டியலுக்கு மதுரை மருத்துவக்கல்லூரி டீன் மாற்றம். மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில், கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் 68-வது குழுவாக இணைந்த 250 முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதில். தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், வரிகள் மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆங்கிலத்தில் ஏற்ற உறுதிமொழியில் சமஸ்கிருத வாக்கியங்கள் உட்புகுத்தப்பட்டிருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்னவேலை பணி மாறுதல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதியதாகச் சேரும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவக்கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவருக்கும் இப்போகிரேடிக் உறுதிமொழி ஏற்கும் வழக்கம் அனைத்து மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் தொடங்கிய காலத்திலிருந்து பின்பற்றி வரப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்