முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்வதற்கு பல அரசியல் கட்சிகள் தீவிரம்

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில்,


அடுத்ததாக குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கு ஜூலை மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இச் சூழலில் நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில் 48.9 சதவீத வாக்குகளை பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கொண்டுள்ளது.



காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பிற மாநிலங்களின் கட்சிகள் 51.1 சதவீதம் கொண்டுள்ளன. மொத்த வாக்குகளின் மதிப்பான 10,86,431 ல் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையிலான் வாக்கு வங்கி மதிப்பு 5,25,706. பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகத் தேவைப்படுகிறது.  இப்படி பலம் வாய்ந்த பாரதிய ஜனதா கட்சியை வெல்வதற்கு அகில இந்திய அளவில் புதிய ஒருங்கிணைந்த கூட்டணியை உருவாக்கி, எதிர்க்கட்சிகள் அணைத்தும் ஒரே அணியாகத் திரட்டினால் மட்டுமே அது பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான வலுவான அணியாக இருக்க முடியுமென







தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும் தெலுங்கானா முதல்வருமான டாக்டர் சந்திரசேகர ராவ் கருதுகிறார். நாடு முழுவதுமுள்ள 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதமெழுதியுள்ளார். டெல்லி, கேரளா, தமிழ்நாடு, ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்பு கொண்டு பேசியும் வருகிறார். தமிழ்நாட்டின் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி போன்றோருடன் சோனியா காந்தி தொடர்பு கொண்டிருப்பதாகவும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இவர் திரிணாமுல் காங்., சிவசேனா, மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிகிறது. பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆட்சியிலுள்ள ஆம் ஆத்மி கட்சியுடனும் காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது. வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், பாரதிய ஜனதா கட்சியின் பலம் அதிகமாக உள்ளது. சுமார் 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகத் தேவைப்படுவதால் பாஜக முன்னிறுத்தும் குடியரசு தலைவருக்கான வேட்பாளரே வெற்றிபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.இருந்தாலும்  .பல அரசியல் காரணங்களால் பொது வேட்பாளராக முக்கிய தலைவர் ஒருவர் களம் காணலாம்.நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஜார்கண்ட் மாநில கவர்னர் திரௌபதி மர்மு ஆகியோரில் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவுக்கே குடியரசுத் தலைவராக வாய்ப்புள்ளதாகவும் அவர் போட்டியிட்டால் திமுக ஆதரவளிக்கும் நிலை உள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் மற்றும் 'குஜராத் மேலிடத் தலைவர்கள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை எனக் கூறப்படும் நிலையில் ஆர் எஸ் எஸ் முன் எடுக்கும் நபரே தேர்வாக வாய்ப்புக்கள் உள்ளன மேலும் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் பட்சத்தில், அவருக்கு குடியரசுத் தலைவர் வாய்ப்பு வழங்கி, காங்கிரஸ் கட்சியின் தரப்புக்கு செக் மேட் வைப்பதோடு, முஸ்லீம்களின் ஆதரவையும் பெற முடியுமென இரட்டை கணக்கு போடுகிற பாரதிய ஜனதா கட்சியின் தரப்பு. தற்போது முஸ்லீம்கள் தொடர்பாக பா.ஜ.கவில் சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த