முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஇஅதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை கோட்டாட்சியர் சீல் வைத்தனர்.

அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக் கட்சியின் தொண்டர்கள் நடத்திய வன்முறை காரணமாக, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை கோட்டாட்சியர் சீல் வைத்தனர்.


பலத்த காவல்துறை பாதுகாப்புடன் உடைக்கப்பட்ட கதவுகளைச் சரிசெய்து அஇஅதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அஇஅதிமுக அலுவலகத்தில் 145 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன்படி, அந்த இடத்தில் யாரும் சட்ட விரோதமாகக் கூடக் கூடாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உட்கட்சியின் மோதலால் சென்னை இராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் இன்று மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது.அஇஅதிமுக தலைமை அலுவலகத்தின் இரட்டை வாசலை, வருவாய்த்துறை கோட்டாச்சியர் பூட்டி முத்திரை வைக்கிறார். ஒரு தொண்டரின் குரல் வருகிறது. 



"இத்தனைக்கும் காரணம் நமது கட்சியை இயக்கும் வேறு ஒரு கட்சி பெயர் வந்தது இச் சூழலில் ". “நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா என்பதை மாற்றியதற்கு அஇஅதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுப்பார்கள்” என்று சசிகலா நடராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அஇஅதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் என்னையே ஆதரிக்கின்றனர். இன்று ஒரு கருத்து, நாளை ஒரு கருத்தை நான் பேச மாட்டேன். எல்லாரையும் ஒன்று சேர்த்து ஒரே அஇஅதிமுகவாக இணைந்து வெற்றி பெறுவோம். ஆட்சி அமைப்போம். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு மற்றும் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செய்தியாளர்களுக்கு சசிகலா நடராஜன் கொடுத்த பேட்டியில், "அஇஅதிமுக தொண்டர்கள் நினைப்பவர்கள் தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக முடியும். இதுதான் சட்டம். இதன்படிதான் அஇஅதிமுக இயங்கும்.தொண்டர்கள் இருக்குமிடத்தில் தான் தலைவர்கள் உருவாக வேண்டும். பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, இந்த நியமனம் தவறானது.ஓ.பன்னீர்செல்வம் கட்சித் தலைமை அலுவலகம் வருகிறார் எனக் கேள்விப்பட்ட எடப்பாடி கே.பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் அங்கு குவிந்ததனால் பதற்றமான சூழல் நிலவ கற்கள் கட்டைகளால் மாறி மாறி இருதரப்பு ஆதரவாளர்களும் கடுமையாகத் தாக்கி கொண்டதில் பலருக்கு மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது. மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதால் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருக்கு மணிக்கட்டில் பலத்த காயமேற்பட்டது. இந்த நிலையில் கலவரங்களுக்கு மத்தியிலும் ஜெ.ஜெயலலிதா எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெ.ஜெயலலிதா நின்ற பால்கனியில் உற்சாகமாக தொண்டர்களை பார்த்துக் கையசைத்தார். அதே நேரத்தில் ஆத்திரமடங்காத ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் சுற்றி வைக்கப்பட்டிருந்த எடப்பாடி கே.பழனிச்சாமியின் புகைப்படங்களை கிழித்து அதிமுக அலுவலகத்திற்கு உள்ளே வைத்து தீவைத்துக் கொளுத்தினர்.    

ராயப்பேட்டையில் கட்சி அலுவலகத்தை கைப்பற்றிய நிலையில் ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் 

பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரத்திற்கு தனது பிரச்சார வாகனத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி புறப்பட்டுச் செனறதையடுத்து வழிநெடுகிலும் அவர்களுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்த நேரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என எதிர்பார்த்த நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் புறப்பட்டார். இங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்தது.

இருந்தும் மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம் ரத்தக்கறை படிந்த காருடன் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தார் . முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் வருவதை ஒட்டி அதிமுகவின் வெளிப்புற கேட்டை பூட்டப்பட்டு இருந்த நிலையில் அவற்றை உடைத்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவையும் அடித்து உடைத்தனர். இதையடுத்து புகழேந்தி உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் சென்றார் ஓ.பன்னீர்செல்வம்.













நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா என்பதை மாற்றியதற்கு தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். அஇஅதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்ததை தொண்டர்களும் விரும்பவில்லை. பொதுமக்களும் ரசிக்க மாட்டார்கள். தொண்டர்கள் முடிவு தான் இறுதியானது. அதுதான் வெற்றி பெறும்" என்று கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த அஇஅதிமுக, சசிகலா நடராஜன் தலைமைக்கு எதிராக அஇஅதிமுகவில் தர்மயுத்தம் நடத்தினார். இதையடுத்து அப்போது அஇஅதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா நடராஜன், ஓ.பன்னீர் செல்வம் வசமிருந்த  அஇஅதிமுகவின் பொருளாளர் பதவியை முதலில் பறித்து. திண்டுக்கல் சீனிவாசனை மீண்டும் பொருளாளராகவும்  நியமித்தார்.2016-ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா மறைந்த உடனேயே தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால் சில மாதங்களிலேயே அப்பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை சசிகலா நடராஜன் ஏற்க திட்டமிட்டிருந்தார். அதன்பின்னர் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதியில் அஇஅதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நீக்கம் செய்யப்பட்டார்.







ஆட்சி மாற்றம் ஆன நிலையில் காட்சிகள் மாறின; அஇஅதிமுகவில் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமை உருவானது; அந்த தலைமையுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததனால் அஇஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.  





தற்போது அஇஅதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டதனையடுத்து சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் சிறப்புப்  பொதுக்குழுக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். அந்த பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானம் செல்லுமா என்பதை இனி வருங்காலத்தில் நீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும் என்ற நிலையில் அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்ற இரண்டு நபர்களை நீக்கம் செய்வதாக அறிவித்ததும் எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பில் கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவருடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதும் இறுதி முடிவு சிவில் நீதிமன்றம் தான் முடிவு செய்யும் கடந்த 5 ஆண்டுகளில் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது முறையாக நீக்கப்பட்டுள்ளார்.அஇஅதிமுக வில் நடக்கும்  சண்டையில் எடப்பாடி கே.பழனிச்சாமியின் வெற்றி முழுமையானதாக கொஞ்சநாள் நீடிக்கலாம். ஆனால் இறுதி வெற்றி அவருடையதா இல்லையா என்பதே. 

சிக்கலின் மையப்புள்ளி சின்னம்மா  என்றழைக்கப்படும் சசிகலா நடராஜனின் கொள்ளைகளில் இருந்த சாமர்த்தியம் கூட்டாளிகளைத் தேர்வு செய்வதில் இல்லை. 

அந்தவகையில்  டி.டி.வி.தினகரன் சாமர்த்தியமான நபர். அவரது  தேர்வான பெரியகுளம் ஓ பன்னீர் செல்வம் இன்று வரை தன்னை ஒரு தனித்த ஆளுமையாக வளர்த்துக் கொள்ள முடியாத , ஆதரவற்ற நபராகவே இருக்கிறார். நாளையே இவர் மாறலாம் 


ஆனால் அதேவேளையில் , சொந்த உறவுகளையும் நம்ப முடியாமல், சொந்தப் பணத்தையும் கையாள முடியாமல் , பல கோடிகளுக்கு எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கொடுத்து விட்ட பிறகு சிறை சென்றவர் . அந்தத் தேர்வுக்கு இன்னொரு காரணம் 2001- 2006 , 2011-17 சசிகலா நடராஜன் வரவு கொங்கு பகுதியில் உள்ள பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி கஜானாவில்  நிமிர்ந்து விட்டார் எடப்பாடி கே.பழனிச்சாமி. இப்போதெல்லாம் அவர் யாரிடமும் பனிவதில்லை 




இப்போது கூட எடப்பாடி பிரச்னை ஓ.பன்னீர்செல்வம் போல ‘ அல்ல. அடுத்த குறி சசிகலா நடராஜனை அரசியலை விட்டு முற்றிலுமாக தடயமின்றி அகற்றுவது தான். அப்போதுதானே ‘ அப்பாடா’ என மூச்சுவிட முடியும். அதற்கு உடனிருக்கும் நபர்கள் தான் கே.பி.முனுசாமி எனவே எடப்பாடியின் இறுதி வெற்றி சின்னம்மாவான சசிகலா நடராஜனை அரசியல் ரீதியாக கானாமலாக்குவதே. 

ஆனால் அதுவரை பொதுக்குழு, செயற்குழு, மாவட்டக் கழகங்கள் , தலைமைக்குழுவிற்கு பணம்  போட்டு வளர்க்க வேண்டும். அதை அவர் வேலுமணி, தங்கமணி துணையுடன் செய்து முடிப்பார் அதை மக்கள் மற்றும் அக் கட்சி தொண்டர்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.தற்போது அஇஅ.தி.மு.க., பெருந்தலைகளைச் சுற்றிச் சுழலும் கொலை வழக்குகள்



கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, டாக்டர் கொலை வழக்கு, இலஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரித் துறை சோதனை என, பல முனை தாக்குதல்களால், கொங்கு மண்டல அஇஅ.தி.மு.க., பிரமுகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளதென்பது உண்மை தான்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்துள்ளது; கோயமுத்தூரில் தான் இந்த விசாரணை நடக்கிறது.



அ.இ.அ.தி.மு.க., வர்த்தக அணியின் தலைவர் சஜீவன், மற்றும் சகோதரர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகன், தம்பி மகன் ஆகியோரிடம், தனிப்படைக் காவல்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளதன் தொடர்ச்சியாக, அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், ஆற்று மணல் கடத்தல் அதை அள்ளும் ஒப்பந்ததாரராக இருந்து, அக்கட்சிக்கு முக்கிய நிதி ஆதாரமாக விளங்கிய ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களைத் தவிர்த்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான சேலம் இளங்கோவனையும் விசாரணை வளையத்தில்  கொண்டு வர, காவல்துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.குற்றவாளிகள் கொடுத்துள்ள தகவல்களில், அ.இ.அ.தி.மு.க., முக்கிய புள்ளிகள் சிலருக்கு அப் சம்பவங்களில் நேரடித் தொடர்பிருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை தீவிரமாகும் என்கின்றனர், விபரமறிந்தவர்கள் 

கட்சி தலைமையைக் கைப்பற்றும் நோக்கில் நடக்கும் மோதலில், கோடநாடு சம்பவத்தின் பின்னணி குறித்து, ஒரு தரப்பிலிருந்து பல உண்மைகள் காவல்துறைக்கு கசிந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால், கோயமுத்தூர் சார்ந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க., புள்ளிகள் சிலருக்கு சிக்கல் நெருங்கி விட்டதாகவும், அதில் சிலர் கைதாகலாம் எனவும் பேச்சு உலவ



அதற்கிடையில், கோயமுத்தூரில் தனியார் மருத்துவமனை நொறுக்கப்பட்ட வழக்கும், அதில் தொடர்புடைய டாக்டர் உமாசங்கர் விபத்தில் மரணமடைந்த வழக்கும், மீண்டும் விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

டாக்டர் மரணத்தில் மர்மமிருப்பதாக, அவரின் உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளதுடன், அதில் கோயமுத்தூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க., புள்ளிகளுக்கு நேரடித் தொடர்பிருப்பதாகவும் சந்தேகம் கிளப்பியு நிலையில் இந்த வழக்கில், அ.இஅ.தி.மு.க., புள்ளி ஒருவரின் தொடர்பு குறித்து, வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், கைது நடவடிக்கை பாயுமென்ற தகவலும் தெரிகிறது.

அதற்கிடையில், முன்னால்' அமைச்சர் வேலுமணிக்கு  நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் மற்றும் வேலுமணி மீதான 'டெண்டர்' முறைகேடு வழக்கில் சிக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோர் வீடுகளில், வருமான வரித் துறையின் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றதும் அடங்கும் 

இவர்கள் மீதான ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு விசாரணையும் தீவிரமடைந்திருக்கிறது.இக் காரணமாக, சம்பந்தப்பட்ட அ.இஅ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சிக்கும், அச்சத்துக்கும் உள்ளாகியுள்ளனர். கொலை, கொள்ளை, ஊழல் வழக்குகள், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரித் துறை 'ரெய்டு'கள் என, கொங்கு மண்டல அ.தி.மு.க., புள்ளிகள் மீதான நெருக்கடி, நாளுக்கு நாள் அதிகமாகிறது. அதை கடந்த நிலையில் தங்களை அரசியல் ரீதியாக வல்லவர்களாக மாற்றும் முயற்சியில் முன்னணியாக இருக்கக் காரணம் என மக்களால் கருதப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த