முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருந்து தயாரிப்பு தொழில்துறையினருக்கு அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுரை

இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் உலகச் சந்தையைக் கைப்பற்ற 'அளவில்' இருந்து "மதிப்புக்கு" மாறுவதற்கான நேரம் என மருந்து தயாரிப்பு தொழில்துறையினருக்கு திரு மன்சுக் மாண்டவியா அறிவுரை


உலகளாவிய மருந்துச் சந்தையைப் பிடிக்க 'அளவு' என்பதிலிருந்து "மதிப்பு" என்ற நிலைக்கு மாறவேண்டும் என மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய ரசாயனம், உரத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை தெரிவித்துள்ளார். ஆரா ய்ச்சி, உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து அறிவைக் குவித்து, நமது உலகளாவிய தடத்தை அதிகரிக்கும் அதே வேளையில் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய உற்பத்தியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தும் நமது சொந்த மாதிரிகளை உருவாக்குவதற்கான நேரம் இது என்று அவர் கூறினார். . இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மருந்துத் தொழில்துறையின் முன்னணி நிறுவனங்களை இவ்வாறு கேட்டுக்கொண்டார். இந்தியாவின் பார்மா விஷன் 2047 மற்றும் இந்திய மருந்துத் துறைக்கான எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிப்பதே கூட்டத்தின் நோக்கமாகும். இந்த அமர்வில், இந்தியாவில் மருந்துத் துறையின் தற்போதைய நிலை, கடந்த சில ஆண்டுகளில் அரசு எடுத்த முக்கிய முயற்சிகள் மற்றும் இந்த தொலைநோக்கு பார்வையை இந்தியா உணர உதவும் கூட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அனைத்து துறைகளிலும் தற்சார்பை அடைவதற்கான பிரதமரின் பார்வையை டாக்டர். மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார். வரவிருக்கும் ஆண்டுகளில் மருந்துத் துறையை அதன் வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கு,நம்மிடம்  ஏற்கனவே தேவையான மனிதவளம், வணிக முத்திரை உள்ளது என்றும், இந்திய நிறுவனங்கள் இன்று உலக அளவில் உயர் பதவிகளை கைப்பற்றும் முனைப்பில் உள்ளன என்றும் அவர் கூறினார். இந்தியா அதன் பொதுவான மருந்து உற்பத்தி மற்றும் உலகளாவிய சந்தையில் அளவு பங்கின் அடிப்படையில் "உலகின் மருந்தகம்" என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மதிப்பின் அடிப்படையிலும் முன்னேறி, உலக அளவில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார்.

"உலகமே ஒரு குடும்பம்" என்ற இந்தியாவின் தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில், உலகிற்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில் நமது உள்நாட்டு கோரிக்கைகளுக்கு  எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம் என்று அவர் கூறினார்.  தொற்றுநோய் நெருக்கடியின் போது உலகமே இந்தியாவை எதிர்நோக்கியபோது, உதவிகளை வழங்கி,  இந்தியாவின் பலம் பற்றிய உலகளாவிய பாராட்டுக்கு மத்திய அரசு வழிவகுத்தது. மேலும் இந்த வாய்ப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நாம் இப்போது பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தொழில்துறைக்கு ஸ்திரத்தன்மையை வழங்கும் நீண்ட கால கொள்கைகளின் முக்கியத்துவத்தை டாக்டர் மாண்டவியா அடிக்கோடிட்டுக் காட்டினார். தொழில்துறை நட்புக் கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டு மருந்து நிறுவனங்களை ஊக்குவிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்