முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த நாளில் தமிழகத்தின் முதல்வர் வாழ்த்து

 "அகவை எழுபதிலும் - இலக்கிய வாழ்வில் பொன் விழா ஆண்டிலும் அடியெடுத்து வைக்கும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு என் நெஞ்சுக்கினிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

வளமிக்க இலக்கியங்கள் இன்னும் பல படைத்து, பல்லாண்டு தமிழோடு வாழ்க!" என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இனியவா்களே!

இலக்கியத்தை சுவாசிக்கிறவா்களே! இனிய மாலை வணக்கம்!  கவிப்பேரரசின் பிறந்தநாள் 

இந்த வானத்தின் கீழ் வாழ்க்கையின் சில சதுர மைல்களை எனக்கு அறிமுகப்படுத்திய நித்திய ஆத்மா  வைரமுத்து !

கரிசல் காட்டுப் பூமியில் தமிழ்த்தாய் கண்டெடுத்த  கருப்பு வைரம்!


உலகமெலாம் உலாப்போன  குற்றாலத்து மேகம்!

தேசமெலாம் அடித்த தென்காசிச் சாரல்!

வாா்த்தைக்கு ருசி தந்த வரகவி!

கவிதை வரிகளால் காற்று மண்டலத்தையே இனிப்பாக்கினவர்!

காதல் பாடினாய்  அது இளமையின் தேசிய கீதமானது!

சோகம் பாடினாய்  அது ஆயிரம் கண்ணீருக்கு ஆறுதலானது!

மெல்லிய பிரதேசங்களில்  படுத்திருக்கின்றன  உன் பாடல்கள்!   தலைப்புகள் தந்தன

உன் சரணங்கள்!  பேசும்போது  கம்பன் தன் கல்லறையில் எழுந்து உட்காா்ந்த

"பொன் மாலைப்பொழுது" என்ற இந்தப்பாடல் எப்போது இந்த வாயு மண்டலத்தை வளைத்துப் போட்டதோ அப்போதே வைரமுத்துவின் பெயா் இதயத்தில் எடுக்க முடியாத பிரதேசத்தில் விழுந்துவிட்டது!

அந்த பாடல் பலருக்கு எறிந்த கல்லின் அலைகள் என் இதயக் கூரைகளில் இந்த நிமிஷம்வரை ஒயவில்லை!

அன்று தொடங்கிய ரசிப்பு, லயிப்பு அறுந்துவிடாத நயாகரா அருவிபோல்இன்றும் தொடா்ந்து கொண்டேயிருக்கிறது!

இருபதாம் நூற்றாண்டில் வோ்விட்டு இருபத்தியோராம் நூற்றாண்டில் விழுதுவிட்டு கொண்டிருக்கும் இந்த மகா கவிஞனை கண்டு மலைத்துப்போகிறேன்!

என் கண்ணின் எதிரே மலையாய் நிமிறுகிறவனை,  நதியாய் நடக்கிறவனை,

நட்சத்திரமாய் ஜொலிக்கிறவனைக்  கண்டு வியக்கிறேன்!

நீ பிறந்த தேசம் தண்ணீரில் தொலைந்து இருக்கலாம், ஆனால் உன் தண்ணீா் தேசம்

காலத்தில் நிலைத்து நிற்கும்!  நிகழ்காலத் தமிழின் ,தமிழனின் அடையாளம் !

கலையும், கலைஞா்களும் வற்றிவிடாமல் இருப்பதால்தான் இந்த வறண்ட நூற்றாண்டுகளிலும்

இன்னும் ஈரமிருக்கிறது!  உங்கள் ஊற்றுப்பேனா 

வற்றிவிடாமல் என்றும் எழுதிக் கொண்டேயிருக்கட்டும்!

நோக்கமெல்லாம்  நோபலை நோக்கி இருக்கட்டும்!

உங்கள் உரைநடையும்,கவிதைகளும் இலக்கிய வரலாற்றில் கிழிக்க முடியாத பக்கங்களில் அழிக்க முடியாமல் எழுதப்படும்!

உங்களுக்கு வெற்றிமாலை சூட்டுவதற்கு ஜெயதேவதை புதிய பூச்செடிகளுக்கு நீா் ஊற்றிக் கொண்டிருக்கிறாள்!வடுகப்பட்டி வைரமுத்தே

எங்கள் இலக்கிய உலகின் சொத்தே

எம்தமிழுக்கே அதிசயம் சேர்க்கும் வித்தே

எங்கள் உடலுக்கே உம் கவிதைதான் சத்தே ...

கவியரசும் நீரே! கவிப்பேரரசும் நீரே!

காப்பிய பேரறிஞரும் நீரே!

காப்பியசாம்ராடும் நீரே ....

இந்த நாள்,இனிய நாள்,

ஏன்னென்றால்  இந்நாள அகவை திருநாள் ...தமிழரின் பூச்செண்டும் நீயே! பகைக்கு

தமிழரின் அணுகுண்டும் நீயே!

பொன் தமிழை புடம் போட்டாய்!

கண் தமிழை உலக வீதியில் வடம் போட்டாய்!

பொன்மாலை பொழுதின் பிறப்பு

உன்னால் மொழிக்கு உலக அரங்கில்

சிறப்பு!     தமிழின் பிறந்தநாள்அதன் பெயர் வைரமுத்து...

தமிழ் பாடலின் உச்சம் தொட்டவனுக்கு இன்று பிறந்தநாள்!

தமிழினை தன் பாடல் வரிகளால்

தங்கத் தாம்பாளம் ஏந்தியவனுக்கு இன்று பிறந்தநாள்!

பாமரனையும் பாடவைத்த  நிகழ்காலக் கம்பனிவர்..

தமிழினை மூச்சாகத்  தமிழினைப் பேச்சாக

தமிழினை உலகெங்கும்  கொண்டு சேர்த்ததில்  உங்களுக்கொரு பங்குண்டு!

வைரமுத்துப் பாடலென்றால் அதைக் கேட்பவருக்கும்  மயங்கவைக்கும் ஒரு பாங்குண்டு  அத்துணை போதை...

உங்கள் பாடலில்... எங்கள் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்.... எங்கள் தேசத்துக்கு கிடைத்த தமிழின் பெரும்பாண்மை, எங்கள் தேசியச் சொத்து..    அதன் பிரதிபலிப்பே..

வைரமுத்து! என்ற பலரது வாழ்த்துக்களுடன் நாமும் இணைந்து இதழ் சார்பில் வாழ்த்துக்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த