முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த நாளில் தமிழகத்தின் முதல்வர் வாழ்த்து

 "அகவை எழுபதிலும் - இலக்கிய வாழ்வில் பொன் விழா ஆண்டிலும் அடியெடுத்து வைக்கும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு என் நெஞ்சுக்கினிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

வளமிக்க இலக்கியங்கள் இன்னும் பல படைத்து, பல்லாண்டு தமிழோடு வாழ்க!" என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இனியவா்களே!

இலக்கியத்தை சுவாசிக்கிறவா்களே! இனிய மாலை வணக்கம்!  கவிப்பேரரசின் பிறந்தநாள் 

இந்த வானத்தின் கீழ் வாழ்க்கையின் சில சதுர மைல்களை எனக்கு அறிமுகப்படுத்திய நித்திய ஆத்மா  வைரமுத்து !

கரிசல் காட்டுப் பூமியில் தமிழ்த்தாய் கண்டெடுத்த  கருப்பு வைரம்!


உலகமெலாம் உலாப்போன  குற்றாலத்து மேகம்!

தேசமெலாம் அடித்த தென்காசிச் சாரல்!

வாா்த்தைக்கு ருசி தந்த வரகவி!

கவிதை வரிகளால் காற்று மண்டலத்தையே இனிப்பாக்கினவர்!

காதல் பாடினாய்  அது இளமையின் தேசிய கீதமானது!

சோகம் பாடினாய்  அது ஆயிரம் கண்ணீருக்கு ஆறுதலானது!

மெல்லிய பிரதேசங்களில்  படுத்திருக்கின்றன  உன் பாடல்கள்!   தலைப்புகள் தந்தன

உன் சரணங்கள்!  பேசும்போது  கம்பன் தன் கல்லறையில் எழுந்து உட்காா்ந்த

"பொன் மாலைப்பொழுது" என்ற இந்தப்பாடல் எப்போது இந்த வாயு மண்டலத்தை வளைத்துப் போட்டதோ அப்போதே வைரமுத்துவின் பெயா் இதயத்தில் எடுக்க முடியாத பிரதேசத்தில் விழுந்துவிட்டது!

அந்த பாடல் பலருக்கு எறிந்த கல்லின் அலைகள் என் இதயக் கூரைகளில் இந்த நிமிஷம்வரை ஒயவில்லை!

அன்று தொடங்கிய ரசிப்பு, லயிப்பு அறுந்துவிடாத நயாகரா அருவிபோல்இன்றும் தொடா்ந்து கொண்டேயிருக்கிறது!

இருபதாம் நூற்றாண்டில் வோ்விட்டு இருபத்தியோராம் நூற்றாண்டில் விழுதுவிட்டு கொண்டிருக்கும் இந்த மகா கவிஞனை கண்டு மலைத்துப்போகிறேன்!

என் கண்ணின் எதிரே மலையாய் நிமிறுகிறவனை,  நதியாய் நடக்கிறவனை,

நட்சத்திரமாய் ஜொலிக்கிறவனைக்  கண்டு வியக்கிறேன்!

நீ பிறந்த தேசம் தண்ணீரில் தொலைந்து இருக்கலாம், ஆனால் உன் தண்ணீா் தேசம்

காலத்தில் நிலைத்து நிற்கும்!  நிகழ்காலத் தமிழின் ,தமிழனின் அடையாளம் !

கலையும், கலைஞா்களும் வற்றிவிடாமல் இருப்பதால்தான் இந்த வறண்ட நூற்றாண்டுகளிலும்

இன்னும் ஈரமிருக்கிறது!  உங்கள் ஊற்றுப்பேனா 

வற்றிவிடாமல் என்றும் எழுதிக் கொண்டேயிருக்கட்டும்!

நோக்கமெல்லாம்  நோபலை நோக்கி இருக்கட்டும்!

உங்கள் உரைநடையும்,கவிதைகளும் இலக்கிய வரலாற்றில் கிழிக்க முடியாத பக்கங்களில் அழிக்க முடியாமல் எழுதப்படும்!

உங்களுக்கு வெற்றிமாலை சூட்டுவதற்கு ஜெயதேவதை புதிய பூச்செடிகளுக்கு நீா் ஊற்றிக் கொண்டிருக்கிறாள்!வடுகப்பட்டி வைரமுத்தே

எங்கள் இலக்கிய உலகின் சொத்தே

எம்தமிழுக்கே அதிசயம் சேர்க்கும் வித்தே

எங்கள் உடலுக்கே உம் கவிதைதான் சத்தே ...

கவியரசும் நீரே! கவிப்பேரரசும் நீரே!

காப்பிய பேரறிஞரும் நீரே!

காப்பியசாம்ராடும் நீரே ....

இந்த நாள்,இனிய நாள்,

ஏன்னென்றால்  இந்நாள அகவை திருநாள் ...தமிழரின் பூச்செண்டும் நீயே! பகைக்கு

தமிழரின் அணுகுண்டும் நீயே!

பொன் தமிழை புடம் போட்டாய்!

கண் தமிழை உலக வீதியில் வடம் போட்டாய்!

பொன்மாலை பொழுதின் பிறப்பு

உன்னால் மொழிக்கு உலக அரங்கில்

சிறப்பு!     தமிழின் பிறந்தநாள்அதன் பெயர் வைரமுத்து...

தமிழ் பாடலின் உச்சம் தொட்டவனுக்கு இன்று பிறந்தநாள்!

தமிழினை தன் பாடல் வரிகளால்

தங்கத் தாம்பாளம் ஏந்தியவனுக்கு இன்று பிறந்தநாள்!

பாமரனையும் பாடவைத்த  நிகழ்காலக் கம்பனிவர்..

தமிழினை மூச்சாகத்  தமிழினைப் பேச்சாக

தமிழினை உலகெங்கும்  கொண்டு சேர்த்ததில்  உங்களுக்கொரு பங்குண்டு!

வைரமுத்துப் பாடலென்றால் அதைக் கேட்பவருக்கும்  மயங்கவைக்கும் ஒரு பாங்குண்டு  அத்துணை போதை...

உங்கள் பாடலில்... எங்கள் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்.... எங்கள் தேசத்துக்கு கிடைத்த தமிழின் பெரும்பாண்மை, எங்கள் தேசியச் சொத்து..    அதன் பிரதிபலிப்பே..

வைரமுத்து! என்ற பலரது வாழ்த்துக்களுடன் நாமும் இணைந்து இதழ் சார்பில் வாழ்த்துக்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...