முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் சரமாரி வினா ?

அதிமுக பொதுக்குழு தொடர்பான  வழக்கை விசாரித்து இரண்டு வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய படி.


ஆகஸ்ட் பத்தாம் தேதி நடந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்ட நீதிபதி இன்று   விசாரணையில் சில கேள்விகள் மட்டும் கேட்ட நிலையில். இரு தரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்டன. விரைவில் இரு தரப்பிலிருந்தும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்!   நிரந்தர பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா எனக்கூறி கலைத்துவிட்டு அந்தப் பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வரும் நிலையில் இன்று  விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், உரிய விதிகளைப் பின்பற்றாமல் பொதுக்குழு கூட்டப்பட்டது. 1.5 கோடி தொண்டர்களின் விருப்பத்தை 2600 பேர் செல்லாததாக்கும் வகையில் செயல்பட்டதாகக் கருத்து பதிவு செய்தார்.மேலும் ஐந்து ஆண்டுகள் உள்ள பதவி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அந்த 

இரு பதவிகளும் காலியாக இல்லாமல் எப்படி   பொதுக்குழுவைக் கூட்ட முடியும் மேலும் அதில் யாருக்கு அதிகாரம் உள்ளது  என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதத்தில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டலாம் என விதி உள்ளது. தேர்தல் விதி திருத்தத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிடில் இரு பதவிகளும் காலியாகிவிடும். ஒப்புதல் அளிக்காததால் இருவர் செயல்பட முடியவில்லை எனக் கூறுவது தவறு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவைக் கூட்ட முடியும். மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது கட்சி விதிகளுக்கு விரோதமானது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை, விதிகள் மீறப்பட்டிருப்பது தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படுமென்றார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதத்தில், கட்சி  ஒன்றும் நிறுவனமோ, சொசைட்டியோ அல்ல. கட்சி விதிப்படி பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் கொண்டது. தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டியது தவறில்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறினால், இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொருளாளர் தலைமை கழக நிர்வாகிகள் கட்சியை நிர்வகிக்க வழி வகை செய்கின்றன என்றார்.

அப்போது நீதிபதி, பொதுக்குழு கூட்டம் முறையாக நடத்தப்பட்டதா?  நிரந்தர பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதா எனக்கூறி கலைத்து விட்டு, மீண்டும் அந்தப் பதவியை உருவாக்கியது ஏன் என கேள்விகள் எழுப்பினார்.

அதற்கு சசிகலா இடைக்காலப் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட வழக்கறிஞர் விஜய் நாராயண் தொடர்ந்து , சசிகலா சிறை சென்றதால் அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்ட போது பொதுக்குழு உறுப்பினர்கள் தான் பொதுக்குழுவைக் கூட்டினார்கள். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன என்றார்.

அதற்கு நீதிபதி, பொதுக்குழு ஒப்புதல் பெறாததால் இரண்டு பதவிகளும் காலாவதி என்றால், பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்கான தேர்தலும் செல்லாதா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், கட்சியின் அமைப்பு சட்டம் மற்றும் துணை விதிப்படி தமிழ் மகன் உசேன், அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டாரா எனக் கேள்வியும் எழுப்பினார்

அதற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டுத் தான் தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்றார்.

அதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், தமிழ்மகன் உசேனை முன்மொழியும் நேரத்தில் வெளிநடப்பு செய்ததாகவும், வழி மொழியவில்லை . எனவும் இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் கூறினார்.

பின்னர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம் செல்லும் எனக் கூறினார். தொடர்ந்து சட்ட வாதங்கள் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்... பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா?" என்று கேள்விகளை முன்வைத்தார். இறுதியாக, ``பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாகப் பின்பற்றவில்லை எனத் தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும். நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் கட்சி விதிப்படி நியமிக்கப்பட்டாரா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.