22 ஆண்டுகளில் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்
இவருடன் பீகார் மாநில துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியுடனிருந்த 17 ஆண்டு காலக் கூட்டணியை முறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து தற்போது ஆட்சியமைத்துள்ளார் நிதிஷ் குமார். கூடவே இருந்து குழிபறித்து குழிக்குள் தள்ள முயற்சித்த கட்சியின் சதியிலிருந்து தப்பி
குழிபறித்த குள்ள நரிகள் முகத்தில் கரி பூசிய ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் (வயது 71) பிகார் முதலமைச்சராக எட்டாவது முறையாக இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு எளிய முறையில் பதவி ஏற்றார்.
ராஜ் பவனில் மாநில ஆளுநர் பாகு சௌகான் நிதிஷ் குமாருக்கு பதவி பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
நேற்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்வைச் சந்தித்து ஆதரவு கோரிய நிலையில் மெகா கூட்டணியுடன் பீகார் மாநிலத்தின் முதல் அமைச்சராக நிதிஷ் குமார் பதவி ஏற்றார். அவருடன் தேஜஸ்வி யாதவ் மற்றும் அமைச்சர்களும் பதவி ஏற்ற மகா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன், காங்கிரஸ், இடதுசாரிக் கம்யூனிஸ்ட் மற்றும் சில சுயேச்சைகளும் இடம்பெற்றுனர்.
நிதிஷ் குமார் முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார்.
அப்போது தனிப்பெரும்பான்மைக்கும் தேவையான இடங்களை விட கூடுதலாக 3 இடங்களில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் மீண்டும் மகா கூட்டணியை அமைத்துள்ளார் நிதிஷ் குமார். அந்த வகையில் அவரை அரசியல் சாணக்கியர் என்றே அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.
கருத்துகள்