முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னால் அமைச்சர் வேலுமணி ஊழல் வழக்கில் செப்டம்பர் 14 லவ் தீர்வு கிடைக்குமா

முன்னால் அமைச்சரான வேலுமணிக்கு  சில மூத்த மத்திய அரசு வழக்கறிஞர்கள் வந்து வாதாடுவதால் தான் அரசின் சார்பில். எதிர்ப்பு.

ஊழல் வழக்கில் முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான கூடுதல் ஜொலிஸ்ட்ரெல் ஜெனரல் எஸ்.வி.ராஜுவுக்கு தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பிவி நாகரத்னா தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை வாய்மொழியாகக் கடுமையாக அவதானித்துள்ளது. (DVAC  vs.எஸ்.பி.வேலுமணி  மற்றும் ors) 

நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் தங்களுக்கு நிறைய விஷயங்கள் உள்ளன, ஆனால் திங்கள்கிழமை இந்த வழக்கை அடுத்ததாக விசாரிக்கும் உயர் நீதிமன்றத்தின் முன் அதன் முடிவுக்காகக் காத்திருப்பதாகக் கூறியது.

"என்ன மாதிரியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன? நாங்கள் நிச்சயமாக நிறையச் சொல்ல வேண்டும். சில பெரிய வக்கீல்கள் வந்து வாதிடுகிறார்கள் என்பதற்காக, எந்த முகாந்திரமும் இல்லை பின்பற்றப்பட்ட நடைமுறைகள் உயர்நீதிமன்றத்தைப் பற்றி நிறைய பேசுகின்றன," என்று நீதிபதி ரஸ்தோகி குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை  செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி விசாரிக்கும், உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளின் முடிவு உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள மனுவுக்கு உட்பட்டது. மேலும் இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பியது பெஞ்ச்.

உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊழல் வழக்கு தொடர்பாக வேலுமணியின் ரத்து மனுவை பட்டியலிட மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி) தாக்கல் செய்த மனுவை, பெஞ்ச் விசாரித்தது.

மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான பெஞ்ச் முன் வியாழக்கிழமை இந்த விவகாரம் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கை உரிய பெஞ்ச் முன் குழுவில் உள்ள முதல் வழக்காக நாளை பட்டியலிடுமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்ட பின்னர் நீதிபதி ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. பிரதிவாதிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜரானார்.

இந்த வழக்கில் தமிழக அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) எஸ்.வி.ராஜூ இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜராக தடை விதிக்க உயர்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

தலைமை நீதிபதி பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, வேலுமணி சார்பில் ஆஜராக மத்திய அரசின் அனுமதி இருக்கும் வரை ஏ.எஸ்.ஜி.ராஜு, இந்த வழக்கில் ஆஜராவதைத் தடுக்க முடியாது என்றும் கூறியது.

முந்தைய விசாரணையில், எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த ரத்து மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கவும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம் வாதிட்டார். கடந்த ஆண்டு சென்னை மற்றும் கோயமுத்தூரில் டி.வி.ஏ.சி.யால் தன் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு எப்ஐஆர்களை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி கோரினார்.

2019-ஆம் ஆண்டு, சென்னை மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சிகளின டெண்டர்கள் வழங்கியதில் ஊழல், அதிமுக ஆட்சிக் காலத்தில் வேலுமணி உள்ளிட்டோர் ஈடுபட்டதாக எழுந்த மனுவைத் தொடர்ந்து, அந்த புகார்களை விசாரிக்க காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னியை உயர் நீதிமன்றம் நியமித்தது. அடையாளம் காணக்கூடிய குற்றம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியலாம்.

அதிகாரி 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் அமைச்சருக்கு க்ளீன் சிட் கொடுத்தார், ஜனவரி மாதம் 2020 ஆம் ஆண்டில், ஆரம்ப விசாரணை அறிக்கையை அப்போதைய எடப்பாடி கே.பழனிச்சாமி  தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, மே மாதம் 2021 ஆம் ஆண்டில், டி.வி.ஏ.சி முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இரண்டு எஃப்.ஐ.ஆர்.களைப் பதிவு செய்ததையடுத்து அதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.ஊழல் செய்வதில் சாதனை படைத்தவர் எஸ்.பி.வேலுமணி. இவருக்கு  பாஜக ஆதரவு பரிபூரணமாக இருந்தது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும் என்றாலும், இன்றைக்கு மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலாக உள்ள எஸ்.வி.ராஜி முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரானது அதிர்வை ஏற்படுத்தியதுடன்.

அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.2704 கோடி மதிப்பிலான கட்டுமான பணியில் டெண்டர் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்து இருந்தது.

மேலும், ஒரே ஐபி எண்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இருந்து சகோதர நிறுவனங்களின் பெயர்களில் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதையும் அது குறிப்பிட்டு இருந்தது. அப்படி டெண்டர் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளன. பலநூறு கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளன,  முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காக டெண்டர் விதிமுறைகள் தாராளமாக தளர்த்தித் தரப்பட்டுள்ளது. இதில், பல கட்டங்களில் பெரும் பணம் விளையாடியுள்ளது. தார்ச் சாலை போடுவதில் 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் அதிகமாக நிர்ணயம் செய்து கொடுத்தனர். மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதில் ஊழல், அரசு நிலத்தை ஆக்கிரமித்து அம்மா ஐ.ஏ.எஸ் அகடாமி நடத்திய ஊழல்.. என பல முறைகேடுகளின் பட்டியலை அறப்போர் இயக்கம் விலாவாரியாக  தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்னர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 59 இடங்களில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 11 கிலோவுக்கும் அதிகமான தங்கம், 118 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 34 லட்சம் கிரிப்டோ கரன்ஸி முதலீடு, ரொக்கமாக பல லட்சங்கள் சிக்கின. இவை எல்லாம் அவர் செய்த ஊழல்களுக்கு ஒரு சிறு சிறு துளி தான் ஆனாலும், கம்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட மின்னனு ஆதாரங்களையும் அப்போது கைபற்றினர். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையால் வழக்கும் பதியப்பட்டது.

இதை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் இன்றைக்கு உயர் நீதிமன்றத்தில் ஊழல் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக –  தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக – மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் ஆஜரானதை எப்படிப் புரிந்து கொள்வது? இதற்கு மத்திய அரசு எப்படி அனுமதி கொடுத்தது..? என நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியும், வியப்பும் எழுந்தது.

தமிழக அரசின் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ”இது முறையற்றது. இவ்வாறு எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் ஆஜராவதற்கு மத்திய அரசு தந்துள்ள அனுமதியை ரத்து செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம்” எனவும் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வேலுமணி நாடறிந்த அராஜகமான ஊழல் பேர்வழி! ‘அவர் எப்படியெல்லாம் ஊழல் செய்தார்’ என கோயமுத்தூர் வாசிகளிடம் கேட்டால் கொட்டித் தீர்ப்பார்கள்!

கோயமுத்தூர் மாநகரத்தினுடைய குடிநீர் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுகால ஒப்பந்ததில் கையெழுத்திட்டு கொடுத்தது.

தமிழக உள்ளாட்சி மற்றும் நகராட்சித் துறைகளின் கீழ் உள்ள அலுவலகங்களில் தினசரி  லஞ்சம் வசூலித்து  ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கப்பம் கட்ட வேண்டும் என்ற கறார் உத்தரவுகள்!

பல ஆண்டுகளாக மாநகராட்சிகளில் துப்புரவு பணி செய்த எளிய சுகாதாரப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த லட்சங்களில் லஞ்சம் பெற்றது!

இதை வசூலிக்க மாவட்டந்தோறும் பயணம் செய்து கோடிக்கணக்கில் கப்பத்தொகையை வசூலிப்பதற்கென  பெரும் அடியாள் பட்டாளம்…!

டாஸ்மாக் மதுபானங்களை கள்ள மார்கெட்டில் விற்பனை செய்வது…!

என சட்ட விரோத, சமூக விரோத சாம்ராஜ்யத்தை நடத்தியவர் தான் எஸ்.பி. வேலுமணி!

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், இலஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புள்ள 59 இடங்களில் சோதனை நடத்தி ஓராண்டு ஆகியும், அவரை மாநில அரசு கைது செய்ய முடியாமல் இருந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று,  மத்திய அரசு மூலமாக அவர் செய்து கொண்டிருக்கும் அரசியல்‘லாபி’ என்றும் சொல்லப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலை சார்ந்த நேசத்திற்கும், நெருக்கத்திற்கும் உரியவாரான வேலுமணி,‘சத்ரு சம்கார யாகங்கள் பலவற்றையும் செய்து கொண்டிருக்கிறார் என்பதும் கவனத்திற்கு உரியது.

இலஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கை, வெளியாகியுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பார்த்தால், எஸ்.பி.வேலுமணி செய்திருப்பது சாதாரண ஊழல் இல்லை. பொதுப் பணத்தை அசுர பலத்துடன் ஈவு இரக்கமின்றி ‘ஸ்வாகா’ செய்துள்ளார்!

இப்படிப்பட்ட வேலுமணிக்கு பின்னணியில் சர்வ அதிகாரம் படைத்தவர்கள்  கரிசனத்திற்கு உரியவராக அவர் இருக்கிறாராரோ. என்று மக்கள் பேசும் நிலையில் 

இதற்கு அடையாளமாகத் தான் மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் வேலுமணி சார்பாக ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டதோ… என்ற சந்தேகங்கள் வலுப் பெற்றுள்ளன!  ஊழலுக்கு எதிரான பாஜக அரசில் ஊழலுக்கே இடமில்லை..” என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. எனில் வேலுமணியை காப்பாற்ற மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலே களம் காண்பது ஏன்? என்ற கேள்வியை சமூகத்தில் பலரால் தவிர்க்க முடியவில்லை.

இது குறித்து ஒரு மூத்த சட்ட வல்லுனரிடம் பேசிய போது, ”சட்டப்படி பார்த்தால், இப்படிச் செய்யத் தடையில்லை. ஆனால், தார்மீக ரீதியாக பார்க்கும் போது இது மிகப் பெரிய தவறு. மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலுக்கான வேலையல்ல இது. ஆனால், மத்திய அரசின் அனுசரணை இல்லாமல் அவர் களம் கண்டிருக்க முடியாது. ஒரு வகையில் பாஜக அரசு இதில் அம்பலப்பட்டுவிட்டது என கருதலாம்” என்கிறார். ஆக ஊழல் ஒழிப்பு 200 ரூபாய் லஞ்சம் வாங்கும் நபர்கள் மீது மட்டும் தானா என்று பலரும் பேசுவது ஒரு சிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்பது மட்டும் உறுதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த