முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை விடுதலை செய்ய தமிழக முதல்வர் தலையீடு தேவை. சென்னை பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் வேண்டுகோள்

மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை விடுதலை செய்ய தமிழக முதல்வர் தலையீடு தேவை. சென்னை பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் வேண்டுகோள் 

சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வந்த மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன்(வயது 57) இன்று முற்பகலில் கைது செய்யப்பட்டார்.

அதன் விவரம் வருமாறு:

கடந்த 35 ஆண்டுகளாக தமிழகப் பத்திரிக்கை உலகில் நன்கு அறியப்பட்டவர். 

தீக்கதிர், துக்ளக் போன்ற ஏடுகளில் நீண்ட காலம் எழுதியவர்.  தந்தி தொலைக்காட்சியிலும் சில காலம் முக்கியப் பொறுப்பிலிருந்தார்.

மனதில் பட்டதை அச்சமின்றி சுதந்திரமாக எழுதக்கூடிய பத்திரிகை யாளர். "அறம்" இதழ் என்ற இணைய இதழின் ஆசிரியராக கடந்த மூன்று வருடமாக உள்ளார்.

அந்த இதழின் வாயிலாக மாநில, தேசிய பிரச்சனைகளை தனக்குரித்தான பாணியில் எழுதி வந்தார்.

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்பாவிகள் அனைவரையும் பேட்டி கண்டு உண்மை நிலவரத்தை எழுதினார்.

இவருடைய முயற்சியின் விளைவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் கவனத்திற்கு  பல அப்பாவி இளைஞர்கள் பட்ட துயரங்கள் தெரிய வந்து ஆறுதலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 

 நிவாரணங்களும் கிடைக்க இவருடைய எழுத்துக்கள் காரணமாக இருந்தது.

அதே நேரத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு கண்மூடித்தனமாக ஆதரவாக இருந்த அதிகாரிகள், ஆட்சியாளர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து எழுதிவந்தார்.

இந்தச் சூழலில் இன்று முற்பகலில் சீருடை அணியாக நான்குபேர் அவருடைய வீட்டிற்குள் வந்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.

அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

அவருடைய மனைவி செல்போனையும் வாங்குவதற்கு முயற்சி செய்து உள்ளனர்.

"சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறோம்‌." என்று அவர் மனைவியிடம் சொல்லிவிட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரை செலுத்தி உள்ளதாகவும் 

பத்திரிக்கை உலக நண்பர்கள் தொடர்பு கொண்டு காவல் துறை அதிகாரிகளிடம்  கேட்டபோது "கைது செய்தது, கள்ளக்குறிச்சி காவலர்கள்" என்று தெரிய வந்தது.

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மதவாத சக்திகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எதிராக தொடர்ந்து கடுமையாக  எழுதியும் காட்சி ஊடகங்களில் பேசியும் வந்தார்.

செப்டம்பர் 3 ஆம் தேதி அவருடைய அறம் இதழ் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவும் நூல் வெளியீடும் சென்னை தி.நகர், தக்கர் பாபா வளாகத்தில் நடைபெற்றது. அவரால் மிகவும் நேசிக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை அவ்விழாவில் அழைத்திருந்தார். உடல் ஒத்துழைப்பு தராததால்  அவர் வாழ்த்துக் கூறியிருந்தார்.

எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என்ற நிலையைக் கடந்து சமூகத்திற்காகச் செயல்படவும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் சாவித்திரி கண்ணன்.

தமிழகம் முழுவதும் பயணித்து தமிழக விவசாயம், விவசாயிகள் நிலைமை

ஆகியவற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியுள்ளார்.

தன் ஆய்வின் போது, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் பெருக்கத்திற்கு உணவு முறை சீர் கெட்டுப்போனது தான் என்பதை அறிந்து,

பாரம்பரிய உணவுகள் பழக்கத்திற்கு வரவேண்டும் என்று பாடுபட்டு வந்தார். அவர் எழுதிய "நோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள்"

என்ற நூல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தன் மனைவியுடன் சேர்ந்து பாரம்பரிய உணவு வகைகளை சுவையாக சமைத்து 

பல அரங்குகளில் காட்சியும் படுத்திக் காட்டி, இதை பழக்கத்திற்கு கொண்டு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

ஏழை, எளிய, பாட்டாளி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மது தமிழ் நாட்டில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் எழுத்திலும் செயலிலும் பணியாற்றி வந்தார்.

மகாகவி பாரதியார் அறச்சீற்றத்தை பின்பற்றி  வந்த சாவித்திரி கண்ணன் மகாகவி பாரதியார் நினைவு நாளான இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அறம் இணைய இதழ் மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் கடந்த 35 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வள்ளலார் வாழ்வியலை பின்பற்றி வருபவர். அவருடைய எளிமையும் வெளிப்படைத்தன்மையையும்  அறியாத மூத்த பத்திரிகையாளர்கள் சென்னையில் இருக்க முடியாது.

இவர்  கைது செய்யப்பட்டு , கையாளப்பட்ட விதம் மூத்த பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.!         காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை விடுதலை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உடனடி உத்தரவிட வேண்டும். என் சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயளாலர் திரு.ச.விமலேஷ்வரன் மற்றும் பல்வேறு முன்னனிப் பத்திரிகைகளில் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் பலர் இக் கோரிக்கையை முதல்வரிடம் முன் வைத்துள்ளார். இன்று காலை (11.09.22) சென்னையிலுள்ள அவருடைய இல்லத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை விசாரணை என்ற பெயரில் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான செய்திகளை தனது அறம் ஆன்லைன் இணையதளத்தில் சாவித்ரி கண்ணன் தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில், அம்மாவட்ட காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

சமீபத்தில், கள்ளக்குறிச்சி வழக்கு தொடர்பாக டிஜிட்டல் ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என்ற வகையில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்ததும், அதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களை கண்காணிக்க சிறப்புப் பிரிவை தமிழ்நாடு காவல்துறை உருவாக்கியதும் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இது பத்திரிகையாளர்களைப் பயமுறுத்தும் நடவடிக்கை என்றும், பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்றும் பத்திரிகையாளர் அமைப்புகளும், பல மூத்த பத்திரிகையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், பாத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கள்ளக்குறிச்சி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பது, அதிகாரத்தை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்யாம விடாமல் தடுக்கும் நடவடிக்கை என்பதுடன் அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகும் என்று  மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் சார்பில் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஆகவே, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலார்கள் மையமும் வலியுறுத்துகிறது. 

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே தலையிட்டு பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை உடனே விடுதலை செய்யவும், இனி இதுபோல் பத்திரிகையாளர்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே சென்னை பிரஸ் கிளப் சார்பில் கோரிக்கையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த