விடுதலைப்போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
விடுதலைப்போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“மாமனிதர் வ உ சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம் சூட்டுகிறேன். விடுதலைப் போராட்டத்திற்கு அவரின் மகத்தான பங்களிப்புக்கு நாடு கடன்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கும் தற்சார்பாக மாறுவதற்கும் அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார். அவரது சிந்தனைகள் நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.”வ.உ.சிதம்பரனாரின் 151வதுபிறந்த தினவிழா கொண்டாட்டங்கள்
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-ன் 151-வது பிறந்த தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் திரு. தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப, அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து திரு.பிமல்குமார் ஜா, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய துணைத் தலைவர்,துறைமுக சபை உறுப்பினர்கள், துறைமுக தலைவர்கள்;மற்றும் ஊழியர்கள் அன்னார் திருவுருவ சிலைக்கு மலர்துவி மரியாதை செலுத்தினார்கள்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் திரு. தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப, அவர்கள் தன்னுடைய சிறப்புரையில்;, வ.உ.சி. அவர்களின் தேசப்பற்று பற்றியும், அவர் சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்து, அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆரம்பிக்க எடுத்த விடாமுயற்சிகளையும், சுதந்திர போராட்டத்திற்காக அன்னார் பட்ட துயரங்களையும் எடுத்துரைத்தார்கள்.
மேலும் அவர் வருங்கால சந்ததியினர் சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சியின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்ளுவதற்காக துறைமுக வளாகத்திலுள்ள தகவல் நிலையத்தில் வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கக் கூடிய படங்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் துறைமுக வளாகத்தில் அமைய பெற உள்ள கடற்சார் பாரம்பரிய அருகாட்சியகத்திற்கு ‘வ.உ.சி அருகாட்சியகம்’ என்று பெயரிடப்படும் என்று கூறினார்.
சிறப்புப் பேச்சாளாராக பங்கேற்ற டாக்டர் எஸ். ஜாக்சன், உதவி பேராசிரியர், வ.உ.சிதம்பரனார் கல்லூரி அவர்கள்,சுப்பிரமணிய சிவா மற்றும் பாரதியார் ஆகியோருடன் வ.உ.சியின் நட்பு குறித்து விவரமாக எடுத்துரைத்தார்;.
திரு. பிமல்குமார் ஜா,வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் துணை தலைவர், தனது உரையில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி எடுத்துக் கூறினார்.
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும், திரு கிரிராஜ் ரத்தோடு, செயலர், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் அவர்கள் வரவேற்றுப் பேசினார்கள். விழாக் குழுவினரால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. துறைமுக ஆணையத் தலைவர் அவர்கள் கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இறுதியாக திரு. கே. ரவிக் குமார், தலைமை பொறியாளர், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.
மேற்சொன்ன தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
கருத்துகள்