இங்கிலாந்து நாட்டின் இராணி எலிசபெத் (வயது96) காலமானார்.
அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் லண்டன் பக்கிங்ஹாம் மாளிகையில் வசித்து வந்த நிலையில், இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வமான மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். பலனின்றி ராணி எலிசபெத் காலமானார். இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரசை ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார். ராணியின் பதவிக்காலத்தில் இங்கிலாந்து மூன்று பெண் பிரதமர்களைக் கண்டிருக்கிறது.
லண்டன் இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ஆம் ஆண்டு மரணமடைந்த போது, அந்த நாட்டின் ராணியானவர், அவரது மகள் எலிசபெத். இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகிற அவருக்கு அப்போது வயது 25. அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில், அதன் பின்னர் சர் ஆண்டனி ஈடன் தொடங்கி போரிஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார். இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவிற்கு இந்தியப் பிரதமர் இரங்கல். இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“சமகாலத்தில் வாழ்ந்த ஒரு வலிமையான தலைவரான இரண்டாம் எலிசபெத் ராணியை என்றென்றும் நமது நினைவுகளில் நிலைத்திருப்பார். தேசத்திற்கும், மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைவராக திகழ்ந்தவர். பொது வாழ்வில் கண்ணியத்தையும், நேர்மையையும் கடைபிடித்தவர். அவருடைய மறைவால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது சிந்தனைகள் அவருடைய குடும்பம் மற்றும் பிரிட்டன்வாழ் மக்களோடு இருக்கின்றன”.
”கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் என்னுடைய பிரிட்டன் பயணங்களின்போது இரண்டாம் எலிசபெத் ராணியை சந்தித்த அனுபவங்கள் எளிதில் மறக்க இயலாது. அவருடைய வரவேற்பையும், அன்பையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. எங்களது ஒரு சந்திப்பில் அவருடைய திருமணத்திற்கு மகாத்மா காந்தி பரிசாக வழங்கிய கைக்குட்டையை என்னிடம் காண்பித்தார். அந்த நிகழ்வை என்றென்றும் நினைவில் கொள்வேன்.
தற்போது இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரசை ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார். அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15-வது பிரதமர் என்ற சிறப்பை லிஸ் டிரஸ் பெறுகிறார். ராணி இரண்டாம் எலிசபெத் பதவிக்காலத்தில் இங்கிலாந்து 3 பெண் பிரதமர்களைக் கண்டிருக்கிறது. அவர்கள், மார்கரெட் தாட்சர், தெரசா மே, லிஸ் டிரஸ் ஆவார்கள். 11 பிரதமர்கள் கன்சர்வேடிவ் கட்சியினர். 4 பேர் மட்டுமே தொழிற்கட்சியை சேர்ந்தவர்கள்.கடந்த இரண்டு தினங்களாக ராணியில் உடல் நிலை ஆரோக்கியமாக இல்லாமல் உடல் நிலை மோசமாகி வந்ததால், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ராணியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவரது நான்கு பிள்ளைகளும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்திருப்பதாகவும், இதுகுறித்து நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் அளித்திருப்பதாகவும் லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் ட்விட்டர் பக்கத்தில், “இந்த நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வரும் செய்தியால் நாடு முழுவதும் ஆழ்ந்த கவலையில் உள்ளது. எனது எண்ணங்கள், நாட்டு மக்களின் எண்ணங்கள் அனைத்தும் அரசு குடும்பத்துடன் துணை நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார். இராணியார் இங்கிலாந்தின் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கத் திட்டம் தீட்டி மக்கள் எதிர்ப்பு மூலம் கைவிடப்பட்ட மருதநாயகம்
இந்தியாவில் சுதந்திரப்போராட்ட காலத்தில் முதல் துரோகி, மற்றும் மக்கள் விரோதியான கான்சாகிப் என்ற மதுரை பனையூர் மருதநாயகம் பிள்ளையின் வரலாறு கொண்ட மருதநாயகம் படப்பிடிப்பு துவங்க பூஜை நிகழ்ச்சிக்கு படத்தை பிரமாண்டமான தயாரிப்பு எனக் காட்டும் நோக்கில் இராணியை சென்னைக்கு வரவழைத்தது விழா நடத்தியது தற்போது பலராலும் பேசப்படும் சூழ்நிலையில், கான்சாகிப் தான் வீராங்கனை தென்னகத்தின் ஜான்சி ராணி வேலுநாச்சியார் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நடத்திய யுத்தத்தில் எதிர் முகாம் தளபதி ஆகும் ஆகவே நம் மக்கள் மத்தியில் அந்த திரைப்படம் தயாரிக்க எதிர்ப்பு எழுந்தது. நாம் அந்த கான்சாகிப் யார் என்று உண்மை கூறவேண்டும். அதை நம் வாசகர்கள் அறிய வேண்டும் என்பதே நோக்கம்.
கருத்துகள்