கர்நாடகா மாநிலத்தில் சித்ரதுர்கா-பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதிபதி
சிவமூர்த்தி முருகா சரணரு, சிறையிலடைக்கப்பட்டார். சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, (வயது 64) இவர் மீது, மடத்தின் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவியர் அளித்த பாலியல் புகாரில் கைது செய்த காவல்துறையினர், நான்கு நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். காவல் நேற்றுடன் முடிந்ததையடுத்து, மாவட்ட ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது, உடல் நலம் சரியில்லாததால் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமின் வழங்க நீதிபதி மறுத்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை சிறையிலடைக்கும் படி உத்தரவிட்டார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த. பின்னர், பலத்த காவல் பாதுகாப்புடன் நேற்று மதியம் சித்ரதுர்கா மாவட்ட சிறையிலடைக்கப்பட்டார்.
கருத்துகள்