முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாமைப் பாதுகாப்பு அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

டில்லி கண்டோன்மென்ட்-டில் உள்ள தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாமைப் பாதுகாப்பு அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்; வீரர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சரின் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்


பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜனவரி 21, 2023 அன்று, தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள தேசிய மாணவர் படையின் - என்சிசி - குடியரசு தின முகாமுக்குச் சென்றார். முன்மாதிரியான செயல்திறன் மற்றும் கடமையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோருக்கான பாதுகாப்பு அமைச்சரின் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்ளை அவர் வழங்கினார். இந்த ஆண்டு, பாதுகாப்பு அமைச்சரின் பதக்கம், வடகிழக்கு பிராந்திய இயக்குநரகத்தைச் சேர்ந்த அதிகாரி திரு டிங்கூச்சிலே நிரியாம், ராஜஸ்தான் இயக்குநரகத்தைச் சேர்ந்த திரு அவினாஷ் ஜாங்கிர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஒடிசா இயக்குநரகத்தின் கேப்டன் பிரதாப் கேசரி ஹரிசந்தன், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபார் இயக்குநரகத்தைச் சேர்ந்த ஜென்னி ஃபிரான்சினா விக்டர் ஆனந்த், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் இயக்குநரகத்தைச் சேர்ந்த ஃபிசா ஷாஃபி, உத்தரகாண்ட் இயக்குநரகத்தின் சேவாக் ரனாக் ஆகியோருக்கு பாதுகாப்பு அமைச்சரின் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


முகாமில் பங்கேற்ற சுமார் 2,000 பேருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், புதிய வழிகளைக் கண்டறிந்து, நாட்டை வேகமாக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். வேகமாக மாறி வரும் உலகளாவிய பாதுகாப்புச் சூழ்நிலைகளால் எழக்கூடிய சவால்களைச் சமாளிக்க தேசத்தை ஆயத்தப்படுத்துவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் கூறினார். மாறிவரும் காலத்திற்கேற்ப நம்மை வடிவமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். காலத்திற்கு ஏற்ப மாறுவது மிகவும் அவசியம் என்றாலும் நாட்டின் கடந்த காலத்துடன் இணைந்திருப்பதும் முக்கியமானது என்று அவர் கூறினார். கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களில் வேரூன்றிய, வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதே நமது நோக்கமாகும் என்று அவர் கூறினார்.


பயன்படுத்தி, தூக்கி எறிதல் என்ற நடைமுறையால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமூகமும் சுற்றுச்சூழலும் அதிகம் பாதிக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார். சுற்றுச்சூழலை அழிப்பது என்பது உயிர்களை அழிப்பது என்று கூறிய அவர்,  முடிந்தவரை பொருட்களை மீண்டும் பயன்படுத்தவும், இயற்கையை பாதுகாக்கவும் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பயன்படுத்தி, தூக்கி எறிதல் எண்ணத்தை இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் நுழைய விடக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார், பெரியவர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அறிவும் கல்வியும் முக்கியமானதாக இருந்தாலும், வாழ்க்கை விழுமியங்களும் சமமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.


அறிவைப் பெறுவதற்கும் செல்வத்தைப் பெறுவதற்கும் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அதே அளவுக்கு நல்ல குணநலன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். என்சிசி வீரர்கள் தங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மதிப்புகளுடன், வெற்றியின் உச்சங்களைத் தொட்டு, நாட்டிற்குப் பெருமைகளைச் சேர்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இளைஞர்கள் எவ்வளவு வலிமையாக இருக்கின்றனரோ அந்த அளவுக்கு நமது நாடு வலிமை பெறும் என்று அவர் தெரிவித்தார்.

தலைவர், வீரர், கலைஞர் என பன்முத் தன்மையுடனும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல மனிதர் என்ற பண்பையும் புகுத்துவதன் மூலம் நமது வீரர்களை நல்ல ஆளுமையாக மாற்றுவதற்காக என்சிசி-யை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். ஒற்றுமை, ஒழுக்கம், உண்மைத்தன்மை, தைரியம், நல்லிணக்கம், தலைமைத்துவம் மற்றும் குழுப்பணி ஆகியவை என்சிசி-யில் கற்பிக்கப்படுவது எப்போதும் நம் நாட்டிற்கு வழிகாட்டும் ஒளியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். விரும்பிய இலக்கை அடைவதற்கான உறுதிப்பாடு, கூட்டு மனப்பான்மை, தோல்வி பயத்தில் இருந்து விடுபடுவது ஆகியவை என்சிசி பயிற்சி வீரர்களிடம் உள்ள சில முக்கியமான குணங்கள் என அவர் குறிப்பிட்டார். இது இளம் வயதில் தங்களுக்கான பாதையை உருவாக்க உதவுவதோடு, சமூகத்திற்கு ஒரு புதிய வழிகாட்டுதலையும் அளிக்கிறது என்று அவர் கூறினார்.

எப்போதாவது ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், முழு நாடும் நமது ஆயுதப் படைகளுக்குப் பின்னால் இருக்கும் என்று அவர் கூறினார். கடந்த காலங்களில் இந்தியா தனது எதிரிகளை தோற்கடித்து பல போர்களில் வென்றது, கூட்டாக செயல்பட்டதன் விளைவாகும் என்று அவர் தெரிவித்தார்.

கூட்டு மனப்பான்மையின் நன்மைகளைப் பற்றி மேலும் விரிவாகக் கூறிய அவர், பல மொழிகள், பேச்சுவழக்குகள், மதங்கள் மற்றும் கருத்துக்களுக்கு தாயகமாக இருக்கும் இந்தியாவே கூட்டு மனப்பான்மைக்கு  சிறந்த உதாரணம் என்று அவர் தெரிவித்தார். பன்முகத்தன்மை இருந்தபோதிலும், இந்தியா ஒற்றுமையாக உள்ளது என்றும் மக்களின் நலனைப் பாதுகாத்து தேசம் முன்னேறுகிறது என்றும் அவர் கூறினார். தங்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அனைத்து இந்தியர்களும் முன்வந்து தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பை வழங்குவதாக அவர் தெரிவித்தார். உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து முன்னேறுவதற்கு இது ஒரு முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, என்சிசி வீரர்கள் பங்கேற்ற வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.  நாடு முழுவதிலும் உள்ள 17 இயக்குநரகங்களில் இருந்து வந்த என்சிசி வீரர்களைப் பாராட்டிய திரு. ராஜ்நாத்சிங், இது வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கான அடையாளம் என்று குறிப்பிட்டார்.

பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமனே, என்சிசி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங் மற்றும் பிற மூத்த சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த