இலஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.
சிட்டாவில் பெயர் சேர்க்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா கரியமலை கிராம விவசாயி சுந்தர்ராஜ். இவர் தனது நிலம் தொடர்பான சிட்டாவில் பெயர் சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் லதா(வயது 35) என்பவரிடம் விண்ணப்பித்தார்.
இதற்கிடையில் லதா, சிட்டாவில் பெயர் சேர்க்க இடைத்தரகர் கண்ணன் மூலமாக சுந்தர்ராஜிடம் ரூபாய்.4 ஆயிரம் லஞ்சம் கேட்டது குறித்து அவர், ஊட்டி இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததையடுத்து துணை கண்காணிப்பாளர் பொறுப்பு) திவ்யா மேற்பார்வையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பினாப்தலின் ரசாயனம் தடவி ரூபாய் நோட்டுகளை சுந்தர்ராஜிடம் திரும்பக் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கும்படி கூறினர். அதன்படி அவர் அன்று மாலை 4 மணியளவில் இடைத்தரகர் கண்ணனுடன் குந்தா தாலுகா அலுவலகத்துக்கு சென்று.
அங்கு பணியிலிருந்த லதாவிடம் அந்த பணத்தை லஞ்சமாக கொடுத்ததை அங்கு மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், கிராம நிர்வாக அலுவலரை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்தனர். மேலும் அவர் லஞ்சமாக வாங்கிய பணத்தில் அவரது கைரேகை பதிவாகி இருந்ததைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையிலான குழு தாலுகா அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணிபுரிந்த அலுவலர்கள், ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் கிராம நிர்வாக அலுவலர் லதா, இடைத்தரகர் கண்ணன் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி பதிவு செய்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக அலுவலகத்தில் சோதனை நடந்தது.
அதன்பின்னர் சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு ரூபாய்.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லதா மற்றும் இடைத்தரகர் கண்ணன் ஆகியோர் பதிவான வழக்கு அடிப்படையில் கைது செய்தனர். மேலும் லதா மீது துறை ரீதியான விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோல ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மற்றுமொரு கிராம நிர்வாக அலுவலர் கைது...!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது37 ). இவர் செம்பதனிருப்பு கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். அவரை அல்லிவிளாகத்தின் விவசாயி செல்வராஜ் பட்டா மாற்றம் செய்வது தொடர்பாக அனுகியுள்ளார். பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகின்றது. அது தொடர்பாக நாகபட்டிணம் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் செல்வராஜ் அளித்துள்ள புகாரின் போரில் வழக்கு பதிவு செய்த இலஞ்ச ஒழிப்புத் துறையினர், செல்வராஜிடம் 5 ஆயிரம் இரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளனர். அதை கிராம நிர்வாக அலுவலர் வாங்கும் போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் பிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்நாதன் மீது வழக்கு பதிவு செய்து இலஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்துகின்றனர். இதே போல மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஒரேநேரத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், எல்.இ.டி., விளக்குகள் அமைத்ததில், 1 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, முன்னாள் அலுவலர்கள் மூன்று பேர், மின் சாதன பொருட்களை வினியோகித்த இரு நிறுவனங்கள் மீதும், லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் கரூர் மாநகராட்சி வருவாய் உதவியாளர் ரவிச்சந்திரன் 14 வது வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புக்கு சொத்து வரி நிர்ணயம் செய்து கொடுத்திட 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றபோது கைது.ரவிச்சந்திரனுக்கு லஞ்சப் பணத்தை வாங்கிக் கொடுத்த காந்தி கிராமத்தில் பாலாஜி டீஸ்டால் நடத்திவரும் பாரதிராஜா என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள்