முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

பேனா நினைவுச் சின்னம் அரசியல் வரலாறு 


திராவிடக் கட்சி மீது மத்திய பாரதிய ஜனதா கட்சியின் அரசு முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் எழுப்புவதற்கு  கடலோர ஒழுங்குமுறை ஆணையம், மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச் சூழல் துறையின் விதிகள்,  கடலோர மேலாண்மை ஆணையம் ஆகிய அனைத்திலும் உள்ள சட்ட விதிகள் படி  அனுமதி தருகிறார்கள் 

ஆனால் இதற்கு முன்பு கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குப் பின்னர் தான் எந்தக் கட்டுமானமும் இருக்க வேண்டும் என்பது கடலோர மேலாண்மை ஆணையத்தின் அடிப்படை விதியாக இருந்தது, 


மத்திய பாரதிய ஜனதா கட்சியிண் அரசைப் பொறுத்த வரை அவர்களுக்கு திராவிடம் என்றாலே எட்டிக்காயாகும். அதுவும் அந்த திராவிட சித்தாந்தத்தின் மூலவேரான ஈ.வே.ராமசாமி எனும்  பெரியார் என்றாலே, அவர்களுக்கு ஆற்ற முடியாத சினம் எழும். ஏனென்றால், இந்தியாவில்  பாசிச சித்தாந்ததை எதிர்த்து எத்தனையோ சித்தர்கள் போராடினாலும் அவர்களை வாழும் காலத்திலேயே வதைத்ததும்  கொன்றதும் அதிகம்  முடியாவிட்டால் இறப்பிற்கு பின் அரவணைத்து காலப் போக்கில் அவர்களை காணாமல் அழித்தது. ஜனாதனத்தை எதிர்த்த புத்தரையே இந்து மதம் இப்படித் தான் உள்வாங்கிச் செறித்தது! அதில் காலம் சென்ற பின்பும் மக்கள் மனதில் பதிவான பெரியார் எனும் ஈ.வே.ராமசாமி  ஒருவரே! அவரை எதிர்க்க,  பாஜக எடுத்த முடிவு தான் காலம்சென்ற  முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவுச் சின்னம்.


பெரியார் என்ற பெரிய கோடு ஒன்று கண்களை உறுத்துகிறது, எனவே, அதற்கு அருகில் காலம்சென்ற முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி என்ற அதைவிடப் மிகப் பெரிய கோடு வரையும் போது தான் ஈ.வே.ரா.எனும்  பெரியாரின் முக்கியத்துவம் குறையும். இது தான் அவர்கள் தியரி. இந்தத் தியரியைத் தான் காந்தியின் முக்கியத்துவத்தை சிதைக்க மூவாயிரம் கோடியில் உலகின் இரும்பு மனிதர் மிகப் பெரிய சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலையை அங்கு நிறுவினார்கள்! 

ஏனென்றால், உலகத்தாரை பொறுத்த வரை இந்தியா என்றால், அவர்களின் நினைவுக்கு முதலில் தோன்றுபவராக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மட்டுமே இருக்கிறார். இனி அடுத்தடுத்த தலைமுறையினர் காந்தியை விட பட்டேல் தான்  மிகப் பெரியவர் என எண்ணத் தலைப்படுவார்கள் ஆனால், பட்டேல் என்பவர் காந்தியின் பல சீடர்களில் ஒருவர்! பட்டேலை விட, முக்கியத்துவம் வாய்ந்த சுமார் இருபது  தளபதிகள் காந்திக்கு இருந்த நிலை உண்டு.

அதே போலத் தான் ஈ.வே.ராமசாமி பெரியார்! அவருக்கு இணை சொல்ல  பேரறிஞர் அண்ணா போன்ற முதல் நிலையில் இருக்கும் சுமார் இருபது  தளபதிகளும்  ஈ.வே

ராமசாமி எனும் பெரியாருக்கு உண்டு!


பெரியார் ஒரு வரலாற்று நாயகர். திராவிடத்தின் ஐகான்! அவர் உருவாக்கிய சமூக மாற்றத்தின் விளைவாய் ஆட்சிக்கு வந்தவர்களே அண்ணாவும், கருணாநிதியும்! இவர்கள் வெறும் ஆட்சியாளர்கள் தான்! கட்சிகளைக் கடந்து ஈ.வேரா.எனும் பெரியாரின் தாக்கம் அனைத்து மட்டத்திலும் உணரப்பட்டது. இவர்களுக்கும் முன்பே பெரியாரின் தாக்கத்தால் காங்கிரசில் பாசிசத்தின் தாக்கம் சிதைந்து, காமராஜர் தலைமைக்கு வந்தார்! 

ஆக, ஈ.வே.ரா எனும் பெரியாரின் கொள்கைகளை முதன் முதலில் நடைமுறைப்படுத்த சட்டங்கள் போட்டுத் தொடங்கி வைத்தவர் காமராஜர்

 அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது அண்ணாவும், கலைஞரும்! அதே பாதையில் பயணப்பட வேண்டிய கட்டாயம் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் அத்தியாவசியமாக ஏற்பட்டது.

ஆகவே, அந்த ஈ.வே.ரா எனும்  பெரியாரின் முக்கியத்துவத்தை குறைக்கவே திமுகவினய தலைவர் பேனா சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் அரசு அனுமதியளிக்கிறது. 

தமிழ்நாட்டின் தலை நகர் சென்னையில் உலகப் புகழ் பெற்ற மெரீனா கடற்கரையில் முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர்  கருணாநிதியின் வானளாவிய நினைவுச் சின்னத்தை பார்க்க நேரும் வருங்கால தலைமுறைக்கும், வெளிநாட்டு பயணிகள் மற்றும் மீடியாக்களுக்கும் டாகடர் கலைஞர் மு.கருணாநிதி தான் இனி திராவிடத்தின் ஐகானாகத் தெரிவார்! ஈ.வே.ரா எனும் பெரியார் மெல்ல, மெல்ல மறக்கடிக்கபடுவது உறுதி. இனி முழு வீச்சில் 

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையை போற்றும் விதமாக, சுமார் 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி சிலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை விடப் பெரியதாக 134 அடி உயரத்தில் பேனா சிலை அங்கு செல்ல கரைமீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும்  மொத்தம் 650 மீட்டர் தொலைவில், கடல்பரப்பிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் இரும்பாலான கண்ணாடிப் பாலம் அமைக்கப்படும் இத்திட்டத்தை செயல்படுத்துவற்காக தமிழ்நாடு பொதுப்பணித்துறை, CRZ (Coastal Regulation Zone) அனுமதிகேட்டு சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே, முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் சுமார் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், மேலும் இரண்டு மடங்கு செலவில் புதியதாக கடலில் பேனா சிலை அமைக்க தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதைத்தொடர்ந்து கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெரீனாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் இடத்துக்கு அருகிலேயே ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளம் இருப்பதால், அவா்களிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

நினைவுச் சின்னம் கட்டப்படும் போது கடலோர நிபுணா் குழுவினா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

நிலத்தடி நீரைப் பயன்படுத்தி நினைவுச் சின்னத்தை எழுப்பக் கூடாது.

நினைவுச் சின்னம் தொடா்பாக நீதிமன்றங்கள் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கடலோரப் பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் காலத்தில் நினைவுச் சின்னத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.

நினைவுச் சின்னத்துக்கு சரியான சாலை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 காண வரும் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

போக்குவரத்து திட்டம் மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுதல் ஆகியவற்றுக்கான திட்டமிடுதல்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மீறப்பட்டால், திட்ட அனுமதி திரும்பப் பெறப்படும்

என்பது உள்பட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே நினைவுச்சின்னம் அமைக்க முடியும்.                                              கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க EIA வை பரிசீலித்து யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.முத்தமிழ் அறிஞருக்கு முதலில் தங்கத்தால் பேனா வழங்கியவர் நடிகர் விஜயகாந்த் நினைவுக்கு வருகிறார் அவரும் தற்போது அரசியல் தலைவரான நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த