முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலம்சென்ற பாடகி வாணி ஜெயராமுக்கு கலைத்துறையில் பத்ம பூஷன்

பத்ம விருது வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த திருமதி வாணி ஜெயராமுக்கு கலைத்துறையில் பத்ம பூஷன்


(மறைவிற்குப் பிறகு) விருதையும், திரு பி. கல்யாணசுந்தரத்திற்கு சமூக சேவை துறையில் பத்ம ஸ்ரீ விருதையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்

பத்ம விருது வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த திருமதி வாணி ஜெயராமுக்கு  கலைத்துறையில் பத்ம பூஷன் (மறைவிற்குப் பிறகு) விருதையும், திரு பி. கல்யாணசுந்தரத்திற்கு சமூக சேவை துறையில் பத்ம ஸ்ரீ விருதையும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நேற்று வழங்கினார்.

விருது பெற்றவர்களின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த சுருக்கமான தகவல்கள் பின்வருமாறு:

1.    திருமதி வாணி ஜெயராமுக்கு கலைத்துறையில் பத்ம பூஷன் (மறைவிற்குப் பிறகு) விருது வழங்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான கலைத்திறன் மற்றும் அபாரமான திறமைக்குப் புகழ்பெற்றவர், திருமதி வாணி ஜெயராம். 19 இந்திய மொழிகளில் திரைப்படப் பின்னணிப் பாடல்களைப் பாடியிருப்பதோடு, இந்துஸ்தானி, கர்நாடக இசை, பக்திப் பாடல்கள், அபங், தும்ரி போன்றவற்றின் பதிவு செய்யப்பட்ட மற்றும் நேரலை நிகழ்ச்சிகளிலும் பல தசாப்தங்கள் அவர் கலந்துகொண்டார்.


1943, நவம்பர் 30-ஆம் தேதி தமிழகத்தில் பிறந்த திருமதி வாணி, சென்னை ராணி மேரிக் கல்லூரியில் இளங்கலை பொருளாதார பட்டம் பெற்று, பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்தார். எனினும் அவரது எதிர்காலம் இசை துறையில் அமைந்தது. இரண்டு வயது முதலே ராகங்களைக் கண்டறியும் புலமையுடன் குழந்தை மேதையாக அவர் விளங்கினார். திரு கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், திரு டி. ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் திரு ஆர். எஸ். மணி ஆகிய தலைசிறந்த வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீத இசையைப் பயின்று 8 வயதில் மேடை ஏறியதோடு, அகில இந்திய வானொலியிலும் திருமதி வாணி  தமது திறமையை வெளிப்படுத்தினார்.

உஸ்தாத் அப்துல் ரகுமான் கானின் வழிகாட்டுதலில் திருமதி வாணி, இந்துஸ்தானி இசையைப் பயின்றார். 1971-ஆம் ஆண்டு குட்டி (Guddi) என்ற இந்தி திரைப்படத்தில் மூன்று பாடல்களைப் பாடுவதற்காக பிரபல இசையமைப்பாளர் வசந்த் தேசாய் அவரை அழைத்தார். ‘போல ரே பப்பிஹரா’ என்ற பாடல் அனைவரையும் கட்டி போட்டது. அதே திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஹம் கோ மன் கி சக்தி தேனா’ என்ற பாடல் நாடு முழுவதும் பள்ளிகளில் இன்றளவும் இறைவணக்கப் பாடலாக ஒலிக்கிறது.

மதன் மோகன், நௌஷத், ஓ.பி. நய்யார், ஜெய்தேவ், லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் மற்றும் ஆர். டி. பர்மன் போன்ற தலைசிறந்த இந்தி திரைப்பட இசையமைப்பாளர்களின் நுணுக்கமான படைப்புகளும் திருமதி வாணிக்கு  வழங்கப்பட்டது. குல்சரால் இயக்கப்பட்டு, மாபெரும் வெற்றிபெற்ற மீரா திரைப்படத்தில் பண்டித ரவி சங்கரின் இசையில் அவர் பாடிய பாடல்கள், திருமதி வாணியின் இசை பயணத்தின் மகுடத்திற்கு மேலும் மகுடம் சூட்டுவதாக அமைந்தன. மொழி பேதம் இல்லாமல் குஜராத்தியில் ‘ஓதுன் டு ஓதுன்’, மராத்தியில் ‘சுகட்சேஹைசுகா', வங்காள மொழியில் ‘செய்கான் கேனா அமி’, ஒடியாவில் ‘மேகாபராசிலா’ போன்ற ஏராளமான புகழ்பெற்ற பாடல்கள் இந்தியா முழுவதும் இன்றும் ஒலித்து வருகின்றன. 1973-ஆம் ஆண்டு தென்னிந்தியாவிற்குக் குடியேறிய திருமதி வாணி, தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களின் மனதை நொடியில் கவர்ந்தார். எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற பாடல் உட்பட தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான மனதை விட்டு அகலாத பாடல்களை திருமதி வாணி பாடினார்.


ஏராளமான விருதுகளையும், கௌரவங்களையும் திருமதி வாணி பெற்றிருக்கிறார். ‘போலே ரே பப்பிஹரா’ என்ற அவரது முதல் பாடலுக்கு சிறந்த சாஸ்திரிய இசைக்கு பிரசித்தி பெற்ற தான்சேன் சம்மான் விருது வழங்கப்பட்டது. 1976, 1980 மற்றும் 1991-ஆம் ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை அவர் வென்றார். கலைமாமணி விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழக அரசு வழங்கியதுடன், கேரளா மற்றும் குஜராத் மாநில அரசுகளின் விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது.

பிப்ரவரி 4, 2023 அன்று திருமதி வாணி மறைந்தார்.

2.    திரு பி. கல்யாணசுந்தரத்திற்கு சமூக சேவை துறையில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

திரு பி. கல்யாணசுந்தரம், அன்பு பாலம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவராவார். கல்வி மற்றும் மருத்துவத்தின் வாயிலாக ஏழைகளுக்கு சேவையாற்றும் பணிக்காக உலகம் முழுவதும் அவர் போற்றப்படுகிறார்.

1940, மே 10-ஆம் தேதி பிறந்த திரு கல்யாணசுந்தரம், மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளங்கலை தமிழ் பட்டம் பெற்றார். 1963-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் சான்றிதழ் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 1963, ஆகஸ்ட் 25-இல் தூத்துக்குடியின் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கலை கல்லூரியில்  நூலகராக அவர் தமது பணியைத் தொடங்கினார். தமது ஊதியம் முழுவதையும் பயனாளிகளுக்கு அளித்துவிட்டு, உணவகம் ஒன்றில் உணவு பரிமாறுபவராக வேலை செய்து தமது சொந்த தேவைகளுக்கு பணம் ஈட்டினார். 

தமது பணிக்காலத்தின் போது தொலைதூர கல்வி வாயிலாக பல்வேறு பட்டங்களை திரு கல்யாணசுந்தரம் பெற்றார். 1995-ஆம் ஆண்டு கோவா பல்கலைக்கழகம், இந்தியாவின் சிறந்த நூலகர் விருதை அவருக்கு வழங்கியது. ‘உலகளவில் தலைசிறந்த 10 நூலகர்களுள் ஒருவர்' என்ற கௌரவத்தை தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 1996-ஆம் ஆண்டு அவருக்கு அளித்தது. 1997-ஆம் ஆண்டு 'உலகின் குறிப்பிடத்தக்க அறிஞர்’ என்ற பட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கியது.

ஆகஸ்ட் 15, 1953 இல், தமது 14-ஆவது வயதில் அன்பு பாலத்தை திரு கல்யாணசுந்தரம் நிறுவினார். பணி ஓய்வுக்குப் பிறகு, 1998 முதல், சீரான சேவையை திறம்பட செய்து வருகிறார்.

6.5 மில்லியன் டாலர்களுடன் ‘நூற்றாண்டின் மனிதன்' என்று அமெரிக்கா அவரை கௌரவித்தது. 35 கோடி ரூபாய் முழுவதையும் ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அவர் வழங்கினார். ‘20-வது நூற்றாண்டின் ஈடு இணையற்ற 20 சாதனையாளர்களுள் ஒருவர்’ என்ற பட்டத்தை 2002-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவருக்கு அளித்தது.

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற அன்பு பாலம் நிறுவனத்தின் வைர விழாவில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், “பாலம் அய்யாவை தங்களது முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுமாறு” மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் திரு கல்யாணசுந்தரத்தின் சுயசரிதை வெளியாகி இருப்பதுடன், இதர இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு  வருகிறது.

பத்ம விருதுகள் 2023-ஐ வழங்கினார் குடியரசுத் தலைவர்

ஆண்டிற்கான  3 பத்ம விபூஷன், 5 பத்ம பூஷன் மற்றும் 47 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை (05.04.2023) நடைபெற்ற நிகழ்வில் திருமதி திரௌபதி முர்மு வழங்கி சிறப்பித்தார்.

இதில் பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பிற அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

விருது பெற்றவர்களின் விவரங்களை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காணலாம் https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/apr/doc202345178301.pdf.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...