முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலம்சென்ற பாடகி வாணி ஜெயராமுக்கு கலைத்துறையில் பத்ம பூஷன்

பத்ம விருது வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த திருமதி வாணி ஜெயராமுக்கு கலைத்துறையில் பத்ம பூஷன்


(மறைவிற்குப் பிறகு) விருதையும், திரு பி. கல்யாணசுந்தரத்திற்கு சமூக சேவை துறையில் பத்ம ஸ்ரீ விருதையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்

பத்ம விருது வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த திருமதி வாணி ஜெயராமுக்கு  கலைத்துறையில் பத்ம பூஷன் (மறைவிற்குப் பிறகு) விருதையும், திரு பி. கல்யாணசுந்தரத்திற்கு சமூக சேவை துறையில் பத்ம ஸ்ரீ விருதையும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நேற்று வழங்கினார்.

விருது பெற்றவர்களின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த சுருக்கமான தகவல்கள் பின்வருமாறு:

1.    திருமதி வாணி ஜெயராமுக்கு கலைத்துறையில் பத்ம பூஷன் (மறைவிற்குப் பிறகு) விருது வழங்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான கலைத்திறன் மற்றும் அபாரமான திறமைக்குப் புகழ்பெற்றவர், திருமதி வாணி ஜெயராம். 19 இந்திய மொழிகளில் திரைப்படப் பின்னணிப் பாடல்களைப் பாடியிருப்பதோடு, இந்துஸ்தானி, கர்நாடக இசை, பக்திப் பாடல்கள், அபங், தும்ரி போன்றவற்றின் பதிவு செய்யப்பட்ட மற்றும் நேரலை நிகழ்ச்சிகளிலும் பல தசாப்தங்கள் அவர் கலந்துகொண்டார்.


1943, நவம்பர் 30-ஆம் தேதி தமிழகத்தில் பிறந்த திருமதி வாணி, சென்னை ராணி மேரிக் கல்லூரியில் இளங்கலை பொருளாதார பட்டம் பெற்று, பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்தார். எனினும் அவரது எதிர்காலம் இசை துறையில் அமைந்தது. இரண்டு வயது முதலே ராகங்களைக் கண்டறியும் புலமையுடன் குழந்தை மேதையாக அவர் விளங்கினார். திரு கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், திரு டி. ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் திரு ஆர். எஸ். மணி ஆகிய தலைசிறந்த வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீத இசையைப் பயின்று 8 வயதில் மேடை ஏறியதோடு, அகில இந்திய வானொலியிலும் திருமதி வாணி  தமது திறமையை வெளிப்படுத்தினார்.

உஸ்தாத் அப்துல் ரகுமான் கானின் வழிகாட்டுதலில் திருமதி வாணி, இந்துஸ்தானி இசையைப் பயின்றார். 1971-ஆம் ஆண்டு குட்டி (Guddi) என்ற இந்தி திரைப்படத்தில் மூன்று பாடல்களைப் பாடுவதற்காக பிரபல இசையமைப்பாளர் வசந்த் தேசாய் அவரை அழைத்தார். ‘போல ரே பப்பிஹரா’ என்ற பாடல் அனைவரையும் கட்டி போட்டது. அதே திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஹம் கோ மன் கி சக்தி தேனா’ என்ற பாடல் நாடு முழுவதும் பள்ளிகளில் இன்றளவும் இறைவணக்கப் பாடலாக ஒலிக்கிறது.

மதன் மோகன், நௌஷத், ஓ.பி. நய்யார், ஜெய்தேவ், லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் மற்றும் ஆர். டி. பர்மன் போன்ற தலைசிறந்த இந்தி திரைப்பட இசையமைப்பாளர்களின் நுணுக்கமான படைப்புகளும் திருமதி வாணிக்கு  வழங்கப்பட்டது. குல்சரால் இயக்கப்பட்டு, மாபெரும் வெற்றிபெற்ற மீரா திரைப்படத்தில் பண்டித ரவி சங்கரின் இசையில் அவர் பாடிய பாடல்கள், திருமதி வாணியின் இசை பயணத்தின் மகுடத்திற்கு மேலும் மகுடம் சூட்டுவதாக அமைந்தன. மொழி பேதம் இல்லாமல் குஜராத்தியில் ‘ஓதுன் டு ஓதுன்’, மராத்தியில் ‘சுகட்சேஹைசுகா', வங்காள மொழியில் ‘செய்கான் கேனா அமி’, ஒடியாவில் ‘மேகாபராசிலா’ போன்ற ஏராளமான புகழ்பெற்ற பாடல்கள் இந்தியா முழுவதும் இன்றும் ஒலித்து வருகின்றன. 1973-ஆம் ஆண்டு தென்னிந்தியாவிற்குக் குடியேறிய திருமதி வாணி, தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களின் மனதை நொடியில் கவர்ந்தார். எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற பாடல் உட்பட தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான மனதை விட்டு அகலாத பாடல்களை திருமதி வாணி பாடினார்.


ஏராளமான விருதுகளையும், கௌரவங்களையும் திருமதி வாணி பெற்றிருக்கிறார். ‘போலே ரே பப்பிஹரா’ என்ற அவரது முதல் பாடலுக்கு சிறந்த சாஸ்திரிய இசைக்கு பிரசித்தி பெற்ற தான்சேன் சம்மான் விருது வழங்கப்பட்டது. 1976, 1980 மற்றும் 1991-ஆம் ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை அவர் வென்றார். கலைமாமணி விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதை தமிழக அரசு வழங்கியதுடன், கேரளா மற்றும் குஜராத் மாநில அரசுகளின் விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது.

பிப்ரவரி 4, 2023 அன்று திருமதி வாணி மறைந்தார்.

2.    திரு பி. கல்யாணசுந்தரத்திற்கு சமூக சேவை துறையில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

திரு பி. கல்யாணசுந்தரம், அன்பு பாலம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவராவார். கல்வி மற்றும் மருத்துவத்தின் வாயிலாக ஏழைகளுக்கு சேவையாற்றும் பணிக்காக உலகம் முழுவதும் அவர் போற்றப்படுகிறார்.

1940, மே 10-ஆம் தேதி பிறந்த திரு கல்யாணசுந்தரம், மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளங்கலை தமிழ் பட்டம் பெற்றார். 1963-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் சான்றிதழ் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 1963, ஆகஸ்ட் 25-இல் தூத்துக்குடியின் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கலை கல்லூரியில்  நூலகராக அவர் தமது பணியைத் தொடங்கினார். தமது ஊதியம் முழுவதையும் பயனாளிகளுக்கு அளித்துவிட்டு, உணவகம் ஒன்றில் உணவு பரிமாறுபவராக வேலை செய்து தமது சொந்த தேவைகளுக்கு பணம் ஈட்டினார். 

தமது பணிக்காலத்தின் போது தொலைதூர கல்வி வாயிலாக பல்வேறு பட்டங்களை திரு கல்யாணசுந்தரம் பெற்றார். 1995-ஆம் ஆண்டு கோவா பல்கலைக்கழகம், இந்தியாவின் சிறந்த நூலகர் விருதை அவருக்கு வழங்கியது. ‘உலகளவில் தலைசிறந்த 10 நூலகர்களுள் ஒருவர்' என்ற கௌரவத்தை தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 1996-ஆம் ஆண்டு அவருக்கு அளித்தது. 1997-ஆம் ஆண்டு 'உலகின் குறிப்பிடத்தக்க அறிஞர்’ என்ற பட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கியது.

ஆகஸ்ட் 15, 1953 இல், தமது 14-ஆவது வயதில் அன்பு பாலத்தை திரு கல்யாணசுந்தரம் நிறுவினார். பணி ஓய்வுக்குப் பிறகு, 1998 முதல், சீரான சேவையை திறம்பட செய்து வருகிறார்.

6.5 மில்லியன் டாலர்களுடன் ‘நூற்றாண்டின் மனிதன்' என்று அமெரிக்கா அவரை கௌரவித்தது. 35 கோடி ரூபாய் முழுவதையும் ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அவர் வழங்கினார். ‘20-வது நூற்றாண்டின் ஈடு இணையற்ற 20 சாதனையாளர்களுள் ஒருவர்’ என்ற பட்டத்தை 2002-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவருக்கு அளித்தது.

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற அன்பு பாலம் நிறுவனத்தின் வைர விழாவில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், “பாலம் அய்யாவை தங்களது முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுமாறு” மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் திரு கல்யாணசுந்தரத்தின் சுயசரிதை வெளியாகி இருப்பதுடன், இதர இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு  வருகிறது.

பத்ம விருதுகள் 2023-ஐ வழங்கினார் குடியரசுத் தலைவர்

ஆண்டிற்கான  3 பத்ம விபூஷன், 5 பத்ம பூஷன் மற்றும் 47 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை (05.04.2023) நடைபெற்ற நிகழ்வில் திருமதி திரௌபதி முர்மு வழங்கி சிறப்பித்தார்.

இதில் பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பிற அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

விருது பெற்றவர்களின் விவரங்களை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காணலாம் https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/apr/doc202345178301.pdf.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.