முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் நடந்த சோதனைகளில் சிக்கிய ஆவணங்கள் ஆய்வு

ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனங்களில் மூன்றாவது நாளாக நடந்த சோதனைகள் மூலம் மூன்றாண்டுகளில் நடந்த பத்திரப்பதிவுகள் உள்ளிட்ட வங்கிப் பணபரிவர்த்தனைகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்கின்றனர்


சென்னையைத் தலைமையிடமாக கொண்டு திருச்சிராப்பள்ளி, கோயம்பத்தூர், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட  பல இடங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி- ஸ்கொயர் குரூப் திமுகவின் தலைவர் குடும்ப உறவுகளுக்கு நெருக்கமான நிறுவனம் எனவும், திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்த நிறுவனம் 38 ஆயிரத்து 827 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியதாகவும் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில்  ஜி- ஸ்கொயர் நிறுவனத்தில் மூன்றாவது நாளாகத் தொடரும் வருமான வரித்துறையின்  சோதனைகள் .



ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் குறைந்த விலையில் நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு அடிப்படையில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் அவர்களது ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஜி- ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக திமுகவுக்கு  நெருக்கமாக இருக்கக்கூடிய நபரது நிறுவனம் என்பதால் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்கு அழைத்து வரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதில்




சென்னை சேத்துப்பட்டு, ஆழ்வார்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகம், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர்  மோகன் வீடு, அவர் மகன் கார்த்திக் வீடு, ஆடிட்டர் சண்முக மூர்த்தி, முதல்வர் மருமகன் சபரீசனின்  நண்பர்கள், நெருக்கமானவர்கள் எனப் பல இடங்களில் மூன்று நாட்களாக சோதனை மேற்கொள்ளப்படுவதில்

"ஜி ஸ்கொயர் " நிறுவனம் என்பது ஒரே ஒரு நிறுவனம் அல்ல,
ஜி ஸ்கொயர் ஹோம் டெவலப்பர்ஸ்,
ஜி ஸ்கொயர் லேண்ட் டிசைன்,
ஜி ஸ்கொயர் ஜமீன் ப்ராப்பர்ட்டீஸ்,
ஜி ஸ்கொயர் லேண்ட் ஹோல்டிங்ஜி ஸ்கொயர் பில்டர்ஸ்,
ஜி ஸ்கொயர் ராயல் எஸ்டேட்ஸ்,
ஜி ஸ்கொயர் ஹவுசிங் டெவலப்பர்ஸ்,
ஜி ஸ்கொயர் சாரா பில்ட்மோர்,
ஜி ஸ்கொயர் சிக்னிடிவ் பில்ட் ஆன்,                        ஜி ஸ்கொயர் யுனைடட் ரியாலிட்டி,
ஜி ஸ்கொயர் லேண்ட் & பில்டிங்,
ஜி ஸ்கொயர் கிரியேட்டர்ஸ்,
ஜி ஸ்கொயர் குயின் கேட்,
ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ்,
ஜி ஸ்கொயர் கிராண்ட் எஸ்டேட்,
ஜி ஸ்கொயர் ஜமீன் எஸ்டேட்,
ஜி ஸ்கொயர் லே அவுட்,
ஜி ஸ்கொயர் கிரவுண்ட் & ப்ரமோட்டர்ஸ், 
ஜி ஸ்கொயர்  ஹைடெக் பில்டர்ஸ்,
 ஜி ஸ்கொயர் எகோசென்ஸ் கிரியேஷன்ஸ், 
 ஜி ஸ்கொயர் கன்ஸ்ட்ரக்டர்ஸ்,
 ஜி ஸ்கொயர் கிரீன் ரோப் டெவலப்பர்ஸ் ,     ஜி ஸ்கொயர் ரியல் ப்ரமோட்டர்ஸ்,
ஜி ஸ்கொயர் ஏட் காம் கிரியேஷன்ஸ் ,  ஜி ஸ்கொயர் பென்டோ க்ரியேட்டர்ஸ், 
ஜி ஸ்கொயர் குனீத் டெவலப்பர்ஸ்.என இருபத்தைந்து நிறுவனங்கள் கொண்டது.




ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்ற சோதனை மட்டும் நிறைவடைந்தது.கடந்த மூன்று வருடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு மற்றும் பத்திரப்பதிவு செய்துள்ள நிலங்கள் தொடர்பாக வருமான வரித்துறையினர் ஆய்வை மேற்கொண்டனர். மேலும் ஜி ஸ்கொயர் வங்கி கணக்கு விவரங்களை பெற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள பண பரிவர்த்தனைகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.இதனை தொடர்ந்து ஈட்டிய வருமானத்திற்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் முறையாக வரி செலுத்தி உள்ளனரா அல்லது வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனரா எனவும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருவதாகத் தகவல் 2019 ஆம் ஆண்டு இதே நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி கைப்பற்றியுள்ள ஆவணங்களை ஒப்பிட்டும் விசாரணை நடைபெறுவதாக வும்,மூன்று நாட்களாக நடைபெறும் இச்சோதனை மேலும் சில நாட்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் வருமான வரித்துறையினர் தகவல் ,யார் இந்த பாலா சைக்கிளில் தொடங்கிய வியாபாரம்...!

இன்று பல ஆயிரம் கோடிகள் வரை  தாண்டி விட்டது!!

 அவரது   உழைப்பு!

ஆம் ஒட்டன்சத்திரம் அருகே கிராமம் பேபி அம்மாவின் செல்லப் பிள்ளைதான் ராமஜெயம் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற தாக்கம் திருப்பூரில் சைக்கிளில் தெருத்தெருவாக சேர், ஃபேன், டிவி என விற்பனை செய்து கொஞ்சமாக முன்னேறி திருப்பூர் சாந்தி தியேட்டர் அருகே பேபி எலக்ட்ரானிக்ஸ் என்பது அவரது தாயார் பெயரில் 10 க்குப் 10 ரூமில் உருவாகி படிப்படியாக பல ஷோரூம் திறந்து வியாபாரத்தில் கொடி கட்டி பறந்து பின் சரிவு ஏற்பட்டு சென்னைக்கு சென்று ரியல் எஸ்டேட் செய்து படிப்படியாக முன்னேறி இன்று ஜி ஸ்கொயர் நிர்வாகியாகி பாலா என தனது பெயரை மாற்றிக் கொண்ட உண்மையான உழைப்பாளி தான் !  ராமஜெயம் திருப்பூரில் பேப்பர் விளம்பரம்  செய்வார்  அப்போதே செய்தி இதழ்களில்  சைக்கிளில் தொடங்கி காரில் வலம் வரும் ராமஜெயம் என கட்டுரை வந்த காலம் உண்டு உலகையே ஒரு காலத்தில் வலம் வருவேன் என கூறினார்.   பாலாவாக மாறிய பின் ராமஜெயத்தை பலரும் பார்க்கமுடிய தான்.! மாற்றங்கள் மனிதனை புரட்டிப்போட்டுவிட்டது ....ஆக இப்போது பாதி உண்மைகள் மட்டும் மீதி உண்மைகள் பேசும் போது நடப்பு அரசியல் கலப்பு வரும் ....அப்போது தான் ஊழல் இலஞ்ச இலாவண்யங்கள் துவங்குகிறது...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த