காலமான ஜே.கே.ரித்தீஷ் மனைவிக்கு 6 மாதம் சிறை 60 லட்சம் அபராதம்
ஒரு அரசியல் வாதியின் உறவினரான ஜே.கே.ரித்தீஷ் தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன்பின்னர் அரசியலில் ஜே.கே.ரித்தீஷ் திமுக சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறு்ப்பினரானார்அதன் பின்பாக அதிமுகவில் சேர்ந்தார்.
2019 ஆம் ஆண்டில் திடீர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு 46 வயது இளம் வயதில் அவர் மரணம் அடைந்தது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் சிலருக்கு அதிர்வேற்படுத்தியது இறந்த
நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஒருசில படத்தில் நடித்து மக்கள் முன் அறிமுகம் ஆகியிருந்த நிலையில் இவர் முன்னால் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜே.ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக ஒருகாலத்தில் அறிவிக்கப்பட்ட வி.என். சுதாகரனின் பினாமியாக ஜே.கே.ரித்தீஷி இருந்ததாக அப்போதே பேசப்பட்ட நிலையில் அவரின் மனைவி ஜோதீஸ்வரி ஒரு நகைக்கடை நடத்துகிறார். அவர் நகைப் பட்டறை வைத்திருக்கும் திருச்செல்வம் என்பவரிடம் நகை வாங்குவதற்கு 60 லட்சம் ரூபாய் வரை பணம் தராமல் இருந்திருக்கிறார். அதற்காக கொடுத்த காசோலையும் பணமில்லாமல் திரும்பி வந்திருக்க அது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில் தற்போது காரைக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில். ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜொதீஸ்வரிக்கு ஆறு மாதம் சிறைத் தண்டணையும் மற்றும் 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.
கருத்துகள்