முன்னால் முதல்வர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கு விசாரணை நீதிபதி மாற்றம்
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திலுள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆறாண்டு காலமாக நடைபெற்று வருகிற வழக்கை கடந்த ஒரு வருடமாக நீதிபதி முருகன் மற்றும் பொறுப்பு நீதிபதியான நாராயணன் ஆகிய இருவரும் விசாரித்த நிலையில், அவர்கள் இருவரும் மாற்றப்பட்டு புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிபதி அப்துல் காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு முன்பே சிபிடிஐடி காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது துவங்கி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெறுகிற நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முருகன் பணியிட மாற்றம் காரணமாக சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் பொறுப்பு நீதிபதியாக கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்த உதகமண்டலம் மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி நாராயணன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த அப்துல் காதர் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற போது முக்கிய ஆவணங்களும், விலை மதிப்புமிக்க பொருட்களும் திருடு போனதாகவும் அப்போது பணியிலிருந்த எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் மற்றும் பலர் கைது செய்யப்பட்டதில் அவர்கள் கூட்டாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் ? மர்மமாக மரணமடைந்தார்.அது போல் மற்றொரு ஓட்டுனரான சயான் சென்ற காரும் கேரளாவில் விபத்துக்குள்ளானதில்? சயானின் மனைவி, மகளும் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர் தப்பினார். கோடநாடு எஸ்டேட்டில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமாரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இப்படி கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த மர்ம மரணங்கள். கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆறாண்டாக விசாரணை நடைபெறுகிறது.
கடந்த ஓராண்டாக நீதிபதி முருகன், பொறுப்பு நீதிபதி நாராயணன் ஆகியோர் விசாரித்து வந்த நீதிபதிகள் மாற்றமாகி தற்போது புதுக்கோட்டை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த அப்துல் காதர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் பிரிவு உபசார விழா நடந்தது, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் தோட்டங்கள் உறுவாக்கி புதுமைப்படுத்தியவர் நீதிமன்ற வளாகத்தில் பசுமையான நினைவுகளைப் பதித்துச் சென்றார். வழக்கறிஞர் தலைவர் சின்ராஜ் மற்றும் அருள்மொழி வேந்தன் மற்றும் சத்யா உள்ளிட்டோர் அவருக்கு கதராடை அணிவித்து வாழ்த்தி வழியனுப்பினார்கள்.
கருத்துகள்