முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற மற்றும் பல்வேறு துறை அமைச்சக அதிகாரிகளுக்கு, சட்ட வரைவு சார்ந்த பயிற்சி முகாம்

நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற மற்றும் பல்வேறு துறை அமைச்சக அதிகாரிகளுக்கு, சட்ட வரைவு சார்ந்த பயிற்சி முகாமை, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்


நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற மற்றும் பல்வேறு துறை அமைச்சக அதிகாரிகளுக்கு சட்ட வரைவை மேற்கொள்ளுதல் குறித்த பயிற்சி முகாமை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இதில் மக்களவைத் தலைவர்  திரு ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் திரு பிரஹலாத் ஜோஷி, திரு அர்ஜூன் ராம் மேஹ்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



விழாவில் பேசிய அமித்ஷா, சட்ட வரைவு என்பது நமது ஜனநாயகத்தின் முக்கிய மூலக்கூறு என்றார். ஏனெனில்,  சட்டவரைவு சார்ந்த அறிவாற்றலில் தொய்வு ஏற்பட்டால், அது  சட்டத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பையே பலவீனமாக்கிவிடும் என்பதுடன், நீதித்துறைச் செயல்பாட்டையும் சீர்குலைத்து விடும் என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாட்டின் ஜனநாயகத்திற்கும் இது மிக மிக முக்கியமானது என்பதால், சட்டவரைவு சார்ந்த திறன்களை மேம்படுத்திக்கொண்டு குறித்த நேரத்தில் செயல்படுத்த வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகக் கருதப்படும் இந்திய ஜனநாயகம், நம்நாட்டில் பிறந்தது என்பது மட்டுமல்லாமல், அதன் கொள்கை இந்தியாவிலேயே உருவானது என்று கூறுவது சாலப்பொருந்தும் என்றார். இந்திய அரசியலமைப்பு உலகின்  மிகச்சிறந்த அரசியலமைப்பாக கருதப்படுவதாகவும் திரு அமித் ஷா குறிப்பிட்டார். நீதி, நிர்வாகம், சட்டம் இயற்றும் அமைப்புகள் ஆகியவையே இந்திய ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்கள் என்று கூறிய அவர், இந்த மூன்று தூண்களின் அடிப்படையிலேயே, ஒட்டுமொத்த ஜனநாயக ஆட்சி முறை உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மக்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சட்டத்தைப் பின்பற்றி தீர்வு காண்பதே சட்டத்தின் கடமை என்று குறிப்பிட்ட அவர், பழைய சட்டங்களை புதுப்பித்தல் மற்றும் புதிய சட்டங்களை உருவாக்குதல் ஆகிய நடைமுறைகளைக் கையாளும் போது நாடாளுமன்றம், அனைத்து தரப்பினரின் விவாதங்களையும்,  கருத்தில் எடுத்துக்கொள்ளும் என்றும்  கூறினார். நம் நாட்டில் சுதந்திரமாக செயல்படும் நீதித்துறை, பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண சட்டத்தைப் பயன்படுத்துவதாக தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மிக சக்தி வாய்ந்த உறுப்பு நாடாளுமன்றம் என்பதுடன், அதன் சக்தியே சட்டங்கள் தான் என்றும் அமித் ஷா கூறினார். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் கருத்துகள் மற்றும் மக்களின் எண்ணங்களை சட்டங்களாக மாற்றும் போது, அரசியலமைப்பு, கலாச்சாரம். வரலாற்றுப் பாரம்பரியம், ஆட்சி முறை, சமூகம், நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாடு, சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். சட்ட வரைவு என்பதை அறிவியலாகவோ, கலையாகவோ, பார்க்காமல், திறன் உத்வேகத்துடன் கூடிய திறமையாகவே அதனைக் கருதவேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

அரசின் கொள்கைகளைச் சட்டமாக மாற்றும் போது, பழைய மற்றும் சர்ச்சைக்குரிய சட்டங்களின் சாராம்சங்களை, குறைந்தபட்சம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.  சட்ட வரைவை உருவாக்கும் போது, சட்டத்தை எழுதுவது, திறமையான ஒன்று என்றபோதிலும், அடைமொழிக்குள் போட வேண்டிய வார்த்தைகளை  மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சட்டவரைவில்  மிகவும் எளிமையான, அதே நேரத்தில் தெளிவான புரிதலைக் கொடுக்கும்  வார்த்தைகளை முடிந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், பொதுவான வார்த்தைகளை பயன்படுத்துவது சர்ச்சைகளை உருவாக்கிவிடும் என்றும் அறிவுறுத்தினார்.


பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றது முதல், தற்போது வரை, சர்ச்சைக்குரிய பல சட்டங்களை நீக்கியதன் மூலம் வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள், சமூக ஆகியவற்றை பல சட்டங்களிலிருந்து விடுவித்து இருக்கிறது என்று  குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, அதே நேரத்தில் நாட்டின் நலன் கருதி அவ்வப்போது பல புதிய சட்டங்களை இயற்றியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு