வங்கி மோசடி வழக்கில் தனியார் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ உட்பட மூவருக்கு 3 முதல் 5 ஆண்டு வரை கடுங்காவல் சிறை
வங்கி மோசடி வழக்கில் பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ திரு பி. செந்தில் குமாருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், திரு டி ஆர் தனசேகர், திரு கருணாநிதி (எஸ்ஜெஎஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள்) மற்றும் திரு ஜெ முரளி, திரு பி லதாபாஸ், திரு செந்தில்குமார் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும் பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவனம் மற்றும் எஸ்ஜெஎஸ் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
குற்றச்சாட்டப்பட்டவர்கள் மீது 06.02.2008 அன்று இந்தியன் வங்கி அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில் குமார் மற்றும் எஸ்ஜெஎஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான திரு டி ஆர் தனசேகர், திரு கருணாநிதி ஆகியோர் போலியான ஆவணங்களை அளித்து கடன் பெற்றதாகவும். அந்த கடனை திருப்பிச் செலுத்தாததாகவும், இதனால் இந்தியன் வங்கிக்கு ரூபாய் 4.19 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணைக்குபின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது 20.10.2008 அன்று சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கருத்துகள்