தெற்கு வங்காள விரிகுடாக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது:
தெற்கு வங்காள விரிகுடாக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், ஜூன் மாதம் 20, 21-ஆம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்ககலாம். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும். என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்