முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற குடியரசுத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனுப்பிய மனு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற


குடியரசுத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனுப்பிய மனு தமிழ்நாடு 
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும்படி குடியரசுத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எழுதியுள்ள
கடிதத்தில்:
"அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக மரபுகளை மதிக்காமலும் ஆளுநர் ஆர்.என் ரவி நடந்து கொள்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கில்லாத அதிகாரத்தை இருப்பது போல நினைத்துக் கொண்டு ஜனநாயக மரபுகளை மீறி அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துள்ளார்.
 தனிப்பட்ட நோக்கங்களை அடைய நினைக்கும் ஆளுனரின் செயல்பாடுகளையும், அரசு அனுப்பும் சட்டமுன்வடிவுகளில் முடிவெடுக்காமல் இருப்பதையும் கண்டிக்கிறோம் என அதில்  கூறப்பட்டுள்ளது. மேலும் வணக்கம், 

நீங்கள் 29.6.23 தேதி, இரவு 7 மணிக்கு திரு. வீ. செந்தில் பாலாஜி அவர்களை என் அமைச்சரவையில் இருந்து "பதவி நீக்கி" அனுப்பிய கடிதமும், பிறகு அதே நாள் இரவு 11:45 மணிக்கு மேற்படி கடிதத்தைக் "கிடப்பில் போட்டு" அனுப்பிய இன்னொரு கடிதமும் கிடைக்கப் பெற்றேன். உங்களின் இரண்டு கடிதங்களும் முற்று முழுதாக ஒதுக்கித் தள்ளப்பட மட்டுமே தகுதியானவை என்றாலும் கூட, இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளையும், சட்டத்தையும் விளக்கவே இதை உங்களுக்கு எழுதுகிறேன்.

முதலில், இரண்டு கடிதங்களுக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் உதவியும், அறிவுரையும் கேட்கப்படவோ, அவை கொடுக்கப்படவோ இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன். இரண்டாவதாகக், கடுமையான சொற்களுடன், "அரசியல் சாசன இயந்திரம் பழுதடைந்து நின்று விட்டது" என்று குற்றஞ்சாட்டிக், கிட்டத்தட்ட மிரட்டி, நீங்கள் கடிதம் எழுதிய சில மணி நேரத்தில், "அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்பதற்காக" அதை நீங்களே திரும்பப் பெற்றுக் கொண்டது, இவ்வளவு முக்கியமான முடிவெடுப்பதற்கு முன் கூட, நீங்கள் சட்ட அறிவுரையைக் கேட்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மாண்புமிகு உள்துறை அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, இந்த விவகாரத்தில் சட்ட அறிவுரையைப் பெற உங்களைப் பணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதே, நீங்கள், இந்திய அரசியல் சாசனத்தைத் துளியும் மதிக்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என அவசரகதியில் செயல்படுவதை உணர்த்துகிறது.

மேலும், திரு. வீ. செந்தில் பாலாஜி குறித்து ஐந்து பக்கக் கடிதம் எழுதியுள்ள நீங்கள், என்னுடைய அரசு, முனனாள் அதிமுக அரசு காலத்தில் நடந்த சட்ட மீறல்கள் தொடர்பாக, அப்போதைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது விசாரனை நடத்தி, வழக்கு நடத்திட அனுப்பிய  கோரிக்கைகளைப், பல மாதங்களாக உங்கள் அலுவலகத்தில் கிடப்பில் போட்டு வைத்து, ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து, விவரிக்க முடியாத மெளனம் காப்பதைச் சுட்டிக் காட்டுவது எமது கடமையாகிறது. மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), குட்கா போதைப் பொருள் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்திட முன்வைத்த கோரிக்கை மீது கூட நீங்கள் செயல்படாமல் இருக்கிறீர்கள். உங்களின் இந்த பாரபட்சமான செயற்பாடுகள், உங்களின் ஆரோக்கியமற்ற ஒருதலை பட்சமான தன்மையை மற்றுமல்ல உங்களின் நேர்மையின்மையின் உண்மையான நோக்கத்தையும் தோலுரித்துக் காட்டுகின்றன.

வரம்பு மீறிய மொழி பயன்படுத்தப் பட்டதாக நீங்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுக்குத், தமிழ் நாட்டு அரசு என்றுமே தங்களுக்கும், தங்கள் பதவிக்கும் உரிய மதிப்பு, மரியாதையை வழங்கி வந்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எங்கள் தமிழ்ப் பண்பாட்டின் வழிநின்று உங்களிடம் என்றுமே இனிமையுடன், பண்புடன், தகைமையுடன் நடந்து கொண்டுள்ளோம்; ஆனால் அதற்காக நாங்கள் உங்களின் அரசியல் சாசனத்திற்குப் புறம்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற பொருள் அல்ல.

ஆகவே, திரு.வீ. செந்தில் பாலாஜியை நீங்கள் "பதவி நீக்கம்" செய்வதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை வலியுறுத்துகிறேன். அதற்கு முடிவெடுக்கும் முழு அதிகாரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஒருவருக்கு மட்டுமே உள்ளது.  என் அமைச்சரை, என் அறிவுரை இல்லாமல் பதவி நீக்கம் செய்ததாக, அரசியல் சாசன வரையறைகளை மீறி நீங்கள் அனுப்பிய செய்தி, சட்டத்தின் முன், தொடக்கப்புள்ளி முதலே முற்றாகச் செல்லுபடியாகாதது; உருப்பெறாதது; ஆகவே அது ஒதுக்கிப் புறந்தள்ளப்படுகிறது.

அன்பு வணக்கங்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும்படி குடியரசுத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எழுதியுள்ள கடிதத்தில்:

"அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக மரபுகளை மதிக்காமலும் ஆளுநர் ஆர்.என் ரவி நடந்து கொள்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கில்லாத அதிகாரத்தை இருப்பது போல நினைத்துக் கொண்டு ஜனநாயக மரபுகளை மீறி அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துள்ளார்.


தனிப்பட்ட நோக்கங்களை அடைய நினைக்கும் ஆளுனரின் செயல்பாடுகளையும், அரசு அனுப்பும் சட்டமுன்வடிவுகளில் முடிவெடுக்காமல் இருப்பதையும் கண்டிக்கிறோம் என அதில்  கூறப்பட்டுள்ளது. ஆனால் இதே சூழலில் ஆளுநர் தரப்பில் அரசியலமைப்புச் சட்டத்தின் 154, 163, 164-வது பிரிவுகளின் கீழ் ஒரு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரமுள்ளதெனவும் அதன்படி, வி.செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குகிறேன்.என ஆளுநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைக்காக மத்திய அட்டர்னி ஜெனரலை அணுகியுள்ளதால், இந்த உத்தரவை நிறுத்தி ஆனால், நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்பதால், செந்தில் பாலாஜிஅமைச்சராக நீடிப்பதை நான் ஏற்கவில்லை.


எனக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க மறுத்ததுடன், இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என அறிவிக்கை வெளியிட்டீர்கள். இது குறித்த கருத்துகளை தெரிவித்துள்ள உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு, அவர் வேறு ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது தொடரப்பட்டது. இதை அரசியல் பழிவாங்கல்

என்று கூற இயலாது. புதிய ஆட்சியில் அவர் மீண்டும் அமைச்சர் ஆகாமல் இருந்திருந்தால், 2021 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் புகார்தாரர்கள் சமரசம் செய்திருப்பார்களா என்பது தெரியாது.

நேர்மையான விசாரணைக்கு செந்தில் பாலாஜி இடையூறு விளைவிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், அமைச்சராக வைத்திருந்தீர்கள்.


இது, சிபிஐ, வருமான வரித்துறையை தடுத்து மிரட்டும் தைரியத்தை அவருக்கு அளித்தது.

உங்களுக்கு எனது அறிவுரையையும் மீறி அவரை பதவியில் நீடிக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது உங்கள் பாரபட்சத்தை காட்டுகிறது. அவர் அமைச்சராக நீடிப்பது, சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்துமோ என்ற நியாயமான அச்சம் ஏற்படுகிறது. இந்த சூழலில்,

அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164-வது பிரிவுகளின்கீழ் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு உண்டு 




இதுதொடர்பான நடவடிக்கைக்காக மத்திய அட்டர்னி ஜெனரலை அணுகியுள்ளதால், இந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வருக்கு இன்னொரு கடிதம் எழுதியுள்ளார் இதில் பொதுநீதி யாதெனில்: ஊழல் யார் செய்தாலும் குற்றமே .ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் அரசியல் சாசனம் தொடங்கி உச்ச நீதிமன்ற முன் தீர்ப்புகள் வரையில் எடுத்துக்காட்டி தங்களுக்கான உரிமைகள் குறித்து விவாதம் செய்கின்றனர்

இந்த உரிமை சாதாரண மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்று இவர்கள் யாரும் நிணைத்து கவலை படுவதில்லை.

பொதுமக்கள் சாதாரன விஷயத்திற்குக் கூட வருட கணக்கில் அலைந்து திரிகின்றனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...