முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற குடியரசுத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனுப்பிய மனு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற


குடியரசுத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனுப்பிய மனு தமிழ்நாடு 
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும்படி குடியரசுத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எழுதியுள்ள
கடிதத்தில்:
"அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக மரபுகளை மதிக்காமலும் ஆளுநர் ஆர்.என் ரவி நடந்து கொள்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கில்லாத அதிகாரத்தை இருப்பது போல நினைத்துக் கொண்டு ஜனநாயக மரபுகளை மீறி அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துள்ளார்.
 தனிப்பட்ட நோக்கங்களை அடைய நினைக்கும் ஆளுனரின் செயல்பாடுகளையும், அரசு அனுப்பும் சட்டமுன்வடிவுகளில் முடிவெடுக்காமல் இருப்பதையும் கண்டிக்கிறோம் என அதில்  கூறப்பட்டுள்ளது. மேலும் வணக்கம், 

நீங்கள் 29.6.23 தேதி, இரவு 7 மணிக்கு திரு. வீ. செந்தில் பாலாஜி அவர்களை என் அமைச்சரவையில் இருந்து "பதவி நீக்கி" அனுப்பிய கடிதமும், பிறகு அதே நாள் இரவு 11:45 மணிக்கு மேற்படி கடிதத்தைக் "கிடப்பில் போட்டு" அனுப்பிய இன்னொரு கடிதமும் கிடைக்கப் பெற்றேன். உங்களின் இரண்டு கடிதங்களும் முற்று முழுதாக ஒதுக்கித் தள்ளப்பட மட்டுமே தகுதியானவை என்றாலும் கூட, இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளையும், சட்டத்தையும் விளக்கவே இதை உங்களுக்கு எழுதுகிறேன்.

முதலில், இரண்டு கடிதங்களுக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் உதவியும், அறிவுரையும் கேட்கப்படவோ, அவை கொடுக்கப்படவோ இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன். இரண்டாவதாகக், கடுமையான சொற்களுடன், "அரசியல் சாசன இயந்திரம் பழுதடைந்து நின்று விட்டது" என்று குற்றஞ்சாட்டிக், கிட்டத்தட்ட மிரட்டி, நீங்கள் கடிதம் எழுதிய சில மணி நேரத்தில், "அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்பதற்காக" அதை நீங்களே திரும்பப் பெற்றுக் கொண்டது, இவ்வளவு முக்கியமான முடிவெடுப்பதற்கு முன் கூட, நீங்கள் சட்ட அறிவுரையைக் கேட்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மாண்புமிகு உள்துறை அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, இந்த விவகாரத்தில் சட்ட அறிவுரையைப் பெற உங்களைப் பணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதே, நீங்கள், இந்திய அரசியல் சாசனத்தைத் துளியும் மதிக்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என அவசரகதியில் செயல்படுவதை உணர்த்துகிறது.

மேலும், திரு. வீ. செந்தில் பாலாஜி குறித்து ஐந்து பக்கக் கடிதம் எழுதியுள்ள நீங்கள், என்னுடைய அரசு, முனனாள் அதிமுக அரசு காலத்தில் நடந்த சட்ட மீறல்கள் தொடர்பாக, அப்போதைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது விசாரனை நடத்தி, வழக்கு நடத்திட அனுப்பிய  கோரிக்கைகளைப், பல மாதங்களாக உங்கள் அலுவலகத்தில் கிடப்பில் போட்டு வைத்து, ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து, விவரிக்க முடியாத மெளனம் காப்பதைச் சுட்டிக் காட்டுவது எமது கடமையாகிறது. மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), குட்கா போதைப் பொருள் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்திட முன்வைத்த கோரிக்கை மீது கூட நீங்கள் செயல்படாமல் இருக்கிறீர்கள். உங்களின் இந்த பாரபட்சமான செயற்பாடுகள், உங்களின் ஆரோக்கியமற்ற ஒருதலை பட்சமான தன்மையை மற்றுமல்ல உங்களின் நேர்மையின்மையின் உண்மையான நோக்கத்தையும் தோலுரித்துக் காட்டுகின்றன.

வரம்பு மீறிய மொழி பயன்படுத்தப் பட்டதாக நீங்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுக்குத், தமிழ் நாட்டு அரசு என்றுமே தங்களுக்கும், தங்கள் பதவிக்கும் உரிய மதிப்பு, மரியாதையை வழங்கி வந்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எங்கள் தமிழ்ப் பண்பாட்டின் வழிநின்று உங்களிடம் என்றுமே இனிமையுடன், பண்புடன், தகைமையுடன் நடந்து கொண்டுள்ளோம்; ஆனால் அதற்காக நாங்கள் உங்களின் அரசியல் சாசனத்திற்குப் புறம்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற பொருள் அல்ல.

ஆகவே, திரு.வீ. செந்தில் பாலாஜியை நீங்கள் "பதவி நீக்கம்" செய்வதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை வலியுறுத்துகிறேன். அதற்கு முடிவெடுக்கும் முழு அதிகாரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஒருவருக்கு மட்டுமே உள்ளது.  என் அமைச்சரை, என் அறிவுரை இல்லாமல் பதவி நீக்கம் செய்ததாக, அரசியல் சாசன வரையறைகளை மீறி நீங்கள் அனுப்பிய செய்தி, சட்டத்தின் முன், தொடக்கப்புள்ளி முதலே முற்றாகச் செல்லுபடியாகாதது; உருப்பெறாதது; ஆகவே அது ஒதுக்கிப் புறந்தள்ளப்படுகிறது.

அன்பு வணக்கங்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும்படி குடியரசுத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எழுதியுள்ள கடிதத்தில்:

"அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக மரபுகளை மதிக்காமலும் ஆளுநர் ஆர்.என் ரவி நடந்து கொள்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கில்லாத அதிகாரத்தை இருப்பது போல நினைத்துக் கொண்டு ஜனநாயக மரபுகளை மீறி அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துள்ளார்.


தனிப்பட்ட நோக்கங்களை அடைய நினைக்கும் ஆளுனரின் செயல்பாடுகளையும், அரசு அனுப்பும் சட்டமுன்வடிவுகளில் முடிவெடுக்காமல் இருப்பதையும் கண்டிக்கிறோம் என அதில்  கூறப்பட்டுள்ளது. ஆனால் இதே சூழலில் ஆளுநர் தரப்பில் அரசியலமைப்புச் சட்டத்தின் 154, 163, 164-வது பிரிவுகளின் கீழ் ஒரு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரமுள்ளதெனவும் அதன்படி, வி.செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குகிறேன்.என ஆளுநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைக்காக மத்திய அட்டர்னி ஜெனரலை அணுகியுள்ளதால், இந்த உத்தரவை நிறுத்தி ஆனால், நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்பதால், செந்தில் பாலாஜிஅமைச்சராக நீடிப்பதை நான் ஏற்கவில்லை.


எனக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க மறுத்ததுடன், இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என அறிவிக்கை வெளியிட்டீர்கள். இது குறித்த கருத்துகளை தெரிவித்துள்ள உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு, அவர் வேறு ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது தொடரப்பட்டது. இதை அரசியல் பழிவாங்கல்

என்று கூற இயலாது. புதிய ஆட்சியில் அவர் மீண்டும் அமைச்சர் ஆகாமல் இருந்திருந்தால், 2021 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் புகார்தாரர்கள் சமரசம் செய்திருப்பார்களா என்பது தெரியாது.

நேர்மையான விசாரணைக்கு செந்தில் பாலாஜி இடையூறு விளைவிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், அமைச்சராக வைத்திருந்தீர்கள்.


இது, சிபிஐ, வருமான வரித்துறையை தடுத்து மிரட்டும் தைரியத்தை அவருக்கு அளித்தது.

உங்களுக்கு எனது அறிவுரையையும் மீறி அவரை பதவியில் நீடிக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது உங்கள் பாரபட்சத்தை காட்டுகிறது. அவர் அமைச்சராக நீடிப்பது, சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்துமோ என்ற நியாயமான அச்சம் ஏற்படுகிறது. இந்த சூழலில்,

அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164-வது பிரிவுகளின்கீழ் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு உண்டு 




இதுதொடர்பான நடவடிக்கைக்காக மத்திய அட்டர்னி ஜெனரலை அணுகியுள்ளதால், இந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வருக்கு இன்னொரு கடிதம் எழுதியுள்ளார் இதில் பொதுநீதி யாதெனில்: ஊழல் யார் செய்தாலும் குற்றமே .ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் அரசியல் சாசனம் தொடங்கி உச்ச நீதிமன்ற முன் தீர்ப்புகள் வரையில் எடுத்துக்காட்டி தங்களுக்கான உரிமைகள் குறித்து விவாதம் செய்கின்றனர்

இந்த உரிமை சாதாரண மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்று இவர்கள் யாரும் நிணைத்து கவலை படுவதில்லை.

பொதுமக்கள் சாதாரன விஷயத்திற்குக் கூட வருட கணக்கில் அலைந்து திரிகின்றனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.