முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முறைகேடான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரான முன்னால் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

 சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னால்  சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்  சி. விஜயபாஸ்கருக்கு


எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புத்துறை. விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரான டாக்டர் சி.விஜயபாஸ்கர்.திருவள்ளூர் மாவட்டம்  மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு  முறைகேடாகச்  சான்றிதழ் வழங்கியதாக உள்ள விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் மே மாதம்   குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். டாக்டர் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது மனைவி வி.ரம்யா மற்றும் இரண்டு மகள்களின்  பெயரில் ரூபாய் 58 கோடிக்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்


என டாக்டர் சி. விஜயபாஸ்கர் மீது  பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி    ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த ஆண்டில் சோதனையும்  நடத்திய நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

2011, மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடர்ந்து பல புகார்கள் வந்த நிலையில் அவர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு  மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர்  வழக்குப் பதிவு செய்தனர்.


முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 60 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர்  குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அவர் மற்றும் அவரது மனைவி வி.ரம்யாவின் மீதும்  பதிவு செய்யதுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில்  2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தி பல மாதங்களுக்குப் பிறகு புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் மே மாதம்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன் பேரில்   டாக்டர் சி.விஜய பாஸ்கர் மீது 216 பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேற்படி வழக்கில் நேற்று முன் தினம்  புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு தற்போது விசாரணை துவங்கியுள்ளது.   முதன்மை மாவட்ட நீதிபதி முன்பு நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். துணைக் கண்காணிப்பாளர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கலான குற்றப் பத்திரிக்கையில் 





 குற்றம் சாட்டப்பட்டவராக உள்ள  டாக்டர் C.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி வி.ரம்யாவும் உள்ள நிலையில் சம்மன் படி  ஆஜரானார். அவரது வக்கீல் ஆஜராக, மேலும்  கூடுதல் அரசு வக்கீல் எஸ்.ஜாய்ஸ் குமார் ஆஜராகி மனுவை தாக்கல் செய்ததன் படி . வழக்கு சம்மன் அவரது கைத் தொலைபேசிக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவலாக அனுப்பப்பட்டதாகவும், அதன் சேவை உறுதிசெய்யப்பட்டதாகவும், இலுப்பூரிலுள்ள அவரது முகவரியில் அவரது மனைவி வி    ரம்யா  இல்லாததால், சம்மனை அன்று இலுப்பூர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் கதவில் ஒட்டியதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ததாகவும் , மேலும், தங்கள் கோரிக்கையின் பேரில், இந்த நீதிமன்றத்தால், ஒப்புகை அட்டையுடன் பதிவுத் தபால் மூலமாகவும் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  வழக்கறிஞர் தெரிவித்த நிலைஇல்  நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான டாக்டர் சி.விஜயபாஸ்கர்  சார்பில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டாம் நபர் வி.ரம்யா தனது மனைவி என்றும், அவர் சென்னையில் வசிப்பதாகவும், அவருக்கு முதுகுத் தண்டுவடப் பிரச்சனை இருப்பதாகவும், அதனால் அவரால் உடனடியாக பயணம் செய்ய முடியாதென்றும், இனிமேல் இந்த நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரினார். இந்த மாத இறுதி வரை அவகாசம் அளிக்கக் கேட்ட நிலையில் ஏ.2 வான அவரது மனைவி வி.ரம்யாவுக்கு  சம்மன்  நீதிமன்றத்தால் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு, அதற்கான சேவைக்கான ஒப்புகை அட்டை இன்று வரை நீதிமன்றத்திற்கு வரவில்லை எனவும்  அரசுத் தரப்பு சமர்ப்பித்த அறிக்கையின் படி, சம்மன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு வி.ரம்யாவுக்கு வழிகாட்டுதல்கள் அறியப்பட்ட சட்டத்தின் மூலம் அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அது பொருத்தமான சேவையாக எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. அரசுத் தரப்பால் கோரப்பட்டபடி, ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பிப்பதன் மூலம் வி.ரம்யா முன்னிலையாக  நீதிமன்றம் தகுந்த நடவடிக்கைகளைத் தொடங்கலாம்் என அரசு தரப்பில் தெரிவித்த நிலையில் அவரது  கணவரான விஜயபாஸ்கர் சார்பில் அடுத்த விசாரணையில் ஆஜராக நீட்டித்த உறுதிமொழியையும், உடல்நிலையையும்   கருத்தில் கொண்டு அவரது மனைவி வி.ரம்யா ஆஜராக மேலும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுகோள் விடுத்த நிலையில் 29 ஆகஸ்ட் 2023 அன்று அவர் மனைவி வி.ரம்யா  ஆஜராக வேண்டும் என்றும்  . 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.     


 வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில் டாக்டா் சி.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ராப்பூசல் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர்.அவரது மனைவியுடன் சேர்ந்து அவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ரூபாய் 35.79 கோடி அளவுக்கு சொத்துக் குவித்துள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கலாகிறது.

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியின் தற்போதய  சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி வி.ரம்யா ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம் புதுக்கோட்டையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம்  22 ஆம் தேதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும்  இலஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

திரு.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் தனது மனைவியுடன் சேர்ந்து அவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ரூபாய் 35.79 கோடி அளவுக்கு சொத்துக் குவித்துள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை வருகிறது

இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988 ன் வெவ்வேறு பிரிவுகளின் படி  பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை துணைக்  கண்காணிப்பாளர் ஜி. இமயவர்மன் தலைமையிலான புதுக்கோட்டை பிரிவு, 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை துணை ஆவணங்களுடன் புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக டி.வி.ஏ.சி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

திரு.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் தனது மனைவியுடன் சேர்ந்து அவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ரூபாய் 35.79 கோடி அளவுக்கு சொத்துக் குவித்துள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை வருகிறது.

விஜயபாஸ்கர் முந்தைய அதிமுக அரசில் அமைச்சராக இருந்தபோது, ​​வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட சோதனை காலம் ஏப்ரல் 1, 2016 முதல் மார்ச் 31, 2021 வரை என ஊழல் தடுப்புத் துறை  வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணையின் போது, ​​மாநிலம் முழுவதும், 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, வழக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

குற்றப்பத்திரிகையுடன் சுமார் 10,000 பக்கங்கள் கொண்ட 800 ஆதார ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிந்த சட்ட வல்லுநர்கள் மூலம் வரும் தகவலாகும். ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர்  இமயவரம்பன், காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையிலான ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவலில் கடந்துபோன  ஐந்தாண்டுகளில் 51 கோடி ரூபாய்க்கான சொத்துகளை டாக்டர் சி.விஜயபாஸ்கர் சேர்த்துள்ளார். அதே சூழலில் வருமான வரித்துறையில் தனக்கு 58 கோடி ரூபாய்க்கு வருமானம் வந்ததாகவும்  கணக்கை தாக்கல் செய்துள்ளார். இச் சூழலில்  தனக்கு 34 கோடி ரூபாய்க்கு செலவினங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளதால், செலவினங்கள் போக நிகர வருமானமென்பது  24 கோடி ரூபாய் தான் இருந்துள்ளது. இதனை வைத்துக் கொண்டு அவர் எப்படி 51 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கினார் என்பது தான் இந்த சொத்துக்குவிப்பு  வழக்கின் சாராம்சம். இந்த 27 கோடி ரூபாய் வித்தியாசம் காரணமாகத்தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்ததாக முதல் தகவல் அறிக்கையும்  போடப்பட்டது," என்கிறார்கள் விபரம் அறிந்த சட்ட வல்லுனர்கள் .சொத்துகள் குறித்து அப்போதே டாக்டா் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில்  ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர்  

``ராசி புளூ மெட்டல்ஸ், ஸ்ரீவாரி ஸ்டோன்ஸ் என டாக்டர் சி.விஜயபாஸ்கருக்குச் சம்பந்தப்பட்ட பல நிறுவனங்கள் கணக்கு காட்டப்பட்டுள்ளதில் ஒரு சில நிறுவனங்களில் அவர் பங்குதாரராகவும்  இருக்கிறார். சில நிறுவனங்களில் முதலீடு மட்டுமே செய்துள்ளார். அவர் மனைவி ரம்யாவும் வி.பி.எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களில் பங்குதாரராக இருந்துள்ளதாகவும்  சொல்லப்பட்டுள்ளது. இது ஐந்தாண்டுகளில் 7 டிப்பர் லாரிகள், பி.எம்.டபுள்யூ கார், ஜே.சி.பி, மிக்ஸர் வாகனம் என பலவகையான வாகனங்களையும் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வாங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் 4 கோடி ரூபாய்க்கு விவசாய நிலமும், சென்னையில் பகீரதி அம்மன் சாலையில் 14 கோடி ரூபாய்க்கு வீடும் வாங்கியுள்ளது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது," என்றார் மூத்த சட்டவல்லுநர் ஒருவர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்