சிவ ஆலயங்களில் சைவ நெறி வளர்த்த மீனாட்சி சொக்கநாதர் அருளும் மதுரைக்கு
பொருள்கொண்ட வைணவர் ஒருவர் தக்காராக நியமனம்
தற்போது ஆச்சரியம் கலந்த பலரால் பேசப்படாத உண்மை இதற்கு முன்னிருந்து காலமான கருமுத்து கண்ணன் ஆவார் இவரது தந்தை ஆத்திக்காடு தெக்கூர் காலம்சென்ற கருமுத்து.தியாகராஜன் செட்டியாருக்கும் அவரது இரண்டாவது துனைவியார் மலையாளத்தில் பிறந்து வளர்ந்த ராதாவுக்கும் மகனாக வந்தவர் இருந்த போதும் தந்தை வழியில் சிவநெறி சைவராவார். அதற்கும் முன்னிருந்து காலமான இராங்கியம்- மிதிலைப்பட்டி கமலா தியேட்டர் வி என் .சிதம்பரம் செட்டியாரும் சைவராவார் ஆனால் தற்போது மதுரை அரசாளும் மீனாட்சியம்மன் ஆலயத்தின் தக்காராக வைணவரான TVS. ஐயங்காரின் பேத்தியான சோபனா ராமச்சந்திரன் நியமனம்
செய்யப்பட்டுள்ளார் பலர் அறியாத இதில் ஒரு உண்மை உண்டு மதுரை பாண்டியர்களிடமிருந்து அலாபுதீன் கீல்ஜியின் சேனாதிபதி மாலிக்காபூர் கைப்பற்றி பின் அவர்களின் பிரதிநிதிகளான சூல்தான்கள் ஆட்சியை கைப்பற்றிய விஜயநகர நாயக்கர்களில் விசுவநாத நாயக்கர் (1529 - 1564) முதல் துவங்கிய மதுரை நாயக்கர் ஆட்சி இறுதியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்த இராணி மீனாட்சி (1732 முதல் 1736 வரை ) ஆட்சி செய்த காலத்தில் தானே அரசி இங்கு எல்லாம் என பவனிவந்து அகங்கார ஆட்சி செய்த நிலையில் மதுரையைக் கைப்பற்றி ஆட்சிபுரியவே வந்தேன்” எனக் கூறிய சந்தாசாகிப் , நாயக்கர் அரசி மீனாட்சியைச் சிறைபிடித்த வரலாறு உண்டு, சிறையில் அடைக்கப்பட்ட அரசி மீனாட்சி, 1736 ஆம் ஆண்டில் விஷமருந்தித் தற்கொலை செய்தார். மதுரையை 207 ஆண்டுகள் ஆட்சி செய்த நாயக்கர் கால ஆட்சி, மீனாட்சியோடு முடிவுக்கு வந்தது. இதில் ஒரு உண்மை நாயக்கர்கள் ஆட்சியில் இருந்தாலும் சத்திரிய வைணவர்கள் ஆவார்கள் அவர்களுக்கே இந்த நிலை மதுரைக்கு ஒரு அரசி அது அன்னை அருளும் மீனாட்சி தான் இன்றும் அரசி
சந்தாசாகிபு கி.பி.1736. ஆம் ஆண்டில் மீண்டும் மதுரையைக் கைப்பற்றும் திட்டத்தோடு திருச்சிராப்பள்ளிக்கு வந்தான். மீனாட்சியோடு சாதுர்யமாகப் பேசி ஆட்சிப் பொறுப்பையும், படைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். திருச்சிராப்பள்ளிக் கோட்டையை வலுப்படுத்தினான். பங்காரு வசமிருந்த திண்டுக்கல்லை ஒரு பெரும்படை ஒன்றை அனுப்பிக் கைப்பற்றினான். பங்காரு தன் மகன் விசயகுமாரனுடன் சிவகங்கைக்கு ஓடி தஞ்சம் தேடி ஒளிந்து கொண்டான். பின்பு மதுரையை முழுக்கத் தன் வசமாக்கிக் கொண்ட சந்தாசாகிபு திருச்சி சென்று மீனாட்சி அரசியைச் சிறை செய்தான். மீனாட்சிக்கு அப்போதுதான் சந்தாசாகிபுவின் வஞ்சகம் தெரிந்தது. வஞ்சகனால் கொலையுண்டு சாவதைவிட, நஞ்சுண்டு இறப்பதே மேல் என்றெண்ணி, நஞ்சு குடித்து உயிர் துறந்தாள். மீனாட்சி அரசியோடு மதுரை நாயக்கர் பரம்பரை ஆட்சி மறைந்தது.மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் சொத்துக்களை இன்னும் அனுபவித்து வருபவர்கள் யார் எனப் பட்டியல் எடுக்கங்களேன்.
இவர்கள் பேசும் வர்ண பேதங்கள் மனு நீதிகள் ஊர் பேசும் நிலை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையருக்கு கூடுதலாக தக்கார் பொறுப்பு புதியவர் நியமிக்கப்படும் வரை வழங்கப்பட்டது.
புதிய இணை ஆணையர் கடந்த மாதங்களில் பொறுப்பேற்ற நிலையில்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மக்களும், வெளி நாட்டு மக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், ஏற்கனவே, இணை ஆணையர் நிலை பதவியிடத்தில் இருந்த மீனாட்சி அம்மன் கோவில், போதிய அலுவலர்கள் இல்லாததால் துணை ஆணையர் நிலை பதவியிடத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இறக்கப்பட்டன. இதனால், கோவில் நிர்வாகப் பணிகளை துணை ஆணையர் நிலையிலான அலுவலர் மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் மீனாட்சி அம்மன் கோவில் மீண்டும் இணை ஆணையர் நிலைக்கு உயர்த்தப்பட்டன.இதற்கிடையே, எஸ்.கிருஷ்ணன் என்பவரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இந்து சமய அறநிலையத் துறை நியமித்ததுள்ளது. இதையடுத்து, அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையராக நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.கோவில் அலுவல் சார் தக்கார் நியமனம்
இந்தநிலையில் மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக இருந்து வந்த கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த 23-ந்தேதி காலமானார். இதனால் தக்கார், அறங்காவலர் குழு இல்லாமல் கோவிலின் வளர்ச்சிக்கு எந்தவித தீர்மானங்கள், வங்கிப் பண பரிவர்த்தனைகள், கருவூல நகைகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், அவசர அவசியத்திற்கு நகைகள் எடுக்க இயலாமலும், உண்டியல் பூட்டு சாவிகள் ஒரு செட் தக்காரிடம் உள்ளதால், உண்டியல் திறக்க இயலாத சூழ்நிலை இருந்து வந்தது.எனவே கோவிலின் அன்றாடப் பணிகள் எவ்வித இடையூறுமின்றி நடைபெற நிர்வாக நலன் கருதி புதிய பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர் குழு நியமனம் செய்யும் வரை அரசு விதிகளுக்கு உட்பட்டு, கோவில் இணை ஆணையர் மீனாட்சி அம்மன் கோவிலின் அலுவல்சார் தக்கராக செயல்படுகிற நிலையில் தற்போது சோபனா ராமசயசந்திரன் நியமிக்கப் பட்டுள்ளார்.
கருத்துகள்