பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா(வயது16) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்,
12 ஆம் வகுப்பில் படித்து வந்த லாரா மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில்,
சென்னை, டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3 மணியளவில் மன அழுத்தம் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாலை 3 மணியளவில் இவர் மின்விசிறியின் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்…விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்றிரவு அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் உறங்கச் சென்றுள்ளார். இன்று அதிகாலை விஜய் ஆண்டனி தனது மகளின் படுக்கை அறைக்குச் சென்று பார்த்த போது, அவரது மகள் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், வீட்டிலுள்ள பணியாளர்கள் உதவியுடன் மீட்டு உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். அது தொடர்பாக ஆழ்வார்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் உயிரிழந்த மீராவின் உடலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் காவல்துறையின் முதற் கட்ட விசாரணையில் நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் மீரா அவரது தோழிகளை சந்திப்பதற்காக வெளியில் சென்றதாகத் தகவல் வெளியானது. பின்னர், இரவு வீட்டிற்கு வந்து உணவு உண்ட பின் படுக்கையரைக்கு சென்றவர் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மீரா கடந்த ஒரு வருட காலமாக ஆழ்வார்பேட்டையிலுள்ள மருத்துவமனையில் மன அழுத்தத்திற்கான ஆலோசனைகளையும், சிகிச்சையும் எடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் மருத்துவ ஆலோசனைகள் கொடுத்த மருத்துவரிடமும், நேற்று வெளியே சென்று சந்தித்த தோழிகளிடம் ஏதாவது கூறினாரா ? என்றும் காவல்துறை விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் எனவும் தெரிகிறது. மேலும் தடயவியல் நிபுணர்கள் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு கைரேகை மற்றும் தடயங்களைச் சேகரித்து இது தற்கொலை தானா என்ன உறுதி செய்வதற்கு ஆய்வுகளைச் செய்தனர்.
மீரா மறைவால் திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், நடிகர் சந்தானம், நடிகை குஷ்பு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு நேரில் சென்றும், மேலும் பல பிரபலங்கள் எக்ஸ் தளத்திலும் இரங்கலைத் தெரிவித்தனர், இந்த நிலையில் குழந்ரைகள் பாதுகாப்பு நல அமைப்பு வெளியிட்ட அறிக்கை வருமாறு : பரிதாபமாகத் தற்கொலை செய்து கொண்ட அந்த இளம்பெண்ணின் புகைப்படம் வெளியானது குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைக் கண்காணிப்பகம் (TNCRW) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நமது சமூகத்தில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிப் புகாரளிக்கும் பொறுப்பு செய்தி நிறுவனங்களுக்கு உண்டு என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், ஆனால் அத்தகைய படத்தை வெளியிடுவதன் நெறிமுறை மற்றும் சட்டரீதியான மாற்றங்களைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்குத் தெரியும், சம்பந்தப்பட்ட இளம் பெண் (தமிழ் இசை இயக்குனரின் மகள்) மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, இறுதியில் தற்கொலை செய்து கொண்டார், மனநலம் மற்றும் அதிக விழிப்புணர்வு மற்றும் ஆதரவு தேவை என்பதை வலியுறுத்தினார்.இருப்பினும், அவள் ஒரு செய்தி மட்டும் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்; அவள் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு மனிதப் பிறவி. இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயத்தில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது பச்சாதாபம் இல்லாதது மட்டுமின்றி சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 ஐ மீறுவதாகும். சிறார் நீதிச் சட்டம், 2015, தற்கொலை உட்பட எந்தவிதமான துஷ்பிரயோகம் அல்லது குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்ட சிறார்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதை வெளிப்படையாகத் தடைசெய்கிறது. என்பதே சில ஊடகங்கள் புரிந்து கொள்ளாத நிலை
கருத்துகள்