முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா முழுமைக்கும் டிஜிட்டல் இ-கோர்ட் முழுமை பெறுமா

இந்தியா முழுமைக்கும் டிஜிட்டல் இ-கோர்ட் முழுமையாக அமலுக்கு வருமா


என்பதே தற்போது பலருக்கும் எழும் ஐயம் தற்போது நடக்கும் வழக்கறிஞர்களின் நீதிமன்றப்பணி புறக்கணிப்பு தான் பேசு பொருள்          தற்போதுள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 60 லட்சம் வழக்குகளின் ஆவணங்களுக்ணகான 24 கோடி பக்கங்களை, ரூபாய்.1 கோடி செலவில்  மூன்றாண்டுகளில் ஸ்கேன் செய்யும் பணி நடக்கிறது. தினமும் 2 லட்சம் பக்கங்கள் ஸ்கேன் செய்யப்படுகின்றன.


தற்போது வரை 1 கோடி பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதில் நடிகவேள் எம்.ஆர்.ராதா வழக்கு, முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு உள்ளிட்ட  முக்கிய வழக்கு ஆவணங்களும் அடங்கும்.

வழக்குகளை தாக்கல் செய்து அதை நம்பராக்கவே நாள் கணக்கில் தவமிருக்க வேண்டிய நிலை உள்ளதால்  வழக்கறிஞர்கள் - டிஜிட்டல் இ-கோர்ட்’ முழுமையாக அமலுக்கு வருமா? என்ற நிலையில் போராட்டம் செய்யும் சூழலில் தள்ளப்பட்டதால் 



நாட்டிலுள்ள  கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை நம்பராக்கவே நீதிபதிகளின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்த பின் நாள் கணக்கில் தவம் கிடக்க வேண்டிய சூழலுக்கு வழக்கறிஞர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியின் விருப்பப்படி இதுவும் ஒரு ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாகவே எல்லோரும் பார்க்கும் நிலை உள்ளது, தமிழ்நாட்டில் காகிதப் பயன்பாடு இல்லாத இ-கோர்ட்’ முறையை விரைவில் முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கையும்  வலுத்துவருகிறது.



உச்ச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ‘பேப்பர்-லெஸ் எனும் காகிதமில்லா  டிஜிட்டல் இ-கோர்ட்டுகளாக’ மாற்றுவதில் கவனம் செலுத்துகிறார். இதற்காக சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள் தேர்வு செய்யப்பட்டு, இப்பணிகளும்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியிலுள்ள 1,266 கீழமை நீதிமன்றங்களில், 250 நீதிபதிகளுன் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதேபோல, 5,000 நீதித் துறையில் இதர பணியிடங்களும் காலியாகவே உள்ளன. அதனால் தமிழகத்தில் 13 லட்சம் வழக்குகளும், புதுச்சேரியில் 32 ஆயிரம் வழக்குகளும் நிலுவையிலுள்ளன.

அதுகுறித்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது,


தற்போது வழக்குகளை நேரடியாக தாக்கல் செய்வதைத் தவிர்த்து, ‘இ-பைலிங்’ மூலமாக ஆன்லைனில் தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். பொதுவாக இ-கோர்ட் நடைமுறையை வரவேற்பது காலத்தின் கட்டாயமாகும்.

எனினும், இதற்கான முறையான பயிற்சி வழக்கறிஞர்களுக்கும், நீதித் துறை ஊழியர்களுக்கும் அளிக்கப்படவில்லை. இதனால் பல கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் நடைமுறை இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. பழைய முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் போது, கீழமை நீதிமன்றங்களில் பல்வேறு இடர்பாடுகளை வழக்கறிஞர்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இ-கோர்ட் நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்றார்.





மேலும் மற்றொரு மூத்த வழக்கறிஞர்  கூறும்போது, “கடந்த ஓராண்டாக கீழமை நீதிமன்றங்களில் 20 ஆயிரம் வழக்குகளும், உயர் நீதிமன்றத்தில் 1,000 வழக்குகளும் இ-ஃபைலிங் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் இ-கோர்ட் மற்றும் இ-ஃபைலிங் முறை அனைத்து நீதிமன்றங்களிலும் அமல்படுத்தப்பட்டால், பக்கம், பக்கமாக வழக்கு ஆவணங்களை தட்டச்சு செய்து, இன்டெக்ஸ், வக்காலத்து நாமா, கோர்ட் பீஸ் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து, நீதிமன்றத்தில் அவசர கதியில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. பொருள் விரயம் மட்டுமின்றி, காலவிரயமும் தவிர்க்கப்படும். நீதிமன்றத்தின் செரஸ்தாரை நேரில் சந்திக்க வேண்டிய நிலை வராது 



அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றினால், நீதிமன்றப் பணியாளர்கள் அவற்றை சரிபார்த்து, உடனே நம்பர் இட்டு, வழக்கை உடனடியாக கோப்புக்கு எடுத்து விடுவர். அதில் ஏதாவது திருத்தம் இருந்தால், திருப்பி அனுப்புவர். இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், வழக்கு ஆவணங்களின் நிலை என்ன என்பதை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். வழக்குகளை நம்பராக்கவே மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது. வழக்கறிஞர்களின் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை மேலோங்கும். வழக்கு நடத்தும் வழக்கறிஞர் பணி என்பது ஒரு சேவைத் தொழில் 


எனவே, மெதுவாக நடைபெற்று வரும் இப்பணிகளை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தனிக் கவனம் செலுத்தி துரிதப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.                  32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் நிலுவை: தமிழகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பெண் வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில் "குடும்ப வன்முறைச் சட்ட தடுப்பு வழக்குகளை" மகளிர் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல் படி தற்போது உள்ள நடைமுறையில் தாக்கல் செய்து படிவம் 1,2,3 ஆகியவை வழங்குவதில் விரைவில் நம்பராகத நிலை இனி இ.கேர்ட் தாக்கல் செய்யும் முறை வந்தால் விரைவில் நடக்கும் மேலும் நீதிமன்றத்தில் பணியாளர்கள் சிலர் செய்து வரும்  வழக்கின் கட்டை ஒழித்து வைப்பது உள்ளிட்ட ஊழல்கள் குறையும்   பரஸ்பர விவாகரத்துக் கோரும் வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வுகாண வேண்டுமென்று  உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், புறநகர் பகுதிகளிலுள்ள கீழமை நீதிமன்றங்களில் பரஸ்பர விவாகரத்து கோரும் வழக்குகளுக்கு நம்பர் கொடுப்பதிலும் கூட தேவையற்ற காலதாமதம் செய்வதால், இளம் பெண்கள் பலரின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகிறது. இதுபோன்ற வழக்குகளால் அவர்கள் வெளிநாடு செல்வது போன்றவற்றிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனத தெரிவித்தனர்,  இதில் பொதுநீதி இ- பைலிங் முறையில் வழக்கை தாக்கல் செய்வது சிறந்த நேர்மையான ஊழலில்லாத நடவடிக்கையாகும் எனவே அதைக்கண்டு அஞ்சுவது சில ஊழல் வாதிகளும் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் பிழைப்பு சாதிகளும் தான் ஆகவே இ- பைலிங் முறை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் செயல் வரவேற்கத்தக்கதேயாகும் . மக்கள் நலன் பயக்கும் எதுவும் பப்ளிக் ஜஸ்டிஸ் வரவேற்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்