முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா முழுமைக்கும் டிஜிட்டல் இ-கோர்ட் முழுமை பெறுமா

இந்தியா முழுமைக்கும் டிஜிட்டல் இ-கோர்ட் முழுமையாக அமலுக்கு வருமா


என்பதே தற்போது பலருக்கும் எழும் ஐயம் தற்போது நடக்கும் வழக்கறிஞர்களின் நீதிமன்றப்பணி புறக்கணிப்பு தான் பேசு பொருள்          தற்போதுள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 60 லட்சம் வழக்குகளின் ஆவணங்களுக்ணகான 24 கோடி பக்கங்களை, ரூபாய்.1 கோடி செலவில்  மூன்றாண்டுகளில் ஸ்கேன் செய்யும் பணி நடக்கிறது. தினமும் 2 லட்சம் பக்கங்கள் ஸ்கேன் செய்யப்படுகின்றன.


தற்போது வரை 1 கோடி பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதில் நடிகவேள் எம்.ஆர்.ராதா வழக்கு, முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு உள்ளிட்ட  முக்கிய வழக்கு ஆவணங்களும் அடங்கும்.

வழக்குகளை தாக்கல் செய்து அதை நம்பராக்கவே நாள் கணக்கில் தவமிருக்க வேண்டிய நிலை உள்ளதால்  வழக்கறிஞர்கள் - டிஜிட்டல் இ-கோர்ட்’ முழுமையாக அமலுக்கு வருமா? என்ற நிலையில் போராட்டம் செய்யும் சூழலில் தள்ளப்பட்டதால் 



நாட்டிலுள்ள  கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை நம்பராக்கவே நீதிபதிகளின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்த பின் நாள் கணக்கில் தவம் கிடக்க வேண்டிய சூழலுக்கு வழக்கறிஞர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியின் விருப்பப்படி இதுவும் ஒரு ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாகவே எல்லோரும் பார்க்கும் நிலை உள்ளது, தமிழ்நாட்டில் காகிதப் பயன்பாடு இல்லாத இ-கோர்ட்’ முறையை விரைவில் முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கையும்  வலுத்துவருகிறது.



உச்ச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ‘பேப்பர்-லெஸ் எனும் காகிதமில்லா  டிஜிட்டல் இ-கோர்ட்டுகளாக’ மாற்றுவதில் கவனம் செலுத்துகிறார். இதற்காக சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள் தேர்வு செய்யப்பட்டு, இப்பணிகளும்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியிலுள்ள 1,266 கீழமை நீதிமன்றங்களில், 250 நீதிபதிகளுன் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதேபோல, 5,000 நீதித் துறையில் இதர பணியிடங்களும் காலியாகவே உள்ளன. அதனால் தமிழகத்தில் 13 லட்சம் வழக்குகளும், புதுச்சேரியில் 32 ஆயிரம் வழக்குகளும் நிலுவையிலுள்ளன.

அதுகுறித்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது,


தற்போது வழக்குகளை நேரடியாக தாக்கல் செய்வதைத் தவிர்த்து, ‘இ-பைலிங்’ மூலமாக ஆன்லைனில் தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். பொதுவாக இ-கோர்ட் நடைமுறையை வரவேற்பது காலத்தின் கட்டாயமாகும்.

எனினும், இதற்கான முறையான பயிற்சி வழக்கறிஞர்களுக்கும், நீதித் துறை ஊழியர்களுக்கும் அளிக்கப்படவில்லை. இதனால் பல கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் நடைமுறை இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. பழைய முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் போது, கீழமை நீதிமன்றங்களில் பல்வேறு இடர்பாடுகளை வழக்கறிஞர்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இ-கோர்ட் நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்றார்.





மேலும் மற்றொரு மூத்த வழக்கறிஞர்  கூறும்போது, “கடந்த ஓராண்டாக கீழமை நீதிமன்றங்களில் 20 ஆயிரம் வழக்குகளும், உயர் நீதிமன்றத்தில் 1,000 வழக்குகளும் இ-ஃபைலிங் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் இ-கோர்ட் மற்றும் இ-ஃபைலிங் முறை அனைத்து நீதிமன்றங்களிலும் அமல்படுத்தப்பட்டால், பக்கம், பக்கமாக வழக்கு ஆவணங்களை தட்டச்சு செய்து, இன்டெக்ஸ், வக்காலத்து நாமா, கோர்ட் பீஸ் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து, நீதிமன்றத்தில் அவசர கதியில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. பொருள் விரயம் மட்டுமின்றி, காலவிரயமும் தவிர்க்கப்படும். நீதிமன்றத்தின் செரஸ்தாரை நேரில் சந்திக்க வேண்டிய நிலை வராது 



அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றினால், நீதிமன்றப் பணியாளர்கள் அவற்றை சரிபார்த்து, உடனே நம்பர் இட்டு, வழக்கை உடனடியாக கோப்புக்கு எடுத்து விடுவர். அதில் ஏதாவது திருத்தம் இருந்தால், திருப்பி அனுப்புவர். இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், வழக்கு ஆவணங்களின் நிலை என்ன என்பதை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். வழக்குகளை நம்பராக்கவே மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது. வழக்கறிஞர்களின் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை மேலோங்கும். வழக்கு நடத்தும் வழக்கறிஞர் பணி என்பது ஒரு சேவைத் தொழில் 


எனவே, மெதுவாக நடைபெற்று வரும் இப்பணிகளை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தனிக் கவனம் செலுத்தி துரிதப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.                  32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் நிலுவை: தமிழகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பெண் வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில் "குடும்ப வன்முறைச் சட்ட தடுப்பு வழக்குகளை" மகளிர் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல் படி தற்போது உள்ள நடைமுறையில் தாக்கல் செய்து படிவம் 1,2,3 ஆகியவை வழங்குவதில் விரைவில் நம்பராகத நிலை இனி இ.கேர்ட் தாக்கல் செய்யும் முறை வந்தால் விரைவில் நடக்கும் மேலும் நீதிமன்றத்தில் பணியாளர்கள் சிலர் செய்து வரும்  வழக்கின் கட்டை ஒழித்து வைப்பது உள்ளிட்ட ஊழல்கள் குறையும்   பரஸ்பர விவாகரத்துக் கோரும் வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வுகாண வேண்டுமென்று  உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், புறநகர் பகுதிகளிலுள்ள கீழமை நீதிமன்றங்களில் பரஸ்பர விவாகரத்து கோரும் வழக்குகளுக்கு நம்பர் கொடுப்பதிலும் கூட தேவையற்ற காலதாமதம் செய்வதால், இளம் பெண்கள் பலரின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகிறது. இதுபோன்ற வழக்குகளால் அவர்கள் வெளிநாடு செல்வது போன்றவற்றிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனத தெரிவித்தனர்,  இதில் பொதுநீதி இ- பைலிங் முறையில் வழக்கை தாக்கல் செய்வது சிறந்த நேர்மையான ஊழலில்லாத நடவடிக்கையாகும் எனவே அதைக்கண்டு அஞ்சுவது சில ஊழல் வாதிகளும் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் பிழைப்பு சாதிகளும் தான் ஆகவே இ- பைலிங் முறை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் செயல் வரவேற்கத்தக்கதேயாகும் . மக்கள் நலன் பயக்கும் எதுவும் பப்ளிக் ஜஸ்டிஸ் வரவேற்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...