முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் தொடங்கி வைத்த 141-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வு

மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்


“ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளது- 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்தியா தீவிரம் காட்டும். இதுதான் 140 கோடி இந்தியர்களின் கனவு”


“2029-ம் ஆண்டு நடைபெற உள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டியை நடத்தவும் இந்தியா ஆர்வமாக உள்ளது”

"இந்தியர்கள் விளையாட்டு பிரியர்கள் மட்டுமல்ல - நாங்களும் அதை வாழ்வோடு இணைந்த அம்சமாகப் பார்க்கிறோம்"


"இந்தியாவின் விளையாட்டு பாரம்பரியம் முழு உலகிற்கும் சொந்தமானது"

"விளையாட்டில் தோற்றவர்கள் இல்லை - வெற்றியாளர்கள் மற்றும் கற்றவர்கள் மட்டுமே உள்ளனர்"

"இந்தியாவில் விளையாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்"



“ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐஓசி நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. விரைவில் சாதகமான செய்தி வரும் என்று நம்புகிறோம்.”

பிரதமர் திரு நரேந்திர மோடி மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐஓசி) அமர்வை இன்று தொடங்கி வைத்தார். விளையாட்டு தொடர்பான பல்வேறு தரப்பினரிடையே கலந்துரையாடல் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வாய்ப்பை இந்த அமர்வு வழங்குகிறது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றி குறித்து அவர் பார்வையாளர்களிடம் தெரிவித்தார். இந்த வரலாற்று வெற்றிக்காக இந்திய அணிக்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக விளையாட்டு இருந்து வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் கிராமங்களுக்குச் செல்லும்போது, விளையாட்டு இல்லாமல் எந்தவொரு பண்டிகையும் முழுமையடையாது என்று பிரதமர் கூறினார். இந்தியர்கள் வெறும் விளையாட்டு பிரியர்கள் மட்டுமல்ல, என்றும் அதை வாழ்வின் ஒரு அங்கமாக கருதுவதாகவும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றில் விளையாட்டு கலாச்சாரம் பிரதிபலிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். சிந்து சமவெளி நாகரிகம், வேத காலம் அல்லது அதற்குப் பிந்தைய சகாப்தம் எதுவாக இருந்தாலும், இந்தியாவின் விளையாட்டுப் பாரம்பரியம் மிகவும் செழிப்பாக இருந்தது என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். குதிரையேற்றம், நீச்சல், வில்வித்தை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் உட்பட 64 வகை விளையாட்டுகளில் இந்தியர்கள் தேர்ச்சி பெற்றிருந்த்தாகவும், அவற்றில் சிறந்து விளங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வில்வித்தை விளையாட்டைக் கற்றுக்கொள்வதற்காக 'தனுர் வேத சம்ஹிதா' வெளியிடப்பட்டது என்று அவர் கூறினார். அதில் தனுஷ்வன், சக்ரா, பாலா, வாள்வீச்சு மற்றும் மல்யுத்தம் ஆகிய 7 திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் இந்த பழங்கால விளையாட்டு பாரம்பரியத்திற்கான அறிவியல் சான்றுகளை பிரதமர் விளக்கினார். தோலாவிரா யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தை குறிப்பிட்ட அவர், 5000 ஆண்டுகள் பழமையான இந்த நகரத்தின் நகர்ப்புற திட்டமிடலில் விளையாட்டு உள்கட்டமைப்பு குறித்து பேசினார். அகழ்வாராய்ச்சியில், இரண்டு அரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன எனவும் அவற்றில் ஒன்று அந்த நேரத்தில் உலகின் பழமையான மற்றும் பெரிய அரங்கமாக இருந்தது என்றும் பிரதமர் கூறினார். இதேபோல், ராக்கி கர்ஹியில் விளையாட்டு தொடர்பான கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் இந்த விளையாட்டுப் பாரம்பரியம் முழு உலகிற்கும் சொந்தமானது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

விளையாட்டில் தோல்வி அடைந்தவர்கள் யாரும் இல்லை எனவும் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அதன் மூலம் கற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார். விளையாட்டின் மொழியும் உணர்வும் உலகளாவியவை என்று அவர் தெரிவித்தார். விளையாட்டு என்பது வெறும் போட்டி அல்ல எனவும் விளையாட்டு மனிதகுலத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் கூறினார். அதனால்தான் உலக அளவில் சாதனைகள் கொண்டாடப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற 'வசுதைவ குடும்பகம்' என்ற உணர்வையும் விளையாட்டு வலுப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவில் விளையாட்டுகளின் வளர்ச்சிக்கான அண்மைக்கால நடவடிக்கைகளையும் பிரதமர் பட்டியலிட்டார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள், நாடாளுமன்ற உறுப்பினர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அடுத்து நடைபெறவிருக்கும் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் விளையாட்டில் ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் கவனம் செலுத்தப்படுவதாக பிரதமர் எடுத்துரைத்தார்.

விளையாட்டு உலகில் இந்தியாவின் பிரகாசமான செயல்திறனுக்கு அரசின் முயற்சிகள் முக்கிய காரணம் என பிரதமர் கூறினார். ஒலிம்பிக்கின் கடந்த போட்டியில் பல விளையாட்டு வீரர்களின் அற்புதமான செயல்திறனை நினைவுகூர்ந்த அவர், சமீபத்தில் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த செயல்திறன் மற்றும் உலக பல்கலைக்கழக விளையாட்டுகளில் இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர்கள் செய்த புதிய சாதனைகள் என பலவற்றை எடுத்துரைத்தார். நேர்மறையான மாற்றங்கள் இந்தியாவில் வேகமாக மாறிவரும் விளையாட்டுத் திறனின் அடையாளம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான திறனை இந்தியா வெற்றிகரமாக நிரூபித்துள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். 186 நாடுகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பைப் போட்டி, ஹாக்கி உலகக் கோப்பை, மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற உலகளாவிய போட்டிகளை அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் போட்டியை இந்தியா நடத்துகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக சங்கத்தின் (ஐ.ஓ.சி) நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வேகமாக விரிவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பு காரணமாக உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளது என்று கூறினார். நாட்டின் 60 க்கும் மேற்பட்ட நகரங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்ட ஜி 20 உச்சிமாநாடு தொடர்பான நிகழ்ச்சிகளை உதாரணமாக அவர் கூறினார். இது ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் ஒழுங்கு மற்றும் திறனுக்கு சான்றாகும் என்று அவர் கூறினார். இந்தியாவின் 140 கோடி மக்களின் நம்பிக்கையை பிரதமர் எடுத்துரைத்தார்

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளது என அவர் கூறினார். 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்துவதற்கான தயாரிப்புப் பணிகளில் இந்தியா உள்ளது என்றும் இது 140 கோடி இந்தியர்களின் கனவு என்றும் பிரதமர் கூறினார். அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் இந்த கனவை நிறைவேற்ற தேசம் விரும்புகிறது என்று அவர் கூறினார். 2029 ஆம் ஆண்டில் நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக்கை நடத்தவுமே இந்தியா ஆர்வமாக உள்ளது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.சி) இந்தியாவுக்கு தொடர்ந்து தமது ஆதரவை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வதற்கானது மட்டுமல்ல, என்றும் இதயங்களை வெல்வதற்கான ஒரு ஊடகமாகும் எனவும் பிரதமர் கூறினார். விளையாட்டு அனைவருக்கும் சொந்தமானது என்று கூறிய அவர் இது சாம்பியன்களை தயார் செய்வது மட்டுமல்லாமல், அமைதி, முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது என்று கூறினார். எனவே, விளையாட்டு உலகை ஒன்றிணைக்கும் மற்றொரு ஊடகமாகும் என அவர் குறிப்பிட்டார். பிரதிநிதிகளை மீண்டும் வரவேற்ற பிரதமர், கூட்டம் தொடங்குவதாக அறிவித்தார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பச், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் நீதா அம்பானி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

பின்னணி

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) உறுப்பினர்களின் முக்கிய கூட்டமாக ஐஓசி அமர்வு அமைந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் ஐஓசி கூட்ட அமர்வுகளில் எடுக்கப்படுகின்றன. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இரண்டாவது முறையாக ஐஓசி அமர்வை நடத்தியுள்ளது. ஐஓசி-யின் 86 வது அமர்வு 1983 ஆம் ஆண்டில் புதுதில்லியில் நடைபெற்றது.

இந்தியாவில் நடைபெறும் இந்த 141 வது ஐஓசி அமர்வு, உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், விளையாட்டுகளின் சிறப்பைக் கொண்டாடுவதற்கும், ஒலிம்பிக் லட்சியங்களை அடைவதற்கும் நாட்டிற்கு உள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இது விளையாட்டு தொடர்பான பல்வேறு தரப்பினரிடையே தகவல் தொடர்பு மற்றும் அறிவு பகிர்வுக்கான வாய்ப்பை வழங்குகிறது.

இந்த அமர்வில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் திரு தாமஸ் பச் மற்றும் ஐஓசி-யின் பிற உறுப்பினர்கள், இந்திய விளையாட்டுத் துறையின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...