ரூபாய்.25 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய பெண் துணை வட்டாட்சியர் கைது
நஞ்சை நிலத்தை தரிசாக மாற்றித் தர ரூபாய்.25 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய பெண் துணை வடடாட்சியரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தைக்கு அருகிலுள்ள கண்டன்விளை மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரியின் அக்காள் மகன் ராகுல் (வயது 27), வெல்டிங் வேலை செய்கிறார். இவருக்கு கண்டன்விளையில் 7 சென்ட் நிலமுள்ளதில் அவர் வீடு கட்டுகிற நிலையில் அந்த இடம் விவசாய நிலமாக இருப்பதால் வரைபட அனுமதி பெறுவதற்கு முடியவில்லை. அதனையடுத்து விவசாய நஞ்சை நிலத்தை தரிசு நிலமாக மாற்றித்தருவதற்காக வருவாய்த்துறையிடம் ராகுல் விண்ணப்பித்தார்.பின்னர் சம்பந்தப்பட்ட நிலத்தை குரூப் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பிர்க்கா வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்து அதன் கோப்புகளை கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பிய நிலையில் அவரது விண்ணப்ப மனு தொடர்பான விவரத்தை துணை வட்டாட்சியர் ருக்மணி (வயது 45) விசாரணை நடத்தாமல் நீண்ட காலம் கிடப்பில் போட்டுள்ளார்.
அதனை அறிந்த ராகுலின் சித்தி ஜெகதீஸ்வரி, துணை வட்டாட்சியர் ருக்மணியைச் சந்தித்து ராகுலின் விண்ணப்ப மனுவுக்கு உரிய தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அதற்கு அவர் ரூபாய்.25 ஆயிரம் லஞ்சமாக கொடுக்கும்படி கேட்டுள்ளார். உடனே ஜெகதீஸ்வரி பணம் ஏற்பாடு செய்வதாகக் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு
லஞ்சம் கொடுக்க மனமில்லாத நிலையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.25 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகளைக் கொண்டுவந்த ஜெகதீஸ்வரியிடம் அரசு தரப்பில் சாட்சியின் முன்னிலையில் வழங்கிய ஊழல் தடப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்தப் பணத்தை துணை வட்டாடயசியர் ருக்மணியிடம் சென்று கொடுக்கும் படி தெரிவித்ததன் படி நேற்று மதியம் 12.40 மணிக்கு தாலுகா அலுவலகம் வந்த ஜெகதீஸ்வரி, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனை கூறியபடி துணை வட்டாட்சியர் ருக்மணியிடம் அரசு சாட்சி உடன் சென்று ரூபாய்.25 ஆயிரத்தை கொடுத்ததனை அவர் வாங்கிக் கொண்ட நிலையில் அங்கு ஏற்கனவே மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் ஆய்வாளர் சிவசங்கரி, சா்பு ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்து துணை வட்டாடயசியர் ருக்மணியை லஞ்சமய வாங்கிய கையுடன் பிடித்தனர்.
பின்னர் அவரிடமிருந்த Wasn't .25 ஆயிரம் இலஞ்சப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சோடியம் கார்பனைட் கரைசல் பரிசோதனை முடிவில் வேறு யாரிடமும் இவர் லஞ்சம் வாங்கியுள்ளாரா? என கணக்கு விவரங்களையும் சரிபார்த்தனர். சுமார் 6 மணி நேரம் ஆய்வுகள் நடந்தது.
மேலும் இதுதொடர்பாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் துணை தாசில்தார் சிக்கிய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பானது.
கருத்துகள்