இயக்குநரும், நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் பிள்ளை காலமானார்.
அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வெள்ளளூர் அருகிலுள்ள பழையூர்பட்டி கிராமத்திலுள்ள அவரது வீட்டில் இன்று காலை 6.30 மணிக்கு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 84 , இருபது வருடம் முன்பு வரை கோட்டநத்தம்பட்டியில் லெட்சுமி டூரிங் தியேட்டரில் ஆப்பரேட்டராகப் பணியாற்றியவராவார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றவர் பலனில்லாமல் உயிரிழந்தார். இறுதிச் சடங்குகள் அவர் சொந்த ஊரில் நடைபெறுமெனக்கூறப்படுகிறது. இந்த நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,காலம்சென்ற பாண்டியன் மனைவி கமலா பழையூர்பட்டி ஊராட்சி தொடக்கப் பள்ளியின் ஆசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.
அவர்களுக்கு இரண்டு மகள்களும். ஒருமகன் சேரனும் சிறு வயதில் நம்மோடு அறிமுகம் ஆன நபர் பல நாடகங்களிலும் நடித்துள்ளார். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், 19 ஜீன் 2011 ஆம் தேதியன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்ட இரண்டு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவராவார்.
கருத்துகள்