தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
தேர்தல் பத்திரச் சட்டத்திற்கெதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ச்சியாக விசாரணை நடத்தியது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட நிதிகள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில்; தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது. தேர்தல் பத்திரங்கள் மூலம் முறைகேடு நடைபெறுவதாக. நான்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிய நிலையில் அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதமாகும், தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். தேர்தல் பத்திரங்கள் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களைத் தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாகும். தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், ஐ.டி. சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். 2019 ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிட எஸ்.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்கொடை கொடுத்தோர் விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் ஏப்ரல் மாதம் .13-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டுமென்றும் உத்தரவில் தெரிவிக்கபப்ட்டது.அரசிடம் கணக்குக் கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்குள்ளது என்பதை பல சமயங்களில் நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களைத் தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரித் திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பல நிறுவனங்களிடமிருந்து பாரதிய ஜனதா கட்சி ரூபாய் .5271 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூபாய்.952 கோடியும் நன்கொடை பெற்றுள்ளது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள்