முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வழக்கறிஞர்கள் அறிவதற்கு மூத்த வழக்கறிஞர் கே எம் முருகப்பன் விடுத்த வேண்டுகோள்

வழக்கறிஞர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோர் அறிவதற்கு மூத்த வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோள்.


உங்களுக்கு நேரடியாக அறிமுகம் இல்லாத எந்த கட்சிக்காரராக இருந்தாலும் , தொலைபேசியில் ஆலோசனை சொல்லாதீர்கள்..

எவனோ செலவு செய்கிறான் என்றோ உங்கள் அந்தஸ்தை அடுத்தவனுக்குக் காட்ட நட்சத்திர ஹோட்டல் சந்திப்புகளைத் தவிருங்கள்.. பின்னால் நீங்கள் அவனோடு சாப்பிட்டதும் , குடித்ததும் என்று ஒரு மூத்த வழக்கறிஞருக்கு நேர்ந்தது போல CCTV  பதிவுகள் வரலாம் 

அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனது இடத்துக்கு ஆலோசனை செய்யப் போகாதீர்கள்..  அங்கேயும் CCTV உண்டு.


அப்புறம் முக்கியமாக பந்தா காட்டுவதாக நினைத்து, எனது கணக்கில் பணம் போடு என்ற முட்டாள்தனத்தை செய்ய வேண்டாம், உங்கள் கட்டணத்தையே, நீதிபதிக்கு லஞ்சமாகக் கேட்டார் என்று client சொல்ல அதிகம் வாய்ப்பு உண்டு.. முடிந்தவரை உங்கள் அலுவலகம், அல்லது chamber போன்ற இடங்களையே தேர்ந்தெடுக்கவும்..தொலைபேசி வழி ஆலோசனை என்பதை  அறவே தவிர்க்கவும்.. இதையெல்லாம் செய்யாத B. குமார் போன்ற மூத்த வழக்கறிஞருக்கே இந்தக் கதி என்றால், சாமானிய சராசரி வழக்கறிஞனுக்கு ஒரு புண்ணாக்குப் பாதுகாப்பும் கிடையாது.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.. ஐயோ என்று எவனுக்கும் பாவம் பார்க்காமல், தொழிலை தொழில் ரீதியாக அணுகவும்.


எவன் எப்போ, எங்கே, எப்படி கழுத்தறுப்பான் என  அறியாமல் வம்பை விலை கொடுத்து வாங்கவேண்டாம்..என் வழக்கறிஞர் கே.எம்.முருகப்பன் கருத்தில் உண்மை உண்டு அதாவது டிடிவி தினகரன் கைதான டெல்லி வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. டிடிவி தினகரனும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை அதிமுக அம்மா அணிக்கு பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்  2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி கைதானார். அவரிடமிருந்து பெரும் தொகை பணமும் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் இன்னும் டெல்லி திகார் சிறையில் தான் இருக்கிறார்.

டிடிவி தினகரன் வேறு சில நபர்கள் மூலமாக சுகேஷ் சந்திரசேகருக்கு லஞ்சப் பணத்தை பரிமாறியதாக குற்றம் சாட்டப்பட்டது. டிடிவி தினகரன் இதே வழக்கில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, ஜூன் 1-ஆம் தேதி ஜாமீனில் விடுதலையானார். 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி 701 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை டெல்லி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

டிடிவி தினகரன் பெயர் அதிலில்லை. ஆனால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரன், அவரது நெடுநாள் நண்பர் மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்திரசேகர் மற்றும் 6 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றன.டிடிவி தினகரன் மீது குற்றச் சதி 120பி, 201 ஆதாரங்களை அழித்தல் மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பொது ஊழியரை ஊழலுக்கு பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக அப்போது டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி அவர்  மார்ச் 13 ஆம் தேதி ஆஜரானார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் செல்வி  ஜெ.ஜெயலலிதாவுக்கு ஆஜரானவரான சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.குமார் மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவர் தனக்கு முன் ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 50,000 ரூபாய் தனி நபர் ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர்களின் ஜாமீன் உத்தரவாதம் பெற்றுக்கொண்டு முன் ஜாமீனில் விடுவித்து தனி நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரிக்க அனுமதி கோரி வருமான வரித் துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் கூறவிருக்கும் தகவலைப் பொறுத்து டிடிவி தினகரனுக்கும் சிக்கல் உருவாகும் என்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்