பணி செய்யச் சென்ற இடத்தில் பழகி பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவல்துறை சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்
பணி செய்யச் சென்ற இடத்தில் பழகி பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவல்துறை சார்பு ஆய்வாளர்
பணியிடை நீக்கம்
திண்டுக்கல் மாவட்டம், கருதம்பட்டியைச் சேர்ந்தவர் சுமதி (வயது 35). கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்.
இந்த நிலையில் முகநூல் மூலம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய சார்பு ஆய்வாளர் சிவக்குமாருடன் சுமதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவக்குமார் திருமணமானவர். காரைக்குடி வள்ளுவர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து சுமதியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
தற்போது சுமதி எட்டு மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் சிவக்குமார் தன்னுடன் வாழ மறுப்பதாகவும், அவரது குடும்பத்தார் மிரட்டுவதாகவும் கூறி சுமதி நேற்று முன்தினம் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அது தொடர்பான செய்திகள் வெளியானது தொடர்ந்து சார்பு ஆய்வாளர் சிவக்குமாரை நேற்று இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள்