குவைத் நாட்டில் ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் 40 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியானதாகத் தகவல், உயிரிழந்தவர்களின் முதற்கட்ட பட்டியலை குவைத் அரசு வெளியிட்டது.
குவைத் நாட்டில் மங்காப் பகுதியில் பணியாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கரத் தீ விபத்தின் காரணமாக 53 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியானது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து பணிக்குச் சென்று சேர்ந்தவர்கள் எனும் தகவலும் வந்தது.
தீ விபத்திலிருந்து காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலில், மத்திய அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் குவைத் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறார். இறந்த நபர்கள் உடல்கள் அடையாளம் கண்டு மீட்புப் பணிக்கு தனி விமானம் செல்ல உள்ள நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
குவைத்தில் வசித்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்களின் உயிரைப் பறித்த குவைத் தீ விபத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை குவைத்துக்குச் சென்று அவர்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி குவைத் நாட்டில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் முதற்கட்ட பட்டியலை குவைத் அரசு வெளியிட்டுள்ளது.குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக 53 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வந்துள்ளது. தீ விபத்திலிருந்து காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் குவைத் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறார்.
குவைத்தில் வசித்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்களின் உயிரைப் பறித்த குவைத் தீ விபத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை குவைத்துக்குச் சென்று அவர்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஒருங்கிணைக்க அறிவுறுத்தினார். கோர தீ விபத்தில் உயிரிழந்த 21 இந்தியர்களின் பெயர்களை குவைத் அரசு வெளியிட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்து போன நிலையில் தீ விபத்தில் இறந்த 21 பேரின் பெயர் விபரங்களை குவைத் அரசு வெளியிட்டது. குவைத் அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் அடையாளம் காணப்பட்ட இறந்தவர்களின் பெயர்கள் வருமாறு:
1. ஷிபு வர்கீஸ்
2. தாமஸ் ஜோசப்
3. பிரவீன் மாதவ் சிங்
4. ஷமீர்
5. லூகோஸ் வடக்கோட் உன்னுண்ணி
6. புனாஃப் ரிச்சர்ட் ராய் ஆனந்தா
7. கேலு பொன்மலேரி
8. ஸ்டீபன் ஆபிரகாம் சாபு
9. அனில் கிரி
10. முஹம்மது ஷெரீப்
11. சஜு வர்கீஸ்
12. துவரிகேஷ் பட்நாயக்
13. முரளீதரன் பி வி
14.. விஸ்வாஸ் கிருஷ்ணன்
15. அருண் பாபு
16. சாஜன் ஜார்ஜ்
17. ரஜ்னித் குண்டடுக்கம்
18. ரெய்மண்ட் மக்பாண்டே கஹோல்
19. இயேசு ஒலிவரோஸ் லோப்ஸ்
20 ஆகாஷ் சசிதரன் நாயர்
21. டெனி பேபி கருணாகரன் , கோரத் தீ விபத்தில் உயிரிழந்த 21 இந்தியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். .
குவைத்திலுள்ள இந்தியத் தூதரகம் செய்துள்ள பதிவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்களை இழந்துள்ள அனைவருக்கும் எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.” மேலும் தமிழ்நாட்டின் சார்பில்உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்
காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.” எனவும் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் எண்களை இந்தியாவிற்குள்: +91 1800 309 3793, வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 தொடர்பு கொள்ளவும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை +965-65505246 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
கருத்துகள்