முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை உயரலாம்

மேற்கு வங்காளம்  டார்ஜிலிங் அருகே நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தால் பல பெட்டிகள் தடம்புரண்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது.


மேலும் 60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.   பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். திரிபுராவின் அகர்தலாவிலிருந்து மேற்கு வங்காளத்தில் செலடா நோக்கிச் சென்ற கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்த போது. இன்று காலை 9 மணியளவில் அதன் மீது சரக்கு ரயில் அதிவேகமாக வந்து மோதியதில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் பின் பகுதியிலிருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு உருக்குலைந்த விபத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலில் பயணித்த பயணிகள் 15 பேர் உயிரிழந்ததுடன் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இடிபாடுகளிலும் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து மேற்கு வங்காளத்தின் முதல்வர் மமதா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது 033-2350-8794 , 033-238-33326 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு ரயில் பயணிகள் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாமென ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவரது எக்ஸ் பக்கத்தில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில்

அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்தார்.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டார்ஜிலிங் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் ராய், தற்போது வரை 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 20 முதல் 25 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றார்.         


   இந்த நிலையில் விபத்து காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப் பட்டதில் ஹவுரா-நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (22301)

குவஹாத்தி- ஹவுரா சராய்காட் எக்ஸ்பிரஸ் (12346)

காமாக்யா ஆனந்த் விஹார் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் (12505)




 குவஹாத்தி-பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12510)

நியூ ஜல்பைகுரி- ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (22302)

 காமாக்யா-கயா எக்ஸ்பிரஸ் (15620)

திப்ருகர்- ஹவுரா கம்ரூப் எக்ஸ்பிரஸ் (15962)

 குவஹாத்தி-ஓக்ஹா எக்ஸ்பிரஸ் (15636)

. நியூ டின்சுகியா-தாம்பரம் எக்ஸ்பிரஸ் (15930)

 பாமன்ஹாட்-சீல்டா உத்தர் பங்கா எக்ஸ்பிரஸ் (13148)

 திப்ருகர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (22504) உள்ளிட்டவை அடங்கும்.   


மேற்கு வங்காளம் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் உறுதியளித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.



சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி, நிலைமையை கேட்டறிந்து கொண்டேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்.     



                  ”சரக்கு ரயில் இயக்கத்தில் விதிமீறல்' இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்த போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்தது. பின்னாலிருந்து சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 3-ல் இருந்து 5 பெட்டிகள் வரை சேதமடைந்தது. விபத்து நடந்தது தொடர்பாக முதற்கட்டதா தகவல்கள் வெளியாகின. ராணிபத்ரா மற்றும் ரங்கபாணி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்தது.


முன்னதாக, அதிகாலை 5.50 மணி முதல் ராணிபத்ரா ரயில் நிலையம் மற்றும் சத்தர் ஹட் சந்திப்பு இடையேயான தானியங்கி சிக்னல் பழுதடைந்த நிலையில் தான் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8:27 மணிக்கு ரங்கபாணி நிலையத்தில் இருந்து ராணிபத்ரா ரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்டது. தானியங்கி சிக்னல் பழுது காரணமாக சத்தர் ஹாட் இடையே அது நிறுத்தப்பட்டது.

வழக்கமாக தானியங்கி சிக்னலில் பழுது ஏற்பட்டால், ரயில் சிக்னலைக் கடக்க சம்பந்தப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை ரயில் ஓட்டுநருக்கு அளித்த பின்பே லோகோ பைலட்டால் ரயிலை இயக்க முடியும். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை பழுதான சிக்னலை கடக்க ராணிபத்ரா ரயில் நிலைய மேலாளர் TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்தே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8:27 மணிக்கு ரங்கபாணி நிலையத்திலிருந்து ராணிபத்ரா ரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்டது.


அதேநேரம், சரக்கு ரயிலும் ரங்கபாணி நிலையத்திலிருந்து காலை 8:42 மணிக்கு ராணிபத்ரா நோக்கி புறப்பட்டுள்ளது. ஆனால், சரக்கு ரயில் பழுதான சிக்னலைகா கடக்க TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை ஸ்டேஷன் மாஸ்டரும் கொடுக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சரக்கு ரயிலின் லோகோ பைலட் விதிகளை மீறி பழுதான சிக்னலை கடந்து சென்றதாக ரயில்வே கூறியுள்ளது. இதுவே, விபத்துக்கான காரணமாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பொதுவாக பழுதான சிக்னலில், ஒரு ரயிலுக்குப் பின் செல்லும் மற்றொரு ரயில் செல்லும்போது 10 கி.மீ வேகத்திலேயே ஒவ்வொரு சிக்னலையும் கடக்க வேண்டும். ஆனால், இந்த விபத்துக்கு முன்னதாக சரக்கு ரயில் இந்த விதிமுறையை மீறியதாக சொல்லப்படுகிறது. அதுவே விபத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. எனினும், முழுமையான விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு