முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊரையடித்து உலையில் போடும் கூட்டமே! எப்படா அப்பா ஓயும் உங்கள் ஆட்டமே.

ரூபாய்.38.85 கோடி  குத்தகை நிலுவைத் தொகையை எஸ்.ஆர்.எம்.  நட்சத்திர ஹோட்டல் இதுவரை செலுத்தவில்லை என


தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது..!              SRM ஹோட்டல், திருச்சிராப்பள்ளி & TTDC இடையில் 
அரசு நிலத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்ததில் அடுக்குமாடிக் ஹோட்டல் கட்டியது.... முதல் தவறு

சுமார் 35 கோடிக்கு மேல் வாடகைப் பாக்கி வைத்தது..... இரண்டாவது தவறு,

குத்தகை நீட்டிப்புக் கோர மாட்டோமென ஒப்பந்தத்தில் இருந்ததைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டதாகக் கூறுவது ........மூன்றாவது தவறு.                   தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான காலி நிலம் எஸ்.ஆர்.எம். நட்சத்திர ஹோட்டலுக்கு 1994- ஆம் ஆண்டி ல் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை ஒப்பந்தமானது 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரால் 30 ஆண்டுகளுக்கான குத்தகைத் தொகை ரூ.47.93 கோடி என நிர்ணயிக்கப்பட்டு அனுபந்தம், மற்றும் விரைவு நிபந்தனைகள் போடப்பட்ட நிலையில், எஸ்.ஆர்.எம். நட்சத்திர ஹோட்டல் நிறுவனம் ரூபாய்.9.08 கோடி மட்டுமே இதுவரை செலுத்தியுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.திருச்சிராப்பள்ளியில் எஸ்.ஆர்.எம் நட்சத்திர ஹோட்டல் காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இடத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்த நட்சத்திர ஹோட்டலை இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரான பச்ச முத்து உடையார் எனும் பாரிவேந்தர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார் இந்த ஹோட்டல் 30 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டது.

                          - விளம்பரம் -
ஆண்டுக்கு 75 லட்ச ரூபாய் குத்தகைப் பணம் செலுத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிற நிலையில், எஸ்ஆர்எம் ஹோட்டலுக்கு கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் ஹோட்டலுக்கு நேரில் வந்து காலி செய்யுமாறு அறிவுறுத்தியதன் பின்னர்


ஹோட்டலை நகர் காவல் துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தொடர்ந்து ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவரது கட்சியினரை உடனடியாக வெளியேறும் படி அறிவுறுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எஸ்ஆர்எம் குழுமம், தற்போது ஹோட்டலில் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளதகாவும், அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.  உடனடியாகக் ஹோட்டலை காலி செய்ய முடியாது. கால அவகாசம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மாதம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். எனினும் நேற்று வரை தான் அவகாசம் வழங்கப்பட்டது.


இந்த விவகாரத்தில் பச்சை முத்து உடையார் என்ற பாரிவேந்தருக்கு ஆதரவாக அதன் தேர்தல் கூட்டணிக் கட்சித் தலைவர்களான பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் : "திருச்சியில் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் குத்தகை அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது.

                          -விளம்பரம்-
இது தவிர்க்கப்பட வேண்டும். தமிழக அரசின் குத்தகை நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதி நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தடை விதித்தும் குத்தகைக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அதை தமிழக அரசு மூட நினைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.


அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் அமைச்சர் கே.என்.நேருவின் புதல்வரை எதிர்த்து எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் போட்டியிட்டது தான் அரசின் முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை அரசியல் பழிவாங்கும் செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பழிவாங்கும் செயல்கள் கூடாது. ஒரு புறம் சுற்றுலா வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்று பேசிக் கொண்டு, இன்னொரு புறம் சுற்றுலா வளர்ச்சிக்காக செயல்படும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூட நினைப்பது சரியான செயலல்ல.


அரசியலை அரசியலாகப் பார்க்க வேண்டும்; வணிகத்தை வணிகமாக பார்க்க வேண்டும். எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடவோ, இடிக்கவோ அரசு முயற்சி செய்யக் கூடாது. குத்தகை விதிகளுக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தொடர்ந்து நடத்த எஸ்.ஆர்.எம் நிறுவனத்தை அரசு அனுமதிக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.  இதில் பொது நீதி யாதெனில் 1984  ஆம் ஆண்டில் ஒரு காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஊவேரியில் மாதச் சம்பளம் பெற்ற கணித ஆசிரியர்  பச்சமுத்து இவர் இன்று காட்டாங்குளத்தூர் ஏரியை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து ஒரு தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் நடந்த அதேபோல் திருச்சிராப்பள்ளி அரசு இடத்தில் ஹோட்டல் நடத்தி சம்பாதிக்க அதில் விதிமுறைகள் மீறல்கள் செய்ய அரசியல் கட்சிகள் துணைக்கு வருவது அசிங்கம் என்பது உணராமல் பல தலைவர்கள் அறிக்கை விடுவது அபத்தமான செயல் குத்தகை விதிமீறல் நடந்தால் மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தைக் காலி செய்வதில் தவறேதும் இல்லை.  ஊரையடித்து உலையில் போடும் கூட்டமே! எப்படா அப்பா ஓயும் உங்கள் ஆட்டமே. இதுவே மக்கள் முன் எழும் வினாவாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு