நாகப்பட்டினம் மாவட்டத்தில் மனைவி பெயருக்குப் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தவரிடம் ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் கைது.
நாகப்பட்டினம் நகர் பெருமாள் சன்னதி கணேசனுக்கு கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூரில் சொந்தமான நிலமுள்ளது. அதை அவரது மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வி (வயது40) என்பவரை அணுகிய நிலையில் பட்டா மாறுதல் செய்ய தனக்கு ரூபாய் பத்தாயிரம் லஞ்சமாகத் தர வேண்டுமென கிராம நிர்வாக அலுவலர் செல்வி, கணேசனிடம் கேட்ட நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் அது குறித்து நாகப்பட்டினம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணேசன் கொண்டு வந்த பத்தாயிரம் பணத்தில் பினாப்தலின் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திரும்ப அரசு சாட்சி முன்பு கணேசனிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலர் செல்வியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் சென்ற கணேசன் அந்தப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் செல்வியிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் செல்வியைக் கைது செய்தார்கள்.முன்பு வருவாய்த் துறை வரிவிதிப்பு செய்ய பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகத்துக்கு மக்கள் அலைய வேண்டி நிலை இருந்தது. அதை எளிமைப்படுத்தும் வகையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பட்டா மாறுதல் பெறும் முறை 2011ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
முன்பு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் தாலுகா அலுவலகத்துக்கு மக்கள் அலைய வேண்டி நிலை இருந்து வந்தது. இதை எளிமைப்படுத்தும் வகையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பட்டா மாறுதல் பெறும் முறை 2011ல் கொண்டுவரப்பட்டது.
இந்தப் பட்டா மாறுதலில் இரண்டு வகை ஒன்று முழு புலமும் பட்டா மாறுதல், அதிலிருந்து பிரிந்து உள்ள உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு மக்கள் பாதிப்பு தவிர்க்கும் வகையில் இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டதில், உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு நில அளவைத் துறை மூலம் அளவீடு செய்து பிரிக்க வேண்டும். அதேபோல் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களின் நகலுடன் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் செல்லாமல், இனி அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்திலேயே கொடுக்க முடியும் என்ற நிலை.
அப்படி அளிக்கும் மனுக்களில் உட்பிரிவு இல்லாத இனங்களுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள்ளும், உட்பிரிவு செய்யப்பட வேண்டிய இனங்களுக்கு 30 நாட்களுக்குள்ளும் உரிய பட்டா மாறுதல் ஆணை மற்றும் கணிப்பொறி சிட்டா நகல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட வேண்டும். உட்பிரிவு செய்யப்படும் இனங்களுக்கு ஆணை பெறும் போது அதற்கு உரிய கட்டணத்தை பட்டா மாறுதல் கோருபவர்கள் செலுத்த வேண்டும். இதுதான் நடைமுறை.
உள்ள நிலையில் பல கிராம நிர்வாக அலுவலர்கள் பட்டா மாறுதல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றுக் கைதாகும் நிலை ஆங்காங்கே நடக்கிறது. நாகப்பட்டினத்தில் மனைவி பெயருக்கு பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தவரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஒரு பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்