'கிராமப்புற நிலப்பரப்புகளை மாற்றுதல்: 5ஜி நுண்ணறிவு கிராமங்களை வடிவமைத்தல்' குறித்த பயிலரங்கை தொலைத் தொடர்புத் துறை ஏற்பாடு செய்தது
கிராமப்புறங்களில் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தும் 5ஜி போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களின் உருமாறும் திறன், இன்று இங்கு நடைபெற்ற "கிராமப்புற நிலப்பரப்பை மாற்றியமைத்தல்: 5 ஜி நுண்ணறிவு கிராமங்களை வடிவமைத்தல்" என்ற பயிலரங்கின் மையமாக இருந்தது. கிராமப்புற வளர்ச்சிக்கு 5 ஜி தொழில்நுட்பத்தின் திறனைக் கொண்டு செல்லும் முயற்சிகளை முன்னெடுக்கும் தொலைத் தொடர்புத் துறையால் இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதில் அரசின் முன்னுரிமையை வலியுறுத்தி, கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்துவதற்கான இணைப்பு, டிஜிட்டல் கல்வியறிவு, நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை இந்த பயிலரங்கு காட்சிப்படுத்தியது.
தொலைத் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகள், தொழில்துறையினர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் இந்த பயிலரங்கில் பங்கேற்றனர்.
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தையும் கிராமப்புற வளர்ச்சியையும் ஒருங்கிணைப்பதை இந்த பயிலரங்கு நோக்கமாகக் கொண்டது. பாரம்பரிய கிராமப்புற நடைமுறைகளுடன் 5 ஜி போன்ற அதிநவீன கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பது கிராமப்புறங்களில் நிலையான வளர்ச்சியை வளர்ப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு பாதையாக முன்னிலைப்படுத்தப்பட்டது.
கருத்துகள்