முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்து ரகசியப் பயிற்சி அளித்தது தொடர்பாக இருவர் கைது

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்து ரகசியப் பயிற்சி அளித்தது தொடர்பாக, ஐந்து மாவட்டங்களில், பத்து இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும், 'கிலாபத்' என்ற, இஸ்லாமிய இயக்க ஆட்சியைக் கொண்டு வர, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்பு, 1953 ஆம் ஆண்டில் ஜோர்டான் நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்புக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


எனினும், இரகசியமாகச் செயல்படும் இந்த அமைப்பினர், முஸ்லீம்களில் உள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாதிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்ட சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் எஞ்சினியர் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், அவரது இளைய சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர் மே மாதமே கைது செய்யப்பட்டனர்.

இவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த, சென்னையைச் சேர்ந்த முகமது மவுரிஸ் (வயது 36), காதர் நவாஸ் ஷெரிப் (வயது 35), அகமது அலி உமரி (வயது 46), என்ற மேலும் மூவரும் கைதாகினர்.


இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு, பயிற்சி அளித்தது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்தி வந்த, என்.ஐ.ஏ. தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், தமிழ்நாட்டில் சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை என, ஐந்து மாவட்டங்களில், பத்து இடங்களில் இரண்டு நாட்களுக்கு முன்பு காலை 5:30 முதல் மாலை 7:30 மணி வரை சோதனையும் நடத்தினர்.

சென்னையில் பீர்க்கங்கரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, முடிச்சூர் மின்வாரியக் காலனியில் வசித்து வரும், கபீர் அகமது (வயது 40), வீட்டில், என்.ஐ.ஏ. டி.எஸ்.பி., குமரன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.


தஞ்சாவூரில் குழந்தையம்மாள் நகரைச் சேர்ந்த தனியார் போட்டோகிராபரான அகமது (வயது 36) வீட்டில், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் சோதனை நடந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின முன்பாக முஸ்லீம்கள் குவிந்தனர். எனினும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை பகுதியில் ஷேக் அலாவுதீன் (வயது 68), வீட்டிலும்; சாலியமங்கலத்தில் பட்டதாரியான அப்துல் ரஹ்மான் (வயது 26); மாவு மில் நடத்தி வரும் முஜிபுர் ரஹ்மான் (வயது 45), உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றது.

ஷேக் அலாவுதீன், அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் வீடுகளில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன. சிம்கார்டு, மொபைல் போன், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் என, டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி சுப்பிரமணியபுரத்தில், அவர்களது உறவினர் ஜமால் முகமதுவின் வீட்டில் பதுங்கி இருந்த, அப்துல் ரஹ்மான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்கான் என்ற அப்துல்காதர் (வயது 40). அப்பகுதியில், இரண்டாண்டுகளாக பண்ணை வீடு கட்டி வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது, இரகசியமாகப் பயிற்சியளித்ததற்கு ஆதரமான,

துண்டுப் பிரசுரங்கள், மொபைல் போன், ஹார்டு டிஸ்க் போன்றவற்றையும் கைப்பற்றினர்.

ஈரோடு எஸ்.கே.சி.சாலை பகுதியில் வசிப்பவர், முகமது ஈசாக் (வயது45); டூ - வீலர் மெக்கானிக். மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். கேரளாவிலிருந்து வந்த, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஈசாக் வீட்டில் சோதனை செய்தனர். முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், சென்னையிலுள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என அவருக்கு, 'சம்மன்' வழங்கியுள்ளனர்.

ஈரோடு செட்டிபாளையம் அசோக் நகரைச் சேர்ந்தவர் சர்புதீன் (வயது 40); போட்டோகிராபர். அண்ணன், அக்கா, அம்மாவுடன் வசிக்கிறார். கருத்து வேறுபாட்டால், குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஐந்து பேர் சோதனையில் ஈடுபட்டனர். பயங்கவாதச் செயலுக்கான புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியதால் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென, அவருக்கும், 'சம்மன்' வழங்கப்பட்டுள்ளது.

சோதனை குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு

விபரம் வருமாறு:-   'தடை செய்யப்பட்ட, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்தது தொடர்பாக, சென்னை, தஞ்சாவூர் உட்பட ஐந்து மாவட்டங்களில், பத்து இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப், சிம்கார்டுகள், மெமரி கார்டுகள், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் இயக்கம் தொடர்பான சித்தாந்த நுால்கள், கிலாப் என்ற இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்று, உறுதிமொழி எடுத்தற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன. நிதியுதவிகளும் பெற்றுள்ளனர்.

இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிறுவ, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், நீதித்துறை, சட்டம் உள்ளிட்டவைகள் தடையாக உள்ளன. இதை தகர்த்து எறிய வேண்டுமென, இரகசிய வகுப்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன. ஹிஸ்ப் உத் தஹ்ரீர் நிறுவனர், தாகி அல் தின் அல் அல் நபானி எழுதிய, இஸ்லாமிய ஆட்சி குறித்த நுால்களையும் அச்சிட்டு வினியோகம் செய்துள்ளனர்.

பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்ப்பது, அவர்களுக்கு ரகசிய வகுப்பில் பயிற்சி அளிப்பது என தீவிரமாக செயல்பட்ட, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்'. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு