முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பணம் தான் லண்டன் கல்லூரி. காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஒப்புதல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குமிடையில் உருவாகியிருக்கும்


மோதல், வெறும் வார்த்தைப்போராக மட்டும் முடிந்துவிடாதென்பதும், இருவருமே தனிப்பட்ட முறையில் கடும் கோபத்தில், பரஸ்பரம் பகை தீர்க்கத் திட்டமிட்டு வருகிறார்கள்” எனக் கூறி பதற்றத்தை அதிகரிக்கிறார்கள் அரசியல் விவரமறிந்தவர்கள்.  பணியில் சேர்ந்து,       

கடந்த, 16 ஆண்டுகள் மட்டுமே சென்னை ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியராகப் பணியிலிருந்த செல்வம் என்ற செல்வப்பெருந்தகைக்கு, இங்கிலாந்து நாட்டில் லண்டனில் கல்லுாரி வாங்கும் அளவுக்கு சொத்துகள் சேர்ந்த விதம் எப்படி வந்தது?, எங்கிருந்து வந்தது?, என்று, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு செல்வப்பெருந்தகை, 'என் மனைவி லண்டனில் கல்லுாரி வாங்கியதும் உண்மை. அங்கு டைரக்டராக இருந்ததும் உண்மை. ஆனால், அந்த டைரக்டர் பதவியை 2012 ஆம்  ஆண்டே ராஜினாமா செய்து விட்டார்.





அந்த லண்டன் கல்லுாரி வாங்க, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தான் 500 கோடி ரூபாய் கொடுத்தார்' என, வலைதளத்தில் பதிவும் செய்து விட்டார்.


தான் சிக்கிக் கொண்டால் போதாதென்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்த்துக் கோர்த்து விட்டார் பாருங்கள் அங்கே தான் நிற்கிறார் மிஸ்டர் செல்வப்பெருந்தகை !   


               அதன் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சிக்கல் எழுகிறது, கடந்த காலத்தில் 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் உதவியாளராக இருந்தபோது, செல்வப்பெருந்தகையால் முன்னாள் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு எதிராகப் பரப்பப்பட்ட வதந்திகளை அவரால் மறக்க முடியாதென்பது ஒருபுறம். அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன் போன்றோரின் எதிர்ப்பு மறுபுறம். இந்த நிலையில்  

பல கிரிமினல் பின்னணிகளுடைய நபர் என பா ஜ க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்ட செல்வப்பெருந்தகை தமது கட்சியில் இணைவது கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும்'' என்று வெளிப்படையாகவே விமர்சனம் பல தலைவர்கள் செய்த நிலையில் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜெயக்குமார். மிகுந்த பணபலத்துடன் வளையவரும் செல்வப்பெருந்தகையின் வரவால், காங்கிரஸ் கட்சியிலுள்ள பல பட்டியல் ஆதிதிராவிடர் ஜாதித் தலைவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என்பது தான் அவரைச் சேர்க்க மறுத்த பலரது பயத்துக்கும் அப்போதைய காரணமாக அமைந்தது. 



அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் எப்படி செல்வப்பெருந்தகையின் பின்னணிகள் பற்றி யோசிக்காமல் அவரைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்!  என்பது தான் பலருக்கும் அன்று புரியாத புதிராக இருந்தது.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அவர் சேர முயன்ற காலத்தில் செல்வப்பெருந்தகையைக் கட்சியில் சேர்த்துக் கொள்வதாக அறிவிக்கவில்லை.


திரிசங்குவுக்கு விஸ்வாமித்திரர் உதவியது போல, தனக்கு சிதம்பரம் உதவுவார் என்கிற நம்பிக்கையில் அப்போது வளைய வந்து கொண்டிருந்த செல்வப்பெருந்தகை! பின்னர் ப.சிதம்பரம் மூலம் கட்சியில் இணைந்து இன்று மாநிலத் தலைவராகவே ஆன நிலையில் தற்போது பழைய வரலாறு பாஜக தோண்டும் நிலையில் இனி அது தீவிரமாக மாறும் என்பதே அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இவையல்லாது  ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவுக்கு அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.. இப்போது அந்த லண்டன் நிதி முறைகேடுகள் குறித்து 


அந்தவகையில், செல்வப்பெருந்தகைக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறாராம் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை. குறிப்பாக, செல்வப்பெருந்தகை லண்டனில் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும் என்று கே.அண்ணாமலை, அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம்.


இந்த நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை, X சமூகவலைதளத்தில் நேற்று செய்துள்ள பதிவில் :-

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை வழங்கியதில், கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகள், பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எனவே, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சமூக அமைப்புகளும் இதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன.

மாணவர்கள், நெற்றியில் விபூதி, குங்குமம் தரிப்பதையும், புனிதக் கயிற்றை கையில் கட்டுவதையும் தடுப்பது என்ற இந்து மத மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் பரிந்துரையை, இந்து சமயத்தின் அடையாள அழிப்பாகத்தான் பார்க்க முடிகிறது. தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, நூலகம், அறநெறி குறித்து பாரதிய ஜனதா கட்சிக்கு என்ன தெரியுமென்று பேசியிருக்கிறார்.

நீதிபதி சந்துரு குறிப்பிட்ட எரிந்துபோன யாழ்ப்பாணம் நூலகத்தில் இந்தியப் புத்தகங்களுக்கான பிரத்யேக பகுதியை திறந்து வைத்ததும், அதற்கு 16 ஆயிரம் புத்தகங்களை வழங்கிட ஏற்பாடுகள் செய்ததும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான். டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் தி மு க அரசின் குழுவிலிருந்து கொண்டு, நூலகம், அறநெறி, கலாசாரம் குறித்தெல்லாம் சந்துரு எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம். எதிர்ப்புகள் அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கைக்குத்தான். அதற்கு பதிலளிக்க வேண்டியது தமிழ்நாடு அரசே தவிர, சந்துரு என்ற தனிநபர் அல்ல.  அரசியல் பேச வேண்டும் என்றால் சந்துரு அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். அதை விடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில், தி மு கவின் கொள்கைகளை குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...