முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய குற்றவியல் சட்டம் பெயர் மாற்றம் கேட்டு வழக்கு தாக்கல் மற்றும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் போராட்டம்

புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் சமஸ்கிருதப் பெயர்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என உத்தரவிடக் கோரி செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


9 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே ஹிந்தி  அலுவல் மொழியாக உள்ளதாகவும் சிலர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வழக்கறிஞர் இராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த மனுவில் -:

“பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதப் பெயரிடப்பட்டுள்ளது அலுவல் மொழிச் சட்டம் 1963, தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் 1956 ன் படி, அரசியலமைப்புக்கு எதிரானதென உத்தரவிட வேண்டும்.


ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் புதிய சட்டங்களுக்கு அரசு பெயரிட்டுள்ளது. நாட்டில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுள்ளன. அவற்றில் 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே ஹிந்தி அலுவல் மொழியாகும். 56.37 சதவீதம் இந்தியர்களுக்கு ஹிந்தி தாய் மொழியில்லை.


ஆகையால், அமைச்சரவைச் செயலகம், உள்துறைச் செயலகம் மற்றும் சட்டச் செயலகங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிடவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரியாத சட்டம் பயிலும் மாணவர்கள், சட்டப் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், சட்ட அலுவலர்கள், நீதித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதித் தான் இந்த மனுவைத் தாக்கல் செய்ததாக ஆதித்யன் கூறுகிறார்.

இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான எம்.எச்.ஜவாஹிருல்லா புதிய குற்றவியல் நடைமுறைச் சட்ட மாற்றங்கள் குறித்து சட்டமன்றப் பேரவையில் பேசியதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் தலைமையில் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்  எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர். என்.மாரப்பன், பொருளாளர். கே.முரளிபாபு, செயலாளர். பி.கார்த்திகேயன், மண்டலச் செயலாளர்கள எஸ்.பாலமுருகன்,  டி.பழனிச்சாமி, கே.ரமேஷ், நாமக்கல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்  ஆர்.அய்யாவு, வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர்  எஸ்.கே.ஆடம், அம்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஏ.லட்சுமி ராஜரத்தினம், விழுப்புரம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்  எம்.காளிதாஸ் ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்து, மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியமைக்காக நன்றி தெரிவித்தும், இந்தப் புதிய சட்டங்களை இரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.



புதிய 3 சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எந்த வகையில் எதிரானவை என்பது பற்றி ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் விளக்கங்கள் முன்வைத்துள்ளவர், “இந்தியாவில் நடைமுறையில் உள்ள நூற்றுக்கணக்கான சட்டங்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதான். எனவே சட்டத்தை மாற்றலாமா? என்றால் மாற்றலாம். அதில் எந்தத் தவறுமில்லை. ஆனால்,பாஜக அரசு மாற்றும் போது என்ன நடைமுறையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதை நாம் முக்கியமாகப் பார்க்கக் கவனிக்க வேண்டும். அது மிகமிக முக்கியமானது. இதைக் கொண்டுவந்துள்ள முறை ஆட்சேபனைக்குரியது.இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டு வரும்போது 143 எம்பிகளை இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அப்படி கேள்வி கேட்பதற்கு எதிர்க்கட்சிகளே இல்லாமல் இருந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி சட்டத்தை நிறைவேற்றியது ஆட்சேபனைக்குரியது.அதுவும் இது சாதாரண சட்டம் இல்லை. குற்றவியல் சட்டத்திருத்தம். அதை விவாதிக்க வேண்டாமா? அவையில் அதைப்பற்றி அலசி ஆராய வேண்டாமா? அப்படி எதையும் இந்த அரசு செய்யவே இல்லை. கிட்டத்தட்ட 80 சதவீதம் ஷரத்துகளை அப்படியே மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். மீதி உள்ள 20 சதவீத மாற்றம் என்ன மாதிரியானது? பொதுமக்களுக்கு ஆதரவான மாற்றமா? இல்லை. காவல்துறைக்குக் கட்டுக்கடங்காத அதிகாரத்தை இந்த மாற்றம் கொடுத்துள்ளது. இந்த 20 சதவீத மாற்றம் என்பது மிகப்பெரிய மாற்றமாக உள்ளது.

உதாரணமாக ஒன்று சொல்லி விளக்கலாம் என்று நினைக்கிறேன். காவல்துறை விசாரணையில் இருப்பவரைக் கேட்ட கேள்வி இல்லாமல் தண்டித்து அவரைக் கொலை செய்யும் போக்கு என்பது நம் நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. லாக் அப் டெத் பற்றி பக்கம் பக்கமாகப் பேசலாம். சாத்தான்குளத்தில் மட்டும் இதைப் போன்று நடக்கவில்லை. தினந்தோறும் நடக்கிறது.காவல்துறை விசாரணையின் போது ஒருவர் இறந்துவிட்டால், முன்பு இருந்த சட்டப்படி மாவட்ட நீதிபதி வந்து விசாரணை செய்து ஒரு அறிக்கை தருவார். இதுதான் நடைமுறை. இப்போது அது தேவை இல்லை என்று சட்டத்தைத் திருத்தியுள்ளனர். ஒரு வட்டாட்சியர் அல்லது ஆர்.டி.ஓ அறிக்கை கொடுத்தால் போதும். நீதித்துறை சுதந்திரமான அமைப்பு. ஆனால், இந்த வட்டாட்சியரும் ஆர்.டி.ஓவும் அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கம். அவர்கள் அரசுக்கு எதிராக அறிக்கை தருவார்களா?

124 A இராஜத்துரோகக் குற்றச் சட்டம் என ஒன்றுள்ளது. இதை அப்படியே தான் இப்போது நீடித்திருக்கிறார்கள். அதை நீக்கவே இல்லை. அரசை விமர்சித்தால் அது குற்றம் என்பது வெள்ளைக்காரன் போட்ட சட்டம். அதை ஏன் ஜனநாயக நாட்டில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்? முதலில் ஐபிசி சட்டம் என இருந்ததை இப்போது பிஎன்எஸ் என பெயர் மாற்றி இருக்கிறார்கள். அவ்வளவுதான்.   புதிய 3 குற்றவியல் சட்டங்கள் மூலம் காவல்துறைக்குக் கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஒருவரின் சொத்தையே முடக்கக் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆகவே இந்தச் சட்டங்கள் பாமர ஜனங்களுக்கு எதிரானது என்றும் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் கூறியிருக்கிறார்.

 புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் முதலாவது வழக்கு, மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அதிகாலை 12.10 மணிக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய 3 குற்றவியல் சட்டங்களைப் பற்றி மறுபரீசினை செய்ய வேண்டும் என்று முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு இந்த பாரதிய சக்‌ஷயா சநிதா, பாரதிய நகாரிக் சுரக்‌ஷா சநிதா, பாரதிய நியாய சநிதா 2023 ஆகிய 3 புதிய சட்டங்களும் முதலில் யூனியன் பிரதேசமான சண்டிகரில் நடைமுறைக்கு வரும் என்றும் பிறகு படிப்படியாக நாடு முழுவதும் அமல் செய்யப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், அதற்கு மாறாக இப்போது உடனடியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, அதற்கு நாடு முழுவதும் நீதித்துறை, சட்டத்துறை உள்ளிட்ட பல தரப்புகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டனப் பேரணியை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து தல்லாகுளம் தபால் நிலையம் வரை  ஈடுபட்டனர். நாகையில் வழக்கறிஞர்கள் கருப்புச் சட்டை அணிந்து 3-வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர். புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு