குதிரை பந்தய கிளப்பில் ரூபாய்.4,832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு நிலமாற்றம் செய்து தமிழ்நாடு அரசாணை பிறப்பித்தது.
சென்னையில் மிகப்பெரிய அளவிலான பசுமைப் பூங்காவை உருவாக்க உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த குதிரை பந்தயம் கிளப்பில் ஏற்கனவே மூன்று குளங்களுள்ள நிலையில், புதிதாக நான்கு குளங்களை வெட்டும் பணியை சென்னை மாநகராட்சி தற்போது துவங்கியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குதிரைப் பந்தய கிளப் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், குதிரைப் பந்தய கிளப்புக்கான குத்தகையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு, குதிரைப் பந்தய கிளப்புக்கு மூடி முத்திரை வைத்தது. 1970 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகைப் பாக்கித் தொகையாக ரூபாய்.730 கோடியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின் படி மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புப் பலகையும் குதிரைப் பந்தய கிளப்பில் வைக்கப்பட்டது.
தற்போதுள்ள மூன்று குளங்களில் 30 மில்லியன் லிட்டர் வரை தண்ணீர் சேமிக்க முடியும். புதிய குளங்கள் அமைக்கப்படுவதன் மூலமாக 100 மில்லியன் லிட்டர் வரை தண்ணீர சேமிக்கலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளங்களை வெட்டும் பணி தற்போது துவங்கியுள்ளது. வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பருவமழைக்கு தயாரிப்பு நிலையில், தற்போது முழு வீச்சில் குளங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.சென்னை கிண்டி குதிரைப் பந்தய மைதானம் 160 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குதிரைப் பந்தயம் நடத்த 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் 1945 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட குத்தகைக் காலம் எதிர் வரும் 2044 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை உள்ளது. தலைமைச் செயலகம் குளம் அமைந்த பின்னர் வரும் திட்டமா என்பது வரும் காலங்களில் தெரியும்
கருத்துகள்