முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் கௌண்டமணியை 20 ஆண்டுகளாக மோசடி செய்த கட்டுமான நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னையில் உள்ள நடிகர் கௌண்டமணி வல்லகுந்தபுரம், உடுமலைப்பேட்டை வட்டம் பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தில்  தற்போதைய திருப்பூர் மாவட்டம் பூர்வீகம்  கௌண்டமணியும் அவர் மனைவி சாந்தியும் முதலீடு செய்து அவர்கள் மகள் ரமணி பாய் பெயரில் 1996-ஆம் ஆண்டில் ஒரு நிலத்தை வாங்கி  வணிக வளாகம் கட்டுவதற்காக


அபிராமி ஃபவுண்டேஷன் எனும் கட்டுமான நிறுவனத்துடன் 2001 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்ததில் கட்டடத்தை 3 கோடியே 58 லட்சத்திற்குக் கட்டித் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் நடிகர் கௌண்டமணி பேசிய தொகையில் 50 சதவீதம் உடனடியாகக் கொடுத்துவிடவே கட்டுமான வேலைகள் தொடங்கி விடுகிறது. அப்போது நடிகர் கௌண்டமணி பிரபலமான நேரம் படப்பிடிப்பிலிருந்தார். எனவே அடிக்கடி போய் அவரால் கட்டிட வேலைகளைப் பார்க்க முடியாததால்  ஒப்பந்தம் செய்த நிறுவனம் கட்டிடப் பணிக்குப் பணம் போதவில்லை எனக் கேட்டதால் கௌண்டமணி மேலும் 25 சதம் சேர்த்து 75 சதவீதம் தொகையைக் கொடுத்து விடுகிறார்.

இருந்தும் மறுபடியும் பணங்களைக் கேட்டுத் தொந்தரவு செய்ததால், ஒருமுறை நேரில் நடைபெற்றுள்ள பணிகளைப் பார்க்கலாம் என நடிகர் கௌண்டமணி நேரில் சென்று ஆய்வு செய்த போது வேலை கால்வாசி கூட நடைபெறவில்லை என்பதைப் பார்த்ததும்  அதிர்ச்சியடைய.

கொடுத்த பணத்திற்கும் நடந்துள்ள வேலைக்கும் பொருந்திப் போகவில்லை என ஒரு புகாரைச் சொல்லவே  தகராறு எழுகிறது.  பேச்சுவார்த்தையின் முடிவில் இனிமேல் பணிகளைச் செய்யவேண்டாம். செய்தவரை போதும். வேறு ஆட்களை வைத்து முடித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்ட ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகவும் கௌண்டமணி சொல்கிறார். அதற்கு கட்டுமான நிறுவனத்தின் பிரம்மநாயகம் ஒப்பந்தம் செய்த முழுப் பணத்தைக் கொடுத்தால் தான் வெளியேறுவேன் என்கிறார். அதனால் 2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் கௌண்டமணியின்  20 ஆண்டு கால நண்பரான வழக்கறிஞர் சசிகுமார்


மூலம் வழக்கு தாக்கலான நிலையில். அதற்காக விசாரணையில் சில காலம் கழித்து கௌண்டமணிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்ததை எதிர்த்து எதிர்த்தரப்பு  சார்பில் மேல்முறையீடு 2011 ஆம் ஆண்டு செய்யப்பட்டது தொடர்ந்து நடந்த வழக்கில் 2021 ஆம் ஆண்டில் நடிகர் கௌண்டமணிக்குச் சாதகமான தீர்ப்பு வந்தது. இந்த விசாரணையின் போது கட்டுமான நிறுவனம் ரூ 61 லட்சம் கூடுதலாக வாங்கியது தெரிந்ததனால், நிலத்தையும் குறிப்பிட்ட தொகையையும் நடிகர் கௌண்டமணிக்குத் திரும்ப அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது


 அந்த உத்தரவை அமல்படுத்த காவல்துறையினர் உதவியில் நிலத்தை மீட்கச் சென்ற போது எதிர்த்தரப்பு தகராறு செய்கிறது. அதற்கு காவல்துறை ஒத்துழைப்பு இல்லை அதனால் நடிகர் கௌண்டமணி தரப்பு திரும்பி விட்டது. அதன் பின்னர் மீண்டும் இடைக்காலத் தடை பெற்றார் கட்டுமான நிறுவனத்தின் பிரம்மநாயகம். உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்குப் போனது. அங்கே சிறப்பு விடுப்பு மனுவை  2024 ஆம் ஆண்டு தாக்கல் செய்த நிலையில். விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து கவுண்டமணிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. இழப்பீடு ரூபாயை உடனடியாக அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.  இந்த நிலையில் மீண்டும் காவல்துறை உதவியுடன் நிலத்தை மீட்கவும் எதிர்த்தரப்பு இடத்திற்கு உள்ளே செல்லவும் அனுமதி மறுத்தால் அந்தத் தடையை உடைத்து சொத்தை பறிமுதல் செய்து ஒப்படைக்க அதிகாரம் வழங்கியது நீதிமன்றம். மேற்கொண்டு ஏதேனும் பிரச்சினை செய்தால், அந்தத் தரப்பைக் கைது செய்ய அதிகாரம் அளித்தது. நடிப்பு வாழ்க்கையுடன் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடத்திய நடிகர் கௌண்டமணியின் வாழ்நாளில் இது ஒரு நீண்ட சட்டப் போராட்டமாகும். இதன் மூலம் சொத்தை மீட்டதுடன் கட்டுமான நிறுவனம் கூடுதலாக வாங்கிய 60 லட்சம் ரூபாயையும் திரும்ப அளிக்க வேண்டிய நிலையில் அதற்கு இழப்பீடாக மாதம் 1 லட்சம் ரூபாய் என்ற கணக்கில் வட்டியும் வழங்க வேண்டுமென்று தீர்ப்பு.  வட்டித் தொகை 2011 ஆம் ஆண்டு முதல் தீர்ப்பு உறுதியான மாதம் வரை வழங்கப்பட வேண்டும்.

அதன் படி வட்டித் தொகை  1கோடியே 80 லட்ச ரூபாயாகும். இந்த இழப்பீட்டை கட்டுமான நிறுவனம் தரவில்லை என்றால் உரிமையாளர் பிரம்மநாயகம் சொத்துகளை ஜப்தி செய்வதற்கு முறையிடலாம். அதுவும் தீர்ப்பிலுள்ளது. அதற்கான சட்ட நடவடிக்கைகள் இனித் தொடங்க உள்ளதாக நடிகர் கௌண்டமணி இதுவரை மன உளைச்சல் அடைந்தது உண்மை அவர் பிரபலமாக இருந்தாலும் வழக்கு வழக்கில்  20 ஆண்டுகள் போராட்டம் நடத்தினார் நீதி கிடைக்குமா என இதைப் பார்க்கக் கூடாது. சட்டப்படி அந்த வழக்கு விசாரணையை வைத்தே அதன் கால வரம்பு அமையும். எதிர்த்தரப்பு இந்த வழக்கை கட்டுமான நிறுவனம் காலம் கடத்த வேண்டிச் செய்த சதியால் இவ்வளவு ஆண்டுகளானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...