முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாளை முதல் மேலிடத்து ரகசிய வில்லிலிருந்து இலக்கு நோக்கிப் பாயும் அம்பு தான் நடிகர் விஜயின் தவெக

பரமசிவன் கழுத்தில் பாம்பாக மாறிய நடிகர் விஜய் ! இனி நாளை முதல் மேலிடத்து ரகசிய வில்லில் இருந்து இலக்கு நோக்கிப் பாயும் அம்பு தான் தவெக

எனும்  தமிழக வெற்றிக் கழகம் எனும் நடிகர் விஜய் துவங்கிய கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி 

மாநாட்டுத் திடலில், ஜோன் ஆஃப் ஆர்க் வீரமங்கை இராணி வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், கர்மவீரர் கு.காமராஜர், ஈ.வே.ராமசாமி நாயக்கர் எனும் பெரியார்,  டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்  ஆகியோர் கட்டவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

50 அடி உயரக் கட்டவுட்களுக்கு மத்தியில் கைகூப்பிய நிலையில் பணிவுடன் நடிகர் விஜய் நிற்கும் கட்டவுட்டும் இடம் பெற்றுள்ளது. இது அவரது கொள்கைகளின் அடையாளமா என்பது நமக்குத்  தெரியாது,   திராவிடம் பேசும்  - ஈவே ராமசாமி பெரியார், தேசியம் பேசும் கர்மவீரர் கு.காமராஜர், 
பட்டியல் சமுதாய அரசியலுக்கு - டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் 
முக்குலோத்தோர்க்கு - வீரமங்கை இராணி வேலு நாச்சியார்,  
வன்னியருக்கு பரிச்சயம் - அஞ்சலை அம்மாள் இன்னும் சில ஜாதிகளுக்கு ஒரு தலைவர் என கட்டவுட் வைக்க யார் காரணம். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி அருகிலுள்ள முத்துப்பேட்டை தான் எஸ் ஏ சந்திரசேகரின் சொந்த ஊர் அங்கு அதிகம் மதம் மாறிய கிருஸ்தவ மீனவர் சமூகத்தினர் வாழுகின்றனர் இவரது கொள்ளுத்தாத்தா இந்த ஊரில் வாழ்ந்தவர்கள். அதன் பின்னர் சென்னை வந்து தற்போது நீலாங்கரை மீனவர்கள் வாழும் பகுதியில் வசிக்கும் நடிகர் விஜய் முத்துப்பேட்டை கிராமத்தில் முதன்முதலாக விஜய்யின் கொள்ளுத்தாத்தா சேனாதிபதி பிள்ளை (கிருஸ்தவ மதம் மாறியவர்) குடியேறியுள்ளார்.

1897ஆம் ஆண்டு பிறந்து. 1982 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது கல்லறை முத்துப்பேட்டை புனித வனத்து அந்தோணியார் தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் இருக்கிறது. நான்கு தலைமுறைகளாக இதே கிராமத்தில் தான் விஜய் குடும்பத்தினர் வசித்தனர். இயக்குனர் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்ததும் முத்துப்பேட்டை தண்ணீர் ஊற்று கிராமத்தில் தான்.  ஊர்க்காரர் என்ற பெருமை அவ்வூர் மக்களின் பேச்சிலும் உறவினர்கள் முகத்தில் தெரிகிறது.



ஆளும் திமுக அரசு பற்றியோ  இத்தனை காலம் ஆண்ட திராவிட அரசியலைப் பற்றியோ 
எதுவும் எதிர்த்து பேசாமல் 
சும்மா நாமும் மத்திய அரசுக்கு பட்டும் படாம எதிர்ப்பைக் காட்டிவிட்டு கட்சியைத் துவங்கி எந்தத் தெளிவும் இல்லாத ஒரு அரசியல்  தொடக்கம் நன்றாகவே தெரிகிறது! ஆனால் வேற வழி இல்லை! இனி நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை இதிலிருந்தே யூகிக்க முடிகிறது! தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் தானாக ஆடாது.


அவர்களுடன், சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளுக்கும் கட் அவுட் வைக்கும் பணிகள் நடக்கின்றன அதன் படி, வீரமங்கை வேலுநாச்சியார், கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட்டவுட்களை வைக்கக் காரணம் என்ன? என்பதை நாமறிவோம் 




இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்து 500 காவலர்கள் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆய்வுக்குப் பின்னர் தகவல் வெளியாகி உள்ளதன்படி




வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில், 2 டி.ஐ.ஜி., 10 காவல் கண்காணிப்பாளர்கள், 20 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 50 துணைக் கண்காணிப்பாளர்கள் 200 ஆய்வாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



மாநாட்டை நடத்த நிலம் வாடகைக்கு வழங்கிய நபருக்கு பசுவும் கன்றும் பரிசு இது எம்ஜிஆர் பார்முலா,! விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதியில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை காரணமாக மூடப்படுகிறது விழுப்புரம் மாவட்டத்திற்கு  மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   



புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், அரசியல் கட்சிக் கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தயதைத் தொடர்நது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளதற்கான தீவிர ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. மருத்துவர் அணி, தொழில்நுட்ப அணி என ஒவ்வொரு அணிகளாகப் பிரித்து வேலைகள் நடைபெறுகிறது. இந்த மாநாடு மூலம் நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார். கட்சிக்கொள்கை என்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் ஆர்வமாக உள்ளனர் அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும்


புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் புஸ்ஸி ஆனந்த் தான் நடத்தி வருகிறார். மாநாட்டுக்கான பந்தல் கால்கோள் விழா நிகழ்ச்சியில் கூட நடிகர் விஜய் பங்கேற்காமல் தளபதி 69 என்ற திரைப்படத்தின்  பூஜையில் நடிகை பூஜா ஹெக்டேவுடன் போஸ் கொடுக்கிறார் என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பார்வையும் அவரை ரகசியமாக வழிநடத்தும் நபர்களும்  வேறு விதமாக யோசிக்க விக்கிரவாண்டியில் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாட்டுக்கு  சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



சிற்றூந்து நிறுத்துவதற்கு மட்டுமே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். 800 மீட்டருக்கு ரேம்ப் வாக் எனும் நடைப் பேச்சு செய்ய மாநாட்டு மேடையிலிருந்து மாநாடு முடியும் இடம் வரைக்கும் தனியாக நீள்மேடை அமைக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் நேரு ஸ்டேடியத்தில் எப்படி ரசிகர்கள் இருக்கும் இடம் வரை சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினாரோ அதே போல மாநாட்டில் தொண்டர்களை அவர்கள் அருகிலேயே சென்று சந்தித்து பேசப் போகிறார்.


அனைத்துக்கும் தயார் நிலையிலேயே விஜயின் தவெக மாநாடு நடக்கும் என்றும் செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார். திரைப்படங்களில் நடிக்கும் போதே சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்கள் ஆரம்பித்து சொந்த காசை போட்டு படம் எடுக்க மாட்டார் என்றும் ஒவ்வொரு படத்துக்கும் கோலிவுட்டில் ஹாலிவுட் நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு இணையாக சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போகும் விஜய் காசுக்காகத்தான் கட்சி ஆரம்பித்தார் என்கிற விமர்சனங்களும் எழுகின்றன. ஆனால், அதற்காக எல்லாம் விஜய் தவெக கட்சியை ஆரம்பிக்கவில்லை. உறுதியாக மக்களுக்கு நல்லது செய்யும் முடிவுடன் தான் அவர் இறங்கியிருக்கிறார்.

தளபதி 69 படத்தை சீக்கிரமே முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக 2026 ஆம் ஆண்டு தேர்தலை விஜய் சந்திப்பார் எனவும் செய்யாறு பாலு நல்ல கூறியுள்ளார்.   இப்போது பத்திரிகையாளர் அய்யநாதன் இறக்கி விடப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அந்த இடத்தை பிடிக்க படாதபாடு படுகிறது, ஆர் எஸ் எஸ் நிர்வாகி துக்ளக் சோ உறவினர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மீது ஜாதிய பாசம் காரணமாக சசிக்கலா நடராஜனை ஜெயலலிதாவிடம் இருந்து பிரிக்க முயன்று முடியாமல் போக அதற்கு வாய்ப்பாக அவரது மரணம் அப்பல்லோவில் நடந்தது முதல்  கட்சியை பாஜக கையகப்படுத்தியது   

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவங்கினார் இது தான் அரசியல் அறிந்த பலர் கண்ட  உண்மை, அதன் பின்னரும் பாஜகவின் பக்கம் தொண்டர்கள் சாயாமல் போகவே


கடந்த உள்ளாட்சி உள்ளிட்ட மூன்று தேர்தல்களிலிலும் கடந்த ஆட்சியில் ஊழல் செய்து தங்களிடம் அடிமையான சில மூன்றாம் கட்ட தலைவர்களை இயக்கி பல பரிச்சைகள் நடத்திய போதும் அதிமுகவில் உள்ள வாக்கு வங்கியை ஐந்து கட்சியாக உடைத்தும் தங்கள் பக்கம் திருப்ப முடியாத காரணம் அதிமுகவில் உள்ள அடித்தளம்,


அதனால் தாங்கள் உடைந்த அதிமுக எனும் கண்ணாடியை சேர்த்து ஒட்டும் முயற்சி எடுத்து உடைந்த கண்ணாடி ஒட்டுவது சிரமம் என்பதை உணர்ந்து, அதன் பின்னர் பலரை களமிறங்கிய பாஜகவின் திட்டம் பலனின்றிப் போகவே கடைசி முயற்சியாக நடிகர் ரஜினிகாந்தை தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன் மூர்த்தி போன்ற பலரை வைத்து முயற்சி செய்ய





உண்மை திட்டம் அறிந்த ரஜினி நைசாக நழுவி தப்பித்தார்,இந்த நிலையில் தான் நடிகர் விஜய் வீட்டில் பல பஞ்சாயத்து அதோடு வருமான வரித்துறை சோதனை இதை பயன் படுத்த புதுச்சேரி முதல்வர் கனவில் இருந்த புஸ்ஸி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் சிக்கிய கதை


தனி அதன் மூலம் சகல பாதுகாப்பு உணர்வுடன் அதிமுகவின் வாக்குவங்கி மற்றும் மீனவர்களின் வாக்கு வங்கி வளைக்கும் நடிகர் விஜய் கட்சி என்ற கணக்கில் அவர் மதசார்பற்ற எம்ஜிஆர் பார்முலா தமிழ்நாடு திட்டம் மூலம் தமிழக வெற்றிக் கழகம் உதயமாகி முதல் மாநாட்டுக்கு வந்துள்ளது, ஒரு கிராமத்துப் பழமொழி கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்தே ஆகவேண்டும்

அதுபோல நடிகர் விஜய் சொந்த பிரச்சினை தீர்வாகி அரசியல் களமிரக்கப்பட்டுள்ளார் மற்றொரு கட்சிக்கு பினாமியாக இனி அரசியல் களம் தமிழக வெற்றிக் கழகம் எதிர் திமுக என்ற நிலையில் தொடரும் அதிமுக. ஒரே அணியில் இணைவது கடினம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு போல மாறுவதே விஜய் கட்சியை  இயக்கும் நபர்கள் வகுத்த திட்டம். எக் காலத்திலும் அதிமுகவில் உள்ள தற்போது ஊழல் செய்து சிக்கிய தலைவர்கள் நடிகர் விஜய் கட்சியை விமர்சிக்க மாட்டார்கள்.சாரி சாரி யாக இனி அதிமுகவில் உள்ள தொண்டர்கள் விஜய் கட்சியில் இணைவார்கள்

காரணம் அவர்களுக்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல் பெரியார் கொள்கை கொண்ட திமுகவை எதிர்க்கும் கொள்கை மட்டுமே அதுவே விஜய் தேர்ந்தெடுக்கப்பட்ட ரகசியம்.  இதில் எடப்பாடி கே. பழனிச்சாமியோ அல்லது ஓ.பன்னீர்செல்வமோ மக்கள் விரும்பும் கவர்ச்சித் தலைவர்கள் இல்லை. அவர்களிடம் இரட்டை இலை அதிமுக எனும் எம்ஜிஆர் துவங்கிய கட்சி இல்லை என்றால் அவர்கள் ஒன்பது ரூபாய் நோட்டு கதைதான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...