பரமசிவன் கழுத்தில் பாம்பாக மாறிய நடிகர் விஜய் ! இனி நாளை முதல் மேலிடத்து ரகசிய வில்லில் இருந்து இலக்கு நோக்கிப் பாயும் அம்பு தான் தவெக
எனும் தமிழக வெற்றிக் கழகம் எனும் நடிகர் விஜய் துவங்கிய கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் அக்டோபர் மாதம் 27-ஆம் தேதிமாநாட்டுத் திடலில், ஜோன் ஆஃப் ஆர்க் வீரமங்கை இராணி வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், கர்மவீரர் கு.காமராஜர், ஈ.வே.ராமசாமி நாயக்கர் எனும் பெரியார், டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் ஆகியோர் கட்டவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
50 அடி உயரக் கட்டவுட்களுக்கு மத்தியில் கைகூப்பிய நிலையில் பணிவுடன் நடிகர் விஜய் நிற்கும் கட்டவுட்டும் இடம் பெற்றுள்ளது. இது அவரது கொள்கைகளின் அடையாளமா என்பது நமக்குத் தெரியாது, திராவிடம் பேசும் - ஈவே ராமசாமி பெரியார், தேசியம் பேசும் கர்மவீரர் கு.காமராஜர்,1897ஆம் ஆண்டு பிறந்து. 1982 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது கல்லறை முத்துப்பேட்டை புனித வனத்து அந்தோணியார் தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் இருக்கிறது. நான்கு தலைமுறைகளாக இதே கிராமத்தில் தான் விஜய் குடும்பத்தினர் வசித்தனர். இயக்குனர் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்ததும் முத்துப்பேட்டை தண்ணீர் ஊற்று கிராமத்தில் தான். ஊர்க்காரர் என்ற பெருமை அவ்வூர் மக்களின் பேச்சிலும் உறவினர்கள் முகத்தில் தெரிகிறது.
ஆளும் திமுக அரசு பற்றியோ இத்தனை காலம் ஆண்ட திராவிட அரசியலைப் பற்றியோ
அவர்களுடன், சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளுக்கும் கட் அவுட் வைக்கும் பணிகள் நடக்கின்றன அதன் படி, வீரமங்கை வேலுநாச்சியார், கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட்டவுட்களை வைக்கக் காரணம் என்ன? என்பதை நாமறிவோம்
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்து 500 காவலர்கள் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆய்வுக்குப் பின்னர் தகவல் வெளியாகி உள்ளதன்படி
வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில், 2 டி.ஐ.ஜி., 10 காவல் கண்காணிப்பாளர்கள், 20 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 50 துணைக் கண்காணிப்பாளர்கள் 200 ஆய்வாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டை நடத்த நிலம் வாடகைக்கு வழங்கிய நபருக்கு பசுவும் கன்றும் பரிசு இது எம்ஜிஆர் பார்முலா,! விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதியில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை காரணமாக மூடப்படுகிறது விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், அரசியல் கட்சிக் கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தயதைத் தொடர்நது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளதற்கான தீவிர ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. மருத்துவர் அணி, தொழில்நுட்ப அணி என ஒவ்வொரு அணிகளாகப் பிரித்து வேலைகள் நடைபெறுகிறது. இந்த மாநாடு மூலம் நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார். கட்சிக்கொள்கை என்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் ஆர்வமாக உள்ளனர் அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும்
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் புஸ்ஸி ஆனந்த் தான் நடத்தி வருகிறார். மாநாட்டுக்கான பந்தல் கால்கோள் விழா நிகழ்ச்சியில் கூட நடிகர் விஜய் பங்கேற்காமல் தளபதி 69 என்ற திரைப்படத்தின் பூஜையில் நடிகை பூஜா ஹெக்டேவுடன் போஸ் கொடுக்கிறார் என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பார்வையும் அவரை ரகசியமாக வழிநடத்தும் நபர்களும் வேறு விதமாக யோசிக்க விக்கிரவாண்டியில் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாட்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிற்றூந்து நிறுத்துவதற்கு மட்டுமே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். 800 மீட்டருக்கு ரேம்ப் வாக் எனும் நடைப் பேச்சு செய்ய மாநாட்டு மேடையிலிருந்து மாநாடு முடியும் இடம் வரைக்கும் தனியாக நீள்மேடை அமைக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் நேரு ஸ்டேடியத்தில் எப்படி ரசிகர்கள் இருக்கும் இடம் வரை சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினாரோ அதே போல மாநாட்டில் தொண்டர்களை அவர்கள் அருகிலேயே சென்று சந்தித்து பேசப் போகிறார்.
அனைத்துக்கும் தயார் நிலையிலேயே விஜயின் தவெக மாநாடு நடக்கும் என்றும் செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார். திரைப்படங்களில் நடிக்கும் போதே சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்கள் ஆரம்பித்து சொந்த காசை போட்டு படம் எடுக்க மாட்டார் என்றும் ஒவ்வொரு படத்துக்கும் கோலிவுட்டில் ஹாலிவுட் நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு இணையாக சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போகும் விஜய் காசுக்காகத்தான் கட்சி ஆரம்பித்தார் என்கிற விமர்சனங்களும் எழுகின்றன. ஆனால், அதற்காக எல்லாம் விஜய் தவெக கட்சியை ஆரம்பிக்கவில்லை. உறுதியாக மக்களுக்கு நல்லது செய்யும் முடிவுடன் தான் அவர் இறங்கியிருக்கிறார்.
தளபதி 69 படத்தை சீக்கிரமே முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக 2026 ஆம் ஆண்டு தேர்தலை விஜய் சந்திப்பார் எனவும் செய்யாறு பாலு நல்ல கூறியுள்ளார். இப்போது பத்திரிகையாளர் அய்யநாதன் இறக்கி விடப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அந்த இடத்தை பிடிக்க படாதபாடு படுகிறது, ஆர் எஸ் எஸ் நிர்வாகி துக்ளக் சோ உறவினர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மீது ஜாதிய பாசம் காரணமாக சசிக்கலா நடராஜனை ஜெயலலிதாவிடம் இருந்து பிரிக்க முயன்று முடியாமல் போக அதற்கு வாய்ப்பாக அவரது மரணம் அப்பல்லோவில் நடந்தது முதல் கட்சியை பாஜக கையகப்படுத்தியது
ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவங்கினார் இது தான் அரசியல் அறிந்த பலர் கண்ட உண்மை, அதன் பின்னரும் பாஜகவின் பக்கம் தொண்டர்கள் சாயாமல் போகவே
கடந்த உள்ளாட்சி உள்ளிட்ட மூன்று தேர்தல்களிலிலும் கடந்த ஆட்சியில் ஊழல் செய்து தங்களிடம் அடிமையான சில மூன்றாம் கட்ட தலைவர்களை இயக்கி பல பரிச்சைகள் நடத்திய போதும் அதிமுகவில் உள்ள வாக்கு வங்கியை ஐந்து கட்சியாக உடைத்தும் தங்கள் பக்கம் திருப்ப முடியாத காரணம் அதிமுகவில் உள்ள அடித்தளம்,
அதனால் தாங்கள் உடைந்த அதிமுக எனும் கண்ணாடியை சேர்த்து ஒட்டும் முயற்சி எடுத்து உடைந்த கண்ணாடி ஒட்டுவது சிரமம் என்பதை உணர்ந்து, அதன் பின்னர் பலரை களமிறங்கிய பாஜகவின் திட்டம் பலனின்றிப் போகவே கடைசி முயற்சியாக நடிகர் ரஜினிகாந்தை தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன் மூர்த்தி போன்ற பலரை வைத்து முயற்சி செய்ய
உண்மை திட்டம் அறிந்த ரஜினி நைசாக நழுவி தப்பித்தார்,இந்த நிலையில் தான் நடிகர் விஜய் வீட்டில் பல பஞ்சாயத்து அதோடு வருமான வரித்துறை சோதனை இதை பயன் படுத்த புதுச்சேரி முதல்வர் கனவில் இருந்த புஸ்ஸி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் சிக்கிய கதை
தனி அதன் மூலம் சகல பாதுகாப்பு உணர்வுடன் அதிமுகவின் வாக்குவங்கி மற்றும் மீனவர்களின் வாக்கு வங்கி வளைக்கும் நடிகர் விஜய் கட்சி என்ற கணக்கில் அவர் மதசார்பற்ற எம்ஜிஆர் பார்முலா தமிழ்நாடு திட்டம் மூலம் தமிழக வெற்றிக் கழகம் உதயமாகி முதல் மாநாட்டுக்கு வந்துள்ளது, ஒரு கிராமத்துப் பழமொழி கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்தே ஆகவேண்டும்
அதுபோல நடிகர் விஜய் சொந்த பிரச்சினை தீர்வாகி அரசியல் களமிரக்கப்பட்டுள்ளார் மற்றொரு கட்சிக்கு பினாமியாக இனி அரசியல் களம் தமிழக வெற்றிக் கழகம் எதிர் திமுக என்ற நிலையில் தொடரும் அதிமுக. ஒரே அணியில் இணைவது கடினம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு போல மாறுவதே விஜய் கட்சியை இயக்கும் நபர்கள் வகுத்த திட்டம். எக் காலத்திலும் அதிமுகவில் உள்ள தற்போது ஊழல் செய்து சிக்கிய தலைவர்கள் நடிகர் விஜய் கட்சியை விமர்சிக்க மாட்டார்கள்.சாரி சாரி யாக இனி அதிமுகவில் உள்ள தொண்டர்கள் விஜய் கட்சியில் இணைவார்கள்
காரணம் அவர்களுக்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல் பெரியார் கொள்கை கொண்ட திமுகவை எதிர்க்கும் கொள்கை மட்டுமே அதுவே விஜய் தேர்ந்தெடுக்கப்பட்ட ரகசியம். இதில் எடப்பாடி கே. பழனிச்சாமியோ அல்லது ஓ.பன்னீர்செல்வமோ மக்கள் விரும்பும் கவர்ச்சித் தலைவர்கள் இல்லை. அவர்களிடம் இரட்டை இலை அதிமுக எனும் எம்ஜிஆர் துவங்கிய கட்சி இல்லை என்றால் அவர்கள் ஒன்பது ரூபாய் நோட்டு கதைதான்
கருத்துகள்