தமிழ்நாட்டிலுள்ள பல பகுதிகளில் வீடுகளில் திருடிக் கொள்ளை அடித்த பணத்தில் பங்களாவும், நூற்பாலையும் விலைக்கு வாங்கிய கும்பல் சிறையிலடைப்பு.
முதலில் தேனி காவல்துறை இவர்களில் இரண்டு பேரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, சுமார் ரூபாய்.49 லட்சம் மதிப்புள்ள நகைகளை தங்கக் கட்டிகளாக்கி பூமியில் புதைத்து வைத்த தையும் பறிமுதல் செய்தனர். கொள்ளையர் திருடிக் கொள்ளையடித்த பணத்தில் 4 கோடிக்கு நூற்பாலை தேனி கும்பல் சிக்கியது எப்படி?
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்த கும்பல், திருடிய பணத்தில் நான்கு கோடிக்கு நூற்பாலையை விலைக்கு வாங்கிக் கைதான அம்சராஜன் மற்றும் மூர்த்தி தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சுற்று வட்டாரப் பகுதியில் 2020 ஆம் ஆண்டு ஆட்கள் இல்லாத ஐந்து வீடுகளில் பணம், நகை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. அதே போல் 2024 ஆம் ஆண்டும் நான்கு வீடுகளில் சுமார் 88 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள், பணம் எனத் திருடப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வந்தனர். திருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமரா, கைரேகை என எதுவும் சிக்காததால் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் காலதாமதமானது. இதனால் பழனிசெட்டிபட்டி காவல்துறை ஆய்வாளர் சிவராமக்கிருஷ்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 20) மற்றும் பெரியகுளத்தைச் சேர்ந்த அம்சராஜன் (வயது 31) ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது இருவரையும் கோயம்புத்தூர் காவல்நிலையத்தில் வேறு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்திருந்த நிலையில், அவர்களுக்கு தேனியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்பு எனத் தெரிய வரவே மூர்த்தி மற்றும் அம்சராஜனை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருவரையும் காவலில் எடுத்த பழனிசெட்டிபட்டி காவல் துறை ஆய்வாளர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக மூர்த்தி, அம்சராஜன் மற்றும் இவர்களது நண்பர்கள் சுரேஷ் மற்றும் அருண்குமார் ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆட்கள் இல்லாத வீடுகளில் புகுந்தும், ஆட்கள் உள்ள வீடுகளில் அவர்களைக் கட்டி வைத்தும் நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணத்தை மூர்த்தி மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி மற்றும் அவர் கணவர் மோகன் ஆகியோரிடம் கொடுத்து வைத்துள்ளார். மேலும், திருடிய பணத்தில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு விலைக்கு வந்த பழைய நூற்பாலையை விலைக்கு வாங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், மூர்த்தி மற்றும் அவரது மனைவி திருடிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததுடன், திருட்டு பணத்தில் மனைவி அனிதா பிரியாவை சட்டம் பயின்ற வக்கீலாக்கியுள்ளார்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி, தேனி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோயில்பட்டி பகுதியில் உள்ள முட்புதர்களில் பள்ளம் தோண்டி பாலித்தீன் கவர்களால் சுற்றி பூமியில் புதைத்து வைத்துள்ளனர். அதற்கு மறுநாள் கோயம்புத்தூர் காவல்துறை வேறு ஒரு திருட்டு வழக்கில் மூர்த்தி, அம்சராஜன், சுரேஷ் மற்றும் அருண்குமாரைக் கைது செய்ததால், புதைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகளை எடுக்க முடியாமலே போனதாக காவல்துறை ஆய்வாளர் விசாரணையில் தெரிய வந்தது. அதையடுத்து தேனி வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் பூமியில் திருடர்கள் புதைத்து வைத்திருந்த 88 சவரன் 49 லட்சம் மதிப்புள்ள 6 தங்கக் கட்டிகளை மீட்டனர். தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம் என தமிழ்நாடு முழுவதும் 30 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடிய இவர்கள் மீது சுமார் 90 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருட்டு குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மூர்த்தியின் மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி மற்றும் அவரின் கணவர் மோகன் ஆகியோரை இராஜபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.
கருத்துகள்